வெள்ளி, 21 ஜனவரி, 2022

நம்முடைய வெற்றி நம் கையில்.. உண்மைதானா!

  நம்முடைய வெற்றி நம் கையில் உண்மைதானா! ஆராய்வோம் வாருங்கள்..



உலகத்தை படைத்தவன் இறைவன். எப்படி படைக்க வேண்டும் ! உலகத்தை எப்படி படைத்தால் அழகுபெறும்! யோசித்தான் இறைவன். பஞ்சபூதங்களும் சுற்றியிருக்க நடுவினில் இறைவன் பக்கத்தில் இறைவி . பஞ்சபூதங்களும் இடம்பெற்றதால் கைலாயம் அழகு பெற்றது.‌‌ அதுபோல  பஞ்சபூதங்களும் சுற்றி சூழ்ந்தால் பூலோகம் அழகு பெரும் என்ன இறைவி தன் கருத்துதனை முன்மொழிய அந்த இடத்தில் மிக சிறந்த  கிரியேட்டிவ் ( படைப்பு) ஆக பூலோகம் அழகு பெற்றது.

மலர்கள் தான் மலர்வதற்கு யாராவது கற்றுக் கொடுத்தோமா ! 

அதுபோல் நம் எண்ணங்கள் ஆக்கம் பெறுவதற்கு நாம் தான் தூரிகையாக  நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மலர்தல், சிரித்தல் , பூரித்தல், மனம் தெளிவடைதல்,  உற்சாகம் , உவகை மகிழ்ச்சி , மங்கலம் , சிறப்பு என மனம் நினைக்க நினைக்க கிரியேட்டிவ் என்பது தானாக வரும்.


ஒருவன் தன் வாழ்நாளில் புகழ் நிலையை கொண்டு வருகின்றான் . அப்பொழுது சோதனைகள் வரலாம் கவலைப்படாது, தளராது , பிடித்த பிடியில் உறுதியோடு யார் ஒருவன் தன் நிலையை தக்க வைக்கின்றனோ அவனே மிகப்பெரிய கிரியேட்டர் . அவன் செய்ய கூடிய திறன் என்பதுதான் கிரியேட்டிவ்.


கற்ற அறிவு ,கேட்ட அறிவு , தன்னறிவு,  சுய அறிவு,  ஆத்மார்த்தமாய் எழும்  அறிவு என ஐந்தும் சேர்ந்தால்தான் ஒருவன் கிரியேட்டிவ் என்கின்ற பெரிய சாதனையை செய்ய முடியும்.

தொலைக்காட்சி பார்க்கின்றோம். நாடகத்தை  இயக்கியவர்  கிரியேட்டர். சீரியலில் லயித்து  அவள் அழுதால்  நாம் அழ , அவள் கோபப் பட்டால் நாமும் கோபம் பட , அவள் சிரித்தால்  நாம் மகிழ  அந்த லயித்தல் என்பது சீரியலின் மிகப்பெரிய வெற்றி.  இதுதான்  கிரியேட்டிவ் எனும்  மிகப்பெரிய சக்சஸ்.

ஒரு குடும்பம்  . தலைவன்தான் கிரியேட்டர்.  தன் குடும்பத்தை நடத்திச் சிறப்பாக கொண்டு செல்லும் பாங்கு. படைத்தது தலைவன் .  அக் குடும்பம் என்பது  மிகப் பெரிய வெற்றி.  இதுதான் கிரியேட்டிவ் எனும் மிகப்பெரிய சக்சஸ்.

 

கிரியேட்டிவ்  என்பது அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருந்தால்தான் ஆக்கம் பெற்று சிறப்பு பெற முடியும்.




ஒரு கவிதை எழுதுகின்றேன்‌ முடிக்கின்றேன் . படிக்கின்றேன். ஏதோ ஒரு குறை!  அது எங்கு இருக்கின்றது.. தேடுகின்றேன் , சிந்திக்கின்றேன் என்ன சேர்த்தால் கவிதை முழுமை பெறும் ! யோசித்தும் நிறைவு பெறவில்லை .

மூடி வைத்த கவிதை இன்னும் முடிக்க முடியாமல் இருக்கின்றது.  ஒரு கதை  கவிதை கட்டுரை அரைமணிநேரத்தில் அழகாய் அமைவதுண்டு.  சில கட்டுரை அழகாய் அமைவதற்கு 5 அல்லது  6 நாட்களும் ஆகின்றது .

ஏதோ எழுதி விட்டோம் என்று பதிவு செய்தால் அங்கே கிரியேட்டிவ்  என்பது இருக்குமா!  நிச்சயம் இருக்காது. படைப்பு என்பது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எப்படி கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும் . முடியும் என்ற நம்பிக்கை , அதற்கான உழைப்பு உற்சாகம் உவகை இருந்தால் மட்டுமே அவன் படைப்பதற்கான தகுதி பெறுகிறான்.  படைப்பாளன்‌ ஆகின்றான் .

நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றீர்களா ! எது செய்தாலும் சிறந்த கிரியேட்டிவ் ஆக செய்யுங்கள் . அதற்கான சில வழிமுறைகள்..

சிறப்பு - 1  நான் ஒரு படைப்பாளன் எனும் தன்னம்பிக்கை.

சிறப்பு -2 செய்யும் செயல் ஆழ்ந்து நோக்குதல்

சிறப்பு -  3  அதில்  மகிழ்ச்சி உவகை உந்துதல் எனும் முழுமையான ஈடுபாடு

சிறப்பு  - 4 சிறப்பாய் முடிப்பேன் எனும் லட்சியம் ..முடிவு சுபமே எனும் கோட்பாடு .

சிறப்பு - 5 ‌முடிவில் ஒருமுறை சரிபார்த்து நிறைவு காணுதல்.

இதுதான் படைப்பாளியின் திறன் இவ்வாறு அமைந்தால் கிரியேட்டிவ் என்பது சிறப்பாக  அமையும் .

சின்ன செயல்  காப்பி போடுதல்  முதல் பெரிய செயல்  பெரிய  நிறுவனத்தை நிர்வகிப்பது  என  அனைத்தும் சிறந்த படைப்பாக சிறந்த முறையில் கிரியேட்டிவ் ஆக செய்து முடித்துவிட்டால்  இனிது இனிது வாழ்க்கை என்றும்  இனி நன்றோ!

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக