முகூர்த்தக்கால் (பந்தக்கால்) நடும் விழா பற்றிய முழு விளக்கங்கள்
நம்முடைய வாழ்க்கையின் அழகான ஒரு பந்தம் திருமணம். திருமணத்திற்கு முன்பாக முகூர்த்தக்கால் அதாவது பந்தக்கால் நடும் விழா என்பது முதன் முதலில் நாம் செய்யக்கூடிய ஒரு ஐதீகமான விஷயமாகும்.
அன்றைய தினத்தில் நாம் என்ன சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக காண்போம்.
திருமண பந்தம் சிறப்பாக அமைந்து தம்பதியர் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் செய்து வந்த ஐதீகமான வழக்கம்தான் இந்த முகூர்த்தக்கால் நடும் விழா என்று சொல்லக்கூடிய பந்தக்கால் விழா நிகழ்வு .
பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு சொந்த பந்தங்களோடு சென்று பந்தக்கால் நட்டு திருமண நிகழ்ச்சிகளை தொடங்குகின்ற ஒரு அருமையான சுப நிகழ்ச்சியையே முகூர்த்தக்கால் நடும் விழா என்று அழைக்கிறோம்.
திருமணத்திற்கு முன்பாக கண்டிப்பாக நாம் சொல்லக்கூடிய குலதெய்வ ஸ்லோகம்🙏🌹👇👇
திருமணத்திற்கு முன்பாக பெற்றோர்கள் முதலில் யோசிக்க வேண்டியது என்ன?
மணமகளுக்கு மணமகனை பிடித்து போக மணமகனுக்கோ மணமகளின் அம்சத்தில் முழுமையான திருப்தி பெற, இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் நடத்துதல் என்பது மிக உத்தமம்.
ஜாதகம் ஒரு சில குறையிருப்பின் அதற்கான நிவர்த்தி பரிகாரங்கள் முடித்தபின் இந்த சுப நிகழ்ச்சி நடப்பது மிக சிறப்பு .
முகூர்த்தக்கால் நடும் இந்த மங்கல நிகழ்ச்சி நாம் எதற்காக செய்கின்றோம் என்பதை முழுமையாக அறிந்து செய்தோமானால் ..
நம்முடைய ஆத்மாவின் அபரித சக்தியும் செய்கின்ற காரியத்தில் ஐக்கியமாகி..
செய்கின்ற செயல் சிறப்பாக திருமண பந்தம் முறையாக தம்பதிகள் வாழ்வு இனிமையாக அவர்களின் வாழ்வு வளமாக அமையும் என்பது திண்ணம்.
பந்தக்கால் நடும் விழா எப்பொழுது நடத்த வேண்டும்?
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நல்ல நாள் பார்த்து பந்தக்கால் நடும் விழாவினை நிகழ்த்துவது சிறப்பு.
சூழ்நிலைக்கேற்ப வசதிக்கேற்ப பத்திரிக்கை அடித்து அல்லது நேரிலோ சென்று இந்த மங்கல நிகழ்ச்சிக்கு சொந்த பந்தங்களை வரவேற்கலாம் .
(இன் முகம் ஒன்றே.இனிய நிகழ்ச்சிக்கும் இசைந்தேறும் என்பது இந்த மங்கல நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு தரும்)
பந்தக்கால் நடும் விழா அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?
திருமணத்திற்கு ஒரு வாரத்திருக்கு முன்பு நாள் பார்த்து பிரம்ம முகூர்த்த வேளையில்- (4/30மணியில் இருந்து 6மணிக்குள்) பந்தக்கால் நடும் விழா என்று சொல்லக்கூடிய முகூர்த்தக்கால் நடும் விழா நடத்த வேண்டும் .
இந்த மங்கல நிகழ்ச்சி மணமகன் வீட்டாரால் செய்யப்பட வேண்டும்.
பெண் வீட்டார் தங்கள் சொந்த பந்தங்களை தன் வீட்டிற்கு வரவழைத்து அனைவரும் தாங்கள் பெண் வீட்டார் என சேர்ந்து, மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல வேண்டும்.
பட்டுப் புடவை மஞ்சள் குங்குமத்தோடு தலையில் பூச்சூடி மங்கலகரமான சுமங்கலிகள் என பெண் வீட்டார் 9 பேர் 11 என ஒற்றைப்படை வரிசையிலே அழைத்து இந்த மங்கல நிகழ்ச்சியை செய்வது சிறப்பு .
மூங்கில் கழி என்று சொல்லக்கூடிய 2 கழிகளை முன்பே தேர்வு செய்து கொள்க.
மூங்கில் கழிகளை நாம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
திருமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை மூங்கில் போல வளர்ந்து சிறப்பாக அமைதல் வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் மூங்கில் கழியை தேர்ந்தெடுத்தனர்.
மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற பெண்வீட்டார் மூங்கில் கழிகளை தண்ணீரினால் சுத்தம் செய்து மஞ்சள் குழைத்து ஏறு முகமாக பூசி சந்தனம் குங்குமம் கீழிருந்து மேலாக வைத்தல் சிறப்பு
மலர்களோடு கூடிய மாவிலை சேர்த்து இரண்டு கழிகளிலும் மஞ்சள் பூசிய நூல் கொண்டு கட்டி காசு முடிப்போடு கூடிய வெள்ளை சரிகை துணியை மூன்று முடிச்சு என கழிகளோடு சேர்த்து கட்டி தெரு வாசலில் ஒரு கழியையும் -
வீட்டின் உள் வாசலில் ஒரு கழியையும் அரசாணை கால்களாக நடவேண்டும்.
குறிப்பு ( முதல்நாளே இந்த அரசங்கால் நடுவதற்கு தேவையாக உள் வாசலிலும் -தெரு வாசலிலும் சுவற்றை ஒட்டி செங்கற்களால் தொட்டி போல் அடுக்கி அதனுள் மண் கொட்டி வில்வ இலையும் அருகம்புல்லும் வைத்து அதன் மேலும் மண் நிறைத்து கொள்ளவும்.)
வீட்டின் உள் வாசலில் குத்து விளக்கு ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு , பழம், தேங்காய் உடைத்து சாம்பிராணி வத்தி ஏற்றிவைத்து- பிறகு இந்த மங்கல நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதே மிக உத்தமம்.
விளக்கம் - பந்தகால் நிகழ்ச்சியை நாம் முறையாக செய்யும்பொழுது மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு ருத்ரன் அனைவருக்கும் இந்த அரசாணை கால்களில் மூன்று முடிச்சு என அர்ப்பணித்து இந்த தெய்வ அம்சமான சூழ்நிலையில் அவர்களே தம்பதி சமேதராய் நேரில் வந்து திருமணம் இனிதாக நடக்க தம்பதியரை வாழ்த்துவதாக ஐதீகம்.
பாலிகைமுளை இடுதல் விழா
இந்த மங்கல நிகழ்ச்சிகள் மிக முக்கியமாக ஐந்து பஞ்ச லோகங்கள் (பவுன்-வெள்ளி-செப்பு-பவழம்- முத்து ) குண்டுமணிகள் கடையில் வாங்கி கொள்ள வேண்டும்.
நெல் , உளுந்து ,கொள்ளு , பச்சைப்பயிறு என நவதானியங்களை முதல்நாளே ஊற வைத்து கொள்ளவும்.
பந்தல்கால் நடும் அன்று பந்தக்கால் நட்டு முடித்தவுடன் நவதானியங்களும் பால் சொம்பும் வைத்து மணமகன் வீட்டாரின் சுமங்கலிப் பெண் வைத்திருக்க -
உள் வாசலிலும் -வெளி வாசலிலும் பந்தகால் நடுகின்ற அந்த மண்ணிலே பஞசலோகத்தை இட்டு ..
பந்தக்கால் நட்ட சுமங்கலி
பெண்மணிகள் நவதானியங்களை அள்ளி மண்ணிலே தூவி , சிறிது பால் ஊற்றி
குலதெய்வத்தை வேண்டி தம்பதியரை வாழ்த்துவதே இந்த பாலிகை இடுதலின் சிறப்பு.
விளக்கம்- முளைத்து வரும் தானியங்கள் போன்று -தம்பதியர் தொடங்கக் கூடிய வாழ்க்கை சிறப்பாக முத்து போன்ற நன்மக்களை ஈன்று வாழ்க்கையை இனிதே நடத்த வேண்டும் என்பதே இந்த பாலிகை இடுதல் எனும் மங்கல நிகழ்ச்சி ஆகும்.
நெல் குத்தும் நிகழ்ச்சி
ஒரு பெரிய பாத்திரத்தில் நெல் நிறைத்து -மூன்று பானைகள் மூன்று அடுப்பு -3 பல்லா- ஒரு பெரிய உரல்
2 உலக்கை -அனைத்திலும் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மலர் நிறைவாக சுற்றி உள் வாசலில் பச்சரிசிகோலம் போட்டு முதல் நாளே தயார் செய்து கொள்ளவேண்டும்.
விளக்கேற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து சாம்பிராணி ஏற்றி தேங்காய் உடைத்து -பந்தக்கால் நட்ட பின்னர் சூடம் ஏற்றி படைத்த பின்னரே இந்த நெல்குத்துதல் நிகழ்ச்சி நடைபெறும் .
பந்தக்கால் நட்ட பெண் வீட்டார் சுமங்கலி பெண்கள் இருவர் இருவராக படியினால் நெல்மணிகளை அள்ளி மூன்று பானைகளிலும் உரலிலும் நிறைத்து உலக்கையால் இருவரும் சேர்ந்து மூன்று முறை குத்துதல் சிறப்பு.
அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்தல் மிக மிக உத்தமம்
இதுபோல சுமங்கலி பெண்மணிகள் இருவர் இருவராக சேர்ந்து குத்தி தாம்பூலம் பெறவேண்டும்.
விளக்கம் - எங்கள் வீட்டு திருமகள் இந்த வீட்டு மகாலட்சுமி ஆக செல்வத்தை குவிப்பவளாக என்றும் வாழ்க்கையை சிறப்படையச் செய்வாள் என பெண்வீட்டார் ஆனந்தத்தோடு நெல் மணிகளை குத்துதல் மூலமாக தெரிவிப்பதே இந்த நெல் குத்துதல் நிகழ்ச்சி ஆகும்.
பிறகு அனைவருக்கும் விருந்து படைத்து முகூர்த்தக்கால் நிகழ்ச்சியை நிறைவு செய்தல் சிறப்பு.
குறிப்பு (இந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் குத்துகின்ற நெல் ஒரு படி அளவிற்கு எடுத்து அவித்து -நிழலில் காயவைத்து -குத்தி அந்த அரிசியை திருமணத்தன்று மணப் பொங்கல் பொங்கி வாழையிலையில் வைத்து படைக்க வேண்டும்)
திருமணத்திற்கு முன்பு தெரிந்து கொள்ள போது குலதெய்வ வழிபாடு 🙏🌹👇👇
மேலும் படிக்கலாம்..
சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
லட்சக்கணக்கில் செலவு செய்து செய்யக்கூடிய திருமணத்தில் பலருக்கும் படித்து பயன்பெறக்கூடிய மிக அருமையான இந்த புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்து வாழ்வினில் கனிந்த மகிழ்ச்சிதனை நாம் பெறலாம்.
அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds
வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at balakshitha