நம்முடைய வெற்றி நம் கையில் உண்மைதானா! ஆராய்வோம் வாருங்கள்..
உலகத்தை படைத்தவன் இறைவன். எப்படி படைக்க வேண்டும் ! உலகத்தை எப்படி படைத்தால் அழகுபெறும்! யோசித்தான் இறைவன். பஞ்சபூதங்களும் சுற்றியிருக்க நடுவினில் இறைவன் பக்கத்தில் இறைவி . பஞ்சபூதங்களும் இடம்பெற்றதால் கைலாயம் அழகு பெற்றது. அதுபோல பஞ்சபூதங்களும் சுற்றி சூழ்ந்தால் பூலோகம் அழகு பெரும் என்ன இறைவி தன் கருத்துதனை முன்மொழிய அந்த இடத்தில் மிக சிறந்த கிரியேட்டிவ் ( படைப்பு) ஆக பூலோகம் அழகு பெற்றது.
மலர்கள் தான் மலர்வதற்கு யாராவது கற்றுக் கொடுத்தோமா !
அதுபோல் நம் எண்ணங்கள் ஆக்கம் பெறுவதற்கு நாம் தான் தூரிகையாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மலர்தல், சிரித்தல் , பூரித்தல், மனம் தெளிவடைதல், உற்சாகம் , உவகை மகிழ்ச்சி , மங்கலம் , சிறப்பு என மனம் நினைக்க நினைக்க கிரியேட்டிவ் என்பது தானாக வரும்.
ஒருவன் தன் வாழ்நாளில் புகழ் நிலையை கொண்டு வருகின்றான் . அப்பொழுது சோதனைகள் வரலாம் கவலைப்படாது, தளராது , பிடித்த பிடியில் உறுதியோடு யார் ஒருவன் தன் நிலையை தக்க வைக்கின்றனோ அவனே மிகப்பெரிய கிரியேட்டர் . அவன் செய்ய கூடிய திறன் என்பதுதான் கிரியேட்டிவ்.
கற்ற அறிவு ,கேட்ட அறிவு , தன்னறிவு, சுய அறிவு, ஆத்மார்த்தமாய் எழும் அறிவு என ஐந்தும் சேர்ந்தால்தான் ஒருவன் கிரியேட்டிவ் என்கின்ற பெரிய சாதனையை செய்ய முடியும்.
தொலைக்காட்சி பார்க்கின்றோம். நாடகத்தை இயக்கியவர் கிரியேட்டர். சீரியலில் லயித்து அவள் அழுதால் நாம் அழ , அவள் கோபப் பட்டால் நாமும் கோபம் பட , அவள் சிரித்தால் நாம் மகிழ அந்த லயித்தல் என்பது சீரியலின் மிகப்பெரிய வெற்றி. இதுதான் கிரியேட்டிவ் எனும் மிகப்பெரிய சக்சஸ்.
ஒரு குடும்பம் . தலைவன்தான் கிரியேட்டர். தன் குடும்பத்தை நடத்திச் சிறப்பாக கொண்டு செல்லும் பாங்கு. படைத்தது தலைவன் . அக் குடும்பம் என்பது மிகப் பெரிய வெற்றி. இதுதான் கிரியேட்டிவ் எனும் மிகப்பெரிய சக்சஸ்.
கிரியேட்டிவ் என்பது அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருந்தால்தான் ஆக்கம் பெற்று சிறப்பு பெற முடியும்.
ஒரு கவிதை எழுதுகின்றேன் முடிக்கின்றேன் . படிக்கின்றேன். ஏதோ ஒரு குறை! அது எங்கு இருக்கின்றது.. தேடுகின்றேன் , சிந்திக்கின்றேன் என்ன சேர்த்தால் கவிதை முழுமை பெறும் ! யோசித்தும் நிறைவு பெறவில்லை .
மூடி வைத்த கவிதை இன்னும் முடிக்க முடியாமல் இருக்கின்றது. ஒரு கதை கவிதை கட்டுரை அரைமணிநேரத்தில் அழகாய் அமைவதுண்டு. சில கட்டுரை அழகாய் அமைவதற்கு 5 அல்லது 6 நாட்களும் ஆகின்றது .
ஏதோ எழுதி விட்டோம் என்று பதிவு செய்தால் அங்கே கிரியேட்டிவ் என்பது இருக்குமா! நிச்சயம் இருக்காது. படைப்பு என்பது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எப்படி கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும் . முடியும் என்ற நம்பிக்கை , அதற்கான உழைப்பு உற்சாகம் உவகை இருந்தால் மட்டுமே அவன் படைப்பதற்கான தகுதி பெறுகிறான். படைப்பாளன் ஆகின்றான் .
நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றீர்களா ! எது செய்தாலும் சிறந்த கிரியேட்டிவ் ஆக செய்யுங்கள் . அதற்கான சில வழிமுறைகள்..
சிறப்பு - 1 நான் ஒரு படைப்பாளன் எனும் தன்னம்பிக்கை.
சிறப்பு -2 செய்யும் செயல் ஆழ்ந்து நோக்குதல்
சிறப்பு - 3 அதில் மகிழ்ச்சி உவகை உந்துதல் எனும் முழுமையான ஈடுபாடு
சிறப்பு - 4 சிறப்பாய் முடிப்பேன் எனும் லட்சியம் ..முடிவு சுபமே எனும் கோட்பாடு .
சிறப்பு - 5 முடிவில் ஒருமுறை சரிபார்த்து நிறைவு காணுதல்.
இதுதான் படைப்பாளியின் திறன் இவ்வாறு அமைந்தால் கிரியேட்டிவ் என்பது சிறப்பாக அமையும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக