விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல் மாலையின் மகிமை தனை காண்போம்..
முக்கண் முதல்வனாய்-மும் மூர்த்தியின் அரசனாய்- முக்கோடி தேவர்களின் தலைவனாய்- முழுமுதல் கடவுளாய் காட்சிதரும் யானைமுக கணபதிக்கு ஆனந்தம் கொடுக்கக்கூட அற்புதமான மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம்.
விரைவில் திருமணம் நடைபெற சங்கடகரசதுர்த்தி விரதம் 🙏🌹🍀👇
ஓம் எனும் பிரணவ மந்திரத்தைை நம் மனம்் எப்பொழுதும சொல்லிக்கொண்்டே இருக்க வேண்டும் . வாழ்வு தழைக்கும் . வளங்கள் நிறையும் . பனி போல துன்பங்கள் விலகிிவிடும்.
மனமெல்லாம் மகிழ்ந்திடவே ஓராயிரம் புண்ணிய பலன் அனைத்தும் நான் பெற்றேன்' எனும் மிகப்பெரிய மகிழ்ச்சி நிறைந்த நிறைவு கணபதியை இரு கைகளையும் சேர்த்து வணங்கும்போது நிச்சயம் உண்டாகும்.
அதுபோலவே விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனைக்கு உரிய பொருள் வாழ்வினிலே குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய அருகம்புல்.
அருகம்புல் மாலை விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது என்பதற்கும் மிக அழகான ஒரு தத்துவம் உண்டு.
எமனுடைய மகன்தான் அனலாசுரன்- மிகவும் ஆணவம் கொண்டு தேவர்களை துன்புறுத்துகிறான்...
அவனை அழிப்பதற்காக தன்னுடைய பூதகணங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு விநாயகப் பெருமான் சென்று போர் புரிய..
தன்னுடைய அனல் எனும் தீயினால் பூதகணங்கள் அனைவரையும் அழித்து விடுகின்றான் அனலாசுரன்.
அதனால் விநாயகர் கோபம் கொண்டு அனலாசுரனை விழுங்கிவிடுகின்றார். ஆனால் அனலாசுரனின் அனலின் வெப்பத்தை தாங்க முடியாமல் விநாயகப்பெருமான் திண்டாடுகிறார்.
கங்கை நீரை குடம் குடமாக கொண்டுவந்து அபிஷேகம் செய்தும் அனல் குறையாமல் போக -முடிவிலே..
ஒரு முனிவர் அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைக்க- விநாயகரின் எரிச்சலும் அடங்கியது .
வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த அறுகம்புல்லின் சிறப்பினை அனைவரும் அறிந்து வழிபட வேண்டும்- என்பதற்காக..
தம்மை வழிபடும் அனைவரும் அருகம்புல் மாலையை எனக்கு சாத்தி வழிபட்டால் -வெப்பமெனும் துன்பத்தை நீக்கி குளிர்ச்சியான இன்பகரமான வாழ்க்கையை கொடுத்து அருள் புரிவேன்' என அருள் புரிந்தார் என்பதே அறுகம்புல்லின் வழிபாட்டிற்கான ஐதீகமாகும்.
விநாயகர் சதுர்த்தி விரத முறைகளும் அதற்கான பலன்களும் 🌹🍀🌹👇👇
அனைவருமே சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை தனை முழுமுதல் கணபதிக்கு சாற்றி..
'ஓம்' எனும் மந்திரத்தை 108 முறை ஓதுகையில்- துன்பம் எனும் வெப்பம்தனை போக்கி குளிர்ச்சியான மகிழ்வை நமக்கு அளிப்பான் முழுமுதல் கணபதியே.
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம் 64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்.
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
ஆர்டர் செய்தால் புத்தகங்கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால் நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும். 📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐