தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது முக்கியமாக கவனத்தில் கொள்க..
தீப ஒளி என்னும் பெயரே தீபாவளி ஆகி, தீது அகன்று நம் மனது புனிதம் அடைந்து- புத்துணர்ச்சி பெற்று உற்சாகம் பிறந்து, இனிவரும் நாட்களில் இனிதாக, இல்லம் சிறப்பாக -பட்டாசு மழை பொழிந்து தீபாவளியை இனிப்புகள் கொண்டு இனிமையாக கொண்டாடுவோம்.
குழந்தைகள் குதூகலிக்கும் தீபாவளி வந்துவிட்டது -பட்டாசின் மவுசும் உயர்ந்துவிட்டது . அந்த பட்டாசு வெடிக்கும் பொழுது நாம் கவனமாக இருக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள் இதோ. .
1- பாலிஸ்டர் ஆடை அணியாது -காட்டன் ஆடைகள் அணிந்து பட்டாசு வெடியுங்கள்.
2- அனைத்து வேலைகளும் அடுத்து எனதள்ளி வைத்து கவனத்தோடு குழந்தைகளோடு சேர்ந்து நாமும் உற்சாகம் பிறக்க பட்டாசு வெடிப்பது நன்று
3 - காலில் செருப்பு அணிந்து பட்டாசு வெடியுங்கள்.
4 - ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் இரண்டும் பட்டாசு வெடிக்கும்போது பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
5 - கம்பி மத்தாப்பு சங்கு சக்கரம் மற்றவர்களின் காலுக்கு பாதிப்பு வராத வண்ணம் தண்ணீரில் போட்டு விடுங்கள். பொருட்களில் தீப்பற்றினால் மண்அள்ளி போடுவதும் நன்று .
6 - பட்டாசு வெடிக்கும் போது பட்டாசுக்கு முகம்நேராக -வைக்காமல் நேருக்கு நேராக வெடிக்காமல் பக்கவாட்டில் இருக்குமாறு பட்டாசு வெடிப்பது மிகமிக நல்லது.
7 - மருத்துவமனை- டிரான்ஸ்பார்ம் -மின் வயர்கள் இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நன்று
8- குழந்தைகள் -முதியவர்கள் நம் வீட்டு பக்கத்தில் இருந்தாலும் நம் குடும்பத்து நபர்கள் என பாவித்து பாதிக்காத வண்ணம் பட்டாசு வெடியுங்கள்.
பட்டாசு வெடிக்கும் போது மிக மிக கவனமாக பொறுப்பாக மற்றவர்களை பாதிக்காத வண்ணம் எப்படி பட்டாசு வெடிப்பது -என முன்பே குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்கும் முறையை அறிவுறுத்தி வெடிக்க வைக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு..
வெடிக்கும் போது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் மிக மிக கவனமாக பொறுப்பாக வெடித்து மற்றவர் மகிழ்ச்சியில் மகிழ்வை நாம் கொண்டு தீபாவளியை இனிதே கொண்டாடுவோம்.
இந்த வரக்கூடிய தீபாவளி அனைவரும் மகிழ்ச்சிகரமாக கொண்டாட வேண்டும். மிகவும் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் இந்த பதிவை பகிருங்கள்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copyrights at balakshitha