தீபாவளியன்று செய்யக்கூடிய மிகமுக்கிய பாரம்பரிய பலகாரங்கள்
தீபாவளி அன்று செய்ய வேண்டிய பாரம்பரிய பலகாரங்கள் மிக எளிதாக நேரத்தோடு செய்வது எப்படி என்று காண்போம்..
அதிகமான எண்ணெய்ப் பலகாரம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்பதால் மிக மிக முக்கியமான தீபாவளியன்று செய்யக்கூடிய பாரம்பரிய மூன்று முக்கிய பலகாரங்கள் செய்து தீபாவளி இனிதாக கொண்டாடுவோம்.
1- கேசரி
2 - பக்கோடா
3 - சுயா உருண்டை
கேசரி செய்யும் முறை....
ரவை ஒரு கப் , முந்திரி பருப்பு கால் கப் உடைத்தது , நெய் முக்கால் கப் சேர்த்து பொன் வறுவலாக வறுத்து, 3 கப் தண்ணீர் , கேசரி பவுடர் சேர்த்து சுண்டியதும் அடுப்பை ஆப் செய்துவிட்டு , பிறகு 1 - 1/4 கப் சர்க்கரை ஏலப்பொடி சேர்த்தால் சுவையான நாவில் கரையக்கூடிய கோவில் கேசரி தயார்.
பக்கோடா செய்யும் முறை ...
கடலை மாவு ஒரு கப், பச்சரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன் , வெங்காயம் , பச்சை மிளகாய்(கட் செய்தது) , பூண்டு பெருஞ்சீரகம் தட்டியது , ஒரு டேபிள்ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் கருவேப்பிலை சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் அருமையான மொறுமொறுவென்று பக்கோடா தயார் .
சுயா உருண்டை செய்யும் முறை..
கடலைப்பருப்பு மிக்ஸியில் உடைத்து ஒரு கப் தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வேகவைத்து , சுண்டியதும், தேங்காய் பூ , ஏலப்பொடி , வெல்லம் சேர்த்து பூரணம் தயார் செய்து சிறிய சிறிய உருண்டைகள் பிடித்து கொள்ளவும். மைதா மாவு 2 கப் , ஒரு சிட்டிகை சோடா உப்பு, மஞ்சள் பொடி சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து 10 நிமிடம் ஊறவைத்து, பூரண உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுயா உருண்டை தயார்.
இரவு முழுவதும் கண்விழித்து செய்ய முடியாதவர்கள் முதல் நாளே பூஜை அறை வேலையை முடித்து விடுங்கள்.
விடிகாலைப் பொழுதில் எழுந்து ஒரு மணி நேரத்தில் இந்த பலகாரங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
இந்த மூன்று முக்கிய பலகாரங்களுடன் இட்லியும் வைத்து தீபாவளியன்று வைத்து படைக்க வேண்டும்.
இவை மிக முக்கியமான பாரம்பரிய பலகாரங்கள் . இதனோடு நாம் செய்யக்கூடிய அல்லது வாங்கி வைத்துள்ள ஸ்வீட் காரங்களை வைத்து தீபாவளி அன்று படைக்க வேண்டும்.
சிறகுகள் விரித்து வானில் பறந்து விளையாடி மகிழும் பறவைகள் போல...
தென்றல் காற்றில் ஆனந்தம் அளவளாவி இங்கும் சாய்ந்து விளையாடும் செடி கொடிகள் போல..
மகிழ்ச்சி பெருக்கோடு மலையினில் அலை புரண்டோடி வரும் நதிகள் போல..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியோடு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து , சொந்த பந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பலகாரங்கள் பகிர்ந்துகொண்டு தீபாவளியை மிக சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள் .
தீபாவளி அன்று முதல் நாளே செய்து வைத்து விடக்கூடிய மிக முக்கியம் விஷயங்கள்🙏🌹👇👇
https://balakshitha.blogspot.com/2021/10/blog-post_29.html
பட்டாசு வெடிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்🙏🌹🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_87.html
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha