குழந்தைகள் நல்ல அறிவாற்றலுடன் வளர்வதற்கு ஏற்ற திருக்கடையூர் சென்று வழிபாடு செய்யுங்கள்.
மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் திருக்கடவூர் எனவும் வில்வராண்ய ஷேத்திரம் எனவும் புகழ் படுகின்ற போற்றப்படுகின்ற ஒரு தலமாகும்.
வில்வராணி ஷேத்திரம் எனும் திருக்கடையூரில் அமைந்திருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் வில்வ மரத்தின் அடியில்- லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வழிபட்டால் ..
படிப்பில் கவனமின்றி இருக்கும் குழந்தைகள் -ஞான அறிவு பெற்று படிப்பிலே சிறப்பு பெற்று- வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.
அதற்கான சிறப்பான வரலாற்றை அறியலாம்..
சத்திய லோகத்தில் வாழ்பவன். மும்மூர்த்திகளில் ஒருவனாக திகழ்பவனே-மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உதித்தவன் படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவன்.
பிரம்மதேவனுக்கு நான்முகன் சதுர்முகன்- விரிஞ்சி என பல பெயர்கள் உண்டு.
கல்வி ஞானம் கொடுக்கின்ற சரஸ்வதி தேவியின் கணவனாக திகழ்பவன்.
அன்னபறவையினை வாகனமாக கொண்டவன். தாமரைப்பூவில் வீற்றியவாறு பிரம்மாஸ்திரத்தை கொண்டு அனைத்து ஜீவராசிகளையும் படைக்கின்றான்.
அப்படிப்பட்ட புகழை தாங்கி நிற்கும் பிரம்மனுக்கு ஞான உபதேசம் பெற ஆவல் பிறக்கின்றது .
ஞானஉபதேசம் வேண்டி திருக்கடையூருக்கு சென்று இறைவனை வேண்டி தவம் செய்கின்றான்
சிவபெருமானும் பிரம்மனின் தவத்தை ஏற்று -தம்முடைய சிவஞானத்தை ஒரு வில்வ விதையாகி ..
பிரம்மனிடம்.கொடுக்க -பிரம்மனும் திருக்கடையூரில் தாம் தவம் செய்த இடத்தில் -அந்த விதையை விதைக்க
அந்த விதையானது வளர்ந்து பெரிய வில்வ மரம் ஆகின்றது .
அந்த வில்வமரத்தின் அடியில் சிவபெருமான் ஒரு லிங்க வடிவில் தோன்றி -பிரம்மனுக்கு ஞான உபதேசம் வழங்குகின்றார் .
வில்வ மரத்தின் அடியில் லிங்க வடிவில் காட்சி தந்து ஞான உபதேசம் வழங்கியதால் வில்வராணி ஷேத்திரம் எனும் புண்ணிய ஷேத்திரம் ஆக திருக்கடையூர் ஆலயம் விளங்குகின்றது.
குழந்தைகளுக்கு அறிவாற்றல் பெருக புதன் கிரக வழிபாடு 🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/02/blog-post_42.html
அந்த ஆலயத்திற்கு சென்று வில்வமரத்தின் அடியில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானை வணங்கினால் ஏற்படும் சிறப்புகள்..
சிறப்பு 1 பேச்சு வராத குழந்தைகளுக்கு பேசுவதற்கான அருள் கிடைக்கும் .
சிறப்பு 2 படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றத்தை காணலாம்
சிறப்பு 3 அறிவு வளர்ச்சி இல்லாத குழந்தைகள் ஆலயத்தை வில்வ மரத்தை வலம் வந்தால்- ஞான அருள் கிடைக்கும் .
சிறப்பு 4 மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுள் கிடைத்தது இந்த திருத்தலத்தில் போன்று குழந்தைகளின் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கான அருள் கிடைக்கும்.
சிறப்பு 5 நம்முடைய
குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வரவேண்டும் -என்று நாம் எதிர்பார்க்கும் சிறப்புகள் அனைத்தும் பெறுவதற்கான அற்புதமான தலமே இந்த அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.
ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோர்கள் அமைந்து விட்டால் -அந்தக் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைகின்றது .
குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய இரு வழிகளை நாம் பின்பற்றுவது சிறப்பு..
1 - சிறுவயதுமுதலே குழந்தைகளுக்கு கல்வி ஞானம் மட்டுமன்றி- ஆன்மீக ஞானத்தையும் சேர்த்து ஊட்டி வளர்க்க வேண்டும்.
2- பாவம் எது புண்ணியம் எது?
செய்யக் கூடியது என்ன -செய்யக் கூடாதது என்ன !
எனும் பகுத்தறிவை ஊட்டி வளர்த்து விட்டால்..
அந்த குழந்தை தவறு செய்யாத ஒரு மனிதனாக -தலைச்சிறந்த ஒரு மனிதனாக- நிச்சயம் போற்றப்படுவான்
அப்படிப்பட்டஞானத்தை வழங்கக்கூடிய ஒரு அற்புத தலம் தான் -பிரம்மன் ஞான உபதேசம் பெற்ற திருக்கடையூர் ஆலயம் வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று சிவனின் அருள் தனை பெற்று குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வழி வகுப்போம்.
Copy rights at balakshitha