தீபாவளியன்று முதல்நாள் மறவாது செய்யக்கூடிய விஷயங்கள்
4-11-2021 வியாழக்கிழமை ( தமிழ் மாதம் ஐப்பசி 18ஆம் தேதி ) நாம் அனைவரும் கொண்டாடக்கூடிய தீபாவளி திருநாள்.
தீபாவளி அன்று அமாவாசை (அதிகாலை 4:25 முதல் மறுநாள் 3 -51வரை)
அன்று முதல் கந்தசஷ்டி ஆரம்பம்
தீபாவளி அன்று முதல் நாள் தயார் செய்து கொள்ளக் கூடிய மிக முக்கியமான விவரங்கள் ...
1- முதல் நாள் பூஜை அறை சுத்தம் அலங்காரம் முடித்துவிடுக.( மலர்கள் மட்டும் மறுநாள் விளக்கேற்றும்போது வைக்கவும்)
2 - விடியல் பொழுதில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்வதற்கு , படைப்பதற்கான நல்லெண்ணெய் வெள்ளி அல்லது பித்தளை கிண்ணத்தில்...
மற்றும் அருகம்புல் நல்லெண்ணெயில் இடுவதற்கு தயார் செய்து கொள்ளவும்.
3 - புத்தாடைகள் மற்றும் அதனை வைப்பதற்கான மர பலகை அல்லது மனை.
4 - படைக்கும்பொழுது வெடிப்பதற்கு வெடி பட்டாசுகள்.
5 - பலகாரம் வழங்குவதற்கான பாலிதீன் கவர்கள்.
இதுதவிர பூஜைக்கு தேவையான பொருட்கள்
மஞ்சள்
நல்லெண்ணெய்
விளக்கு திரி
விபூதி
வத்தி
கற்பூரம்
வாழை இலை
வெற்றிலை பாக்கு
பழவகைகள்
வாங்கி வைப்பது , சரிபார்த்துக் கொள்ளுதல் சிறப்பு.
மிக முக்கியமாக தீபாவளி வாழ்த்துக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்டு ...
மிக மகிழ்ச்சிகரமாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.
பட்டாசு வெடிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்🙏🌹🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_87.html
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக