ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல்- 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடை திறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள் விளக்கம்..
மதநீர் சுரக்கும் வீரமுள்ள ஆண் யானைகளை வைத்து சமாளிக்கும் திறன் படைத்கவனும் , போர் கண்டு பின் வாங்காத வலிமையான தோல் படைத்தவனும் உடைய மாமன்னன் நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே!
நல்ல நறுமணம் சிந்தும் கூந்தல் பெற்றவளே ! உன் வீட்டு வாசல் கதவை திறவாயோ...
அதிகாலை பொழுதில் கோழிகள் கூவும் ஒலியோ நாற்புறமும் கேட்க, குருக்கத்திக் கொடியிலே அமர்ந்த குயில்கள் குயில்கள் பாட துவங்க, பூப்பந்தை போன்று மென்மையான விரல் படைத்தவளே! இன்னும் உறக்கம் ஏன்! உன் மணவாளன் புகழ் பாட வந்துள்ளோம் தாள் திறவாய்..
அளவுமாறா உன் அழகிய வளையல்களோ ஒலிக்க, எம் உள்ளம் மகிழ , செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறவாயோ!
என்று ஆண்டாள் திருப்பாவை பாசுரத்தில் தாயாரை வேண்டி கண்ணனை எழுப்புமாறு சொல்கின்றாள்.
அதனால் தான் பெருமாள் கோவிலுக்கு போனாளல் முதலில் தாயாரை வணங்கி அதன் பின்னரே பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பது திருப்பாவையின் சொல்லமுது. அப்படி சொன்னால் நம்முடைய காரியங்கள் ஜெயமாகும்.
பெண்கள் வானத்தில் உள்ள நட்சத்திரம் போன்றவர்கள் . அவர்களிடத்தில் ஒரு கருத்து சொன்னால் அழகாய் செய்து முடிப்பார்கள். கணவனிடத்தில் எடுத்துச் சொல்லும் பாங்கு , திறமை பெண்களிடத்தில் உண்டு என்று அழுத்தமாகவே இந்த பாசுரத்தில் சொல்கின்றாள் ஆண்டாள் .
வாழ்வின் நெளிவு சுளிவு அறிந்தவள் பெண் . எந்த நேரத்தில் எந்த சமயத்தில் சொன்னால் , காரியம் கச்சிதமாய் முடியும் என அறிந்தவள் பெண் என பெண் குலத்தை உயர்த்துகின்றாள் ஆண்டாள்.
திருமணத்தின் சிறப்பு சிந்தையில் இனிப்பதற்கு சிறுசிதறல் துளிதனை நாம் உணர்வோம்.
மேல் இருந்து தேவர்கள் வாழ்த்து சொல்ல , சொந்த பந்தங்கள் முன்னிலையில் நடக்கும் திருமணத்தில்...