திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 அக்டோபர், 2021

திருமணம் கைகூடியதும் முதலில் செய்ய வேண்டிய காரியம்

 

திருமணம் கைகூடியதும் மணமக்களின்  பெற்றோர் செய்யக்கூடிய முதல் காரியம்...


திருமணம் கனிந்ததும் முதலில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய ஞாபகத்தில் வர வேண்டிய  காரியம் குலதெய்வ வழிபாடு.

குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

திருமணம் இனிதே நடந்து, குழந்தை பாக்கியம் நிலைத்து , நம்முடைய குலத்தை வாழையடி வாழையாக வளர செய்து , நம்முடைய சந்ததிகள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம்.


திருமணம் கைகூடியதும்  நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று பூஜை மஙகலப்படுத்தவும். விளக்கேற்றவும்.

ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயம்  அல்லது வெள்ளி நாணயம் என அவர்களுடைய வசதிக்கு தகுந்தவாறு  காணிக்கை...


  மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்து  குலதெய்வத்தை முழுமனதோடு வேண்டிக் கொள்ளவும் .


'திருமணம் தங்கு தடையின்றி இனிதே நடைபெற வேண்டும் ' என குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளவும்.

இதுதான் முதல் வேண்டுதல்.

அடுத்து திருமண பத்திரிக்கை அச்சடித்து முதல் பத்திரிக்கை குல தெய்வ கோவிலில்  தெய்வத்தின் பாதத்தில் வைக்கப்பட வேண்டும்.


திருமணபத்திரிக்கை  நல்ல நாளை (சுபநாள்) தேர்ந்தெடுத்து குலதெய்வ கோவிலுக்கு சென்று,  குல தெய்வத்திற்கு அபிஷேகம் ஆராதனை பொங்கல் வைத்து சிறப்பாக தெய்வத்தின் மனதை குளிர படுத்தவும்.

அந்த நேரத்தில் பத்திரிக்கையை அவள் பாதத்தில் வைக்கும்போது நம்முடைய குல தெய்வத்தின் மனம் குளிர்ச்சி பெற்று ....

மகிழ்ச்சியோடு பத்திரிக்கையை ஏற்றுக்கொண்டு வாழ்த்தி அருள்பாவிப்பாள்.

அடுத்து நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுபமாக நடக்கும்.

மேளதாளங்கள் முழங்க, பெற்றோர்களின் மனம் மகிழ, சொந்தபந்தங்கள் வாழ்த்த, தெய்வத்தின் ஆசியோடு திருமணம் சிறப்பாக நடந்தேறும் .

திருமணம் நடந்த பிறகு நல்ல நாளில்  தம்பதியரை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபடுதல் சிறப்பு.

முடிந்து வைத்த காணிக்கையை கோவில் உண்டியலில் சேர்த்து விடவும்.

நாம் வாழ்வோம் .நம் பண்பாடுகளை மலர வைப்போம் . தெய்வத்தின் பரிபூரணமான வாழ்த்து பெற்று வாழ்வினில் வளம் காண்போம்.

திருமணம் கை கூடி முகூர்த்த கால் நடும் விழா செய்வதற்கான விளக்கங்கள்🙏🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha



 


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


Copy rights at Balakshitha

செவ்வாய், 2 மார்ச், 2021

திருமணம் விரைவில் நடக்க அடிப்பிரதட்சணம் வழிபாடு

  அடிப்பிரதட்சணம் வழிபாடு



 இந்த பூமி- கடல்- காற்று- வான் அனைத்தும் தமக்குள் அடக்கமாக தாமே ஆதிபராசக்தியாக  அன்னையின் அம்சமாக- தாய்மையில் சிகரமாக நம்முடைய உள்ளத்திலே குடி கொண்டிருக்கிறாள் அன்னை அபிராமி .


அவளை வணங்கினால் எப்படிப்பட்ட தோஷங்களும் இருந்தாலும் நம்மிடமிருந்து விலகி பரிபூரணமாக அம்மன் அருள் பெற்று திருமணம் உடனே நடைபெறும் ..அதற்கான வழிபாட்டினை காண்போம்.


குழந்தையாக ஒரு வயதில் ஓரடி வைத்து ஒன்பது வயது ஓடியாடி விளையாடி- பதினெட்டு வயதில் மங்கையாக பருவம் கொண்டு திருமண வயதை ஒத்தவள் ஆகின்றாள்‌ பெண்.

அன்று தொடங்குகின்றது பெற்றோரின் கடமை .ஒரு நல்ல இடத்தில் தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆதங்கம் என  அவர்கள்  எண்ணங்கள் மேலோங்கி இருக்கும்.

திருமணம் விரைவில் நடக்க அடிப்பிரதட்சணம் வழிபாடு

 வயது அதிகமாகி திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு மிக அருமையான பரிகாரமே அடிப்பிரதட்சணம் வழிபாடு..

முற்பிறவியில் செய்த பாவமொடு  முன்னோர் செய்த பாவமும் சேர்ந்து தோஷமாக நம்முடைய ஜாதக அமைப்பில் நம் தலையெழுத்து அதாவது விதி நிர்ணயிக்கப்படுகின்றது .


பிரம்மதேவன் விதித்து விட்டால் அவ்விதியை  மாற்ற தான் முடியுமா! தவறு செய்யாது ஏன் இந்த சோதனை! பழி பாவங்கள் ..என கவலையை விடுத்து துணிந்து  நிவர்த்திக்கான வழி தேடலை கண்டுபிடித்து வாழ்வினில் சிறப்பு பெற வேண்டும்.

நாக புற்றுகள்- நாக மூர்த்திகள் இருக்கும் அம்மன் ஆலயம்  அருகில் இருந்தால் அந்த கோவிலுக்கு செல்லவும் . நல்ல நாள் பார்த்து விரதத்தை ஆரம்பிக்கலாம். 


வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதி நாட்களில் ஒரு நல்ல நாளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்  அந்த அம்மன்  கோவிலுக்கு -மணம் ஆகவேண்டிய மகளை  அழைத்துச்சென்று -5 அகல் தீபம் ஏற்றி வைத்து தெய்வத்தை வேண்டி அடிப்பிரதட்சணம் செய்யலாம்.



புற்றுக்கு  பால் ஊற்றி நாக அம்மனை திருமணம் தடைபடாது விரைவில் நடக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளவும்.


ஒவ்வொரு அடியாக அடிப்பிரதட்சணம் செய்கின்ற போதும் மனம் தெய்வத்தோடு ஒன்றி திருமணம் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு -கோவிலை சுற்றி வந்தால் எடுத்து வைக்கும் அந்த அதிர்வலைகளின் சக்தியில் தெய்வத்தின் மனம் கனிந்து- திருமண ஆசிகளை வழங்கி அருள் புரிவாள் என்பது ஐதீகம்.


தொடர்ந்து வெள்ளிக்கிழமை  ஒன்பது வாரங்களும் 5 சுமங்கலி பெண்களுக்கு நம்மால் முடிந்த வெத்திலை பாக்கு மஞ்சள் -குங்குமம் என தாம்பூலம் வைத்து கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் ஜாக்கெட் பிட் சேர்த்து வழங்கலாம்.


தொடர்ந்து ஒன்பது வாரங்கள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டால்

மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாகி விரைவில் திருமணம் நடக்கும்.

திருமணம் கனிந்து -திகட்டாத வாழ்வு பெற்று -சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் வாழ்வினில் இனிமை பெற்று- செல்வங்கள் பல பெற்று மனமொத்த தம்பதியராக பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழிய வாழ்யவே.

முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html


திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

Copy rights at Balakshitha




செவ்வாய், 30 ஜூன், 2020

இனிது இனிது வாழ்க்கை இனிதுதன்றோ part-7




இல்லறத்தில் இனிமை காண்க


கணவனே கேளாயோ !கண்ணுக்கினிய மனைவி தனை இமைபோல் காப்பதற்கு இவ்வழி பின் செல்க..


மலரினுள் உள்ள வாசம் போல் -ஒரு பெண்ணின் உள்ளுணர்வை கணவன் அறிந்து கொண்டால் மட்டுமே..

அந்த குடும்பம் சுபிட்சம் பெற்று- வாழ்க்கை வளம் பெற்று- பழம் கிடைத்து கனியபெற்று- புண்ணியத்தை அடைந்து மோட்சம் கிடைக்கும். என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும் -

என உறுதி  கொண்டு  திருமண பந்தத்தில் இனிதே தொடங்குக- தொடங்குக தொடங்கி வாழ்ந்து வளர்ந்து பயன் பெருக- பலன் பெருக- முக்தி கிடைக்க வழி தேடுக- தேடுக மனமே-நின் கருத்துதனை உள்வாங்கி ..

பெண் இனிய மனைவி எனும் நல்லாள் அமையப்பெற்று -அமைதி கினிய வாழ்வுதனை நீ பெற்று - வாழ்க வாழ்க வளம் பெருக- வாழிய வாழியவே. வாழியவே என வாழ்ந்து விட்டால் ..

இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ!



உமையவளே கேளாயோ கணவன் எனும் மணவாளன் மனமொத்து வாழ்வதற்கு இவ்வழி பின் செல்க..

இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ part-6 🍀🌹🍀🌹🌹🌹👇👇👇👇

http://balakshitha.blogspot.com/2019/11/part-6.html


கணவன் மனம் கல்லாயினும் கருங்கல்லை உளிதனில் செதுக்குகின்ற  உளியாக நீ இருந்து வடிவமைக்க  .

அழகான சிற்பம் போன்ற வாழ்வுதனை நீ பெறுவாய்.. பெற்ற வாழ்வு தனில் இனிது கண்டு இன்பமெனும் மழலைகள் பல பெற்று மங்கள வாழ்வு நீ பெற்று

 -சிறப்பு என்றும் கனிய பெற்று- சிந்தை குளிர வாழ்வு பெற்று- தமிழ்ப்பண்பு தகிக்க பெற்று -பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே என்று வாழ்ந்து விட்டால்.. வாழ்க்கை என்றும் இனிய தன்றோ!

சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து  10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

 இல்லறத்தில் இனிமை காணும் தம்பதியரே நீ கேளாய்!


தேனூறும் ஐஞ்சுவை பழத்தில் கிடைக்கும் சுவை போல -அன்பு பண்பு கனிவு கோபம் தாபம் எனும் அனைத்திலும் கலந்து சுவை அனைத்தும் நீ பெற்று-

தேனூறும் வாழ்க்கையிலே அனுபவ பாடத்தில் பயிற்சி பெற்று -மழலைகள் தோள் சாயும் மகிழ்ச்சி பெற்று- தோரணங்கள் தொங்கும் சுபநிகழ்ச்சிகள் பல பெற்று ..


செல்வங்கள் குவியும் சீரும் சிறப்பும் நீர் பெற்று வாழிய வாழிய வாழியவே. வாழ்வினிலே இனிது  காண்கிடவே.

Copy rights at balakshitha

வெள்ளி, 26 ஜூன், 2020

திருமணம் விரைவில் நடந்தேற - மாயவரம் திருமணஞ்சேரி திருக்கோயில்





திருமணம் விரைவில் நடக்க மாயவரம் திருமணஞ்சேரி திருக்கோவில்

 தேனூறும் ஐஞ்சவை  பழத்தினில் கிடைக்கும் சுவை போல - அன்பு பண்பு -பாசம் -கனிவு- கோபம்- தாபம் அனைத்திலும் கலந்து பசுமை அனைத்தும் பெற்று- வாழ்க்கை எனும் அனுபவ பாடத்தில்  பயிற்சி பெற்று மழலைகள் தோள் சாயும் மகிழ்ச்சி பெற்று- தோரணங்கள் தொங்கும் சுப நிகழ்ச்சிகள் பல பெற்று- செல்வங்கள் அள்ளி குவியும் சீரும் சிறப்பும் இனிதே பெற்று வாழ்வதற்கு..

 இளமை பருவத்தில் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்  மட்டுமே இத்தனை சிறப்புகளையும் பெற்று வாழ்க்கை இனிதாகும..

அந்த திருமணம்  விரைவில் நடப்பதற்கு நாம்  செல்லக்கூடிய வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்..


தோஷங்கள் விலகி திருமணம் நடக்க நாம் செல்லக்கூடிய மிக அற்புதமான ஒரு திருத்தலம் ..

 மாயவரத்தில் திருமணஞ்சேரி ..அங்கு கல்யாண சுந்தரர் மிக அழகாக எழுந்தருளி காட்சி தருகின்றார்.

நம்முடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப்போகும். தேவ தோஷம் -சர்ப்ப தோஷம்- அபிஷார தோஷம்-  பித்ரு தோஷம்- திருஷ்டி தோஷம் -பிரேத சாபம் என முன்ஜென்ம பாவ வினைக்கு ஏற்றவாறு கொண்ட நம்முடைய ஜாதக அமைப்பில் ஆறு வகையான தோஷங்களில் - ஏதாவது ஒரு தோஷம் இருந்தால் கூட திருமணம் தள்ளிப்போகும் வாய்ப்புண்டு..


எப்படிப்பட்ட தோஷங்கள் இருப்பின் திருமணஞ்சேரி கோவிலுக்கு ஒரு முறை சென்று முறைப்படி பரிகாரத்தை  செய்துவிட்டு வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் திருமணம் நிச்சயம் கைகூடும்.


நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சென்று -அங்கே குறிப்பிட்ட பூஜை சாமான்களை பெற்று - ஐந்து நெய்தீபம் ஏற்றி பரிகாரத்தை முடித்து அந்த திருத்தலத்தில் கொடுக்கும் மாலை -விபூதி மஞ்சள் குங்குமம் எலுமிச்சை பழம் வாங்கிக் கொண்டு வரவும் .

திருமணம் விரைவில் நடந்தேற வீட்டிலேயே மரப்பாச்சி பொம்மை வழிபாடு 🌹🍀🌹🙏🙏👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

திருமணம் விரைவில் நடந்தேற ஆலங்குடி குருபகவான்
 கோவில்🙏🙏🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_4.html

மறுநாள் திருமணத்திற்காக வேண்டுகின்ற மகனோ மகளோ கங்காஸ்நானம் (ஓம் என நீரிலே எழுதி  கங்கா நீராக நினைத்து) நீராடி திருத்தலத்தில் இருந்து கொண்டு வந்த எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி நினைத்த காரியம் ஜெயம் ஆக வேண்டி -கொண்டுவந்த மாலையை தன் கழுத்திலே அணிந்து -மஞ்சள் குங்குமம் விபூதியை நெற்றியில் நிறைத்து - எலுமிச்சைபழத்தை பிழிந்து குடிக்கவும் .

விரைவில் திருமணம் நடப்பதற்கு சங்கடஹர சதுர்த்தி விரதம்🙏🌹👇👇


பிறகு மாலைகளை ஒரு கவரில் சுற்றி துணிப்பையில் முடிந்து பத்திரமாக வைக்க வேண்டும். திருமணம் இனிதே முடிந்த பிறகு தம்பதி சமேதராய் திருமணஞ்சேரி சென்று அந்த ஆலயத்தில் சேர்த்து பரிகாரத்தை நிறைவு செய்யவும் .


தம்பதி சமேதரராய் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு இனிதே வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைகவே.

புத்தம் புதிதாய் பூத்த மலர் போல இனிப்பில் சிறந்த பழுத்த பழம் போல கனிவான சொல்லில் கட்டுப்பட்டு மயங்கும் மனம் போல -மங்கல இசை ஒளியான நாதம் போல - என்றென்றும் சிறப்பாய் தம்பதியர் வாழ்க்கையில் இனிமை கண்டு வாழிய வாழிய வாழியவே.

Copy rights at balakshitha

வியாழன், 4 ஜூன், 2020

திருமணம் நடக்க ஆலங்குடி குரு பகவான் கோவில்

திருமணம் விரைவில் கைகூட ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்வது நல்ல பலன் கிடைக்கும்.


ஒரு மலர் நன்றாக பூத்து மலர்ந்து  இருக்கும்போது- உரிய இடத்தில் சென்று சேர வேண்டும். அதுபோன்றுதான் இளமை என்பதும்.. மலருக்கு இணையானதே .

 நம்முடைய வாழ்க்கை என்னும் பயணத்தில் இளமையிலேயே திருமணம் எனும் அழகிய வட்டத்தில்   திருமணபந்தத்தில் இணைந்திட வேண்டும்.


 மலர் வாடிய பிறகோ  அல்லது இளமை வயது கடந்த பிறகோ உரிய  இடத்தில் சென்று சேர்வது என்பது பயனற்ற செயலுக்கு வித்தாகும்- என்பதை உணர்ந்து..

 பெண்ணுக்கு 20 வயதும் ஆணுக்கு 25 வயதும் நடக்கும்போதே வருடத்திற்கு முன்பாகவே திருமணத்திற்கு நிச்சயம் ஏற்பாட்டுக்கு  ஆயத்தமாவது அவசியம் .



 ஜாதக அமைப்பில் தோஷம் திருமணத்தடை -திருமணம் தள்ளிப் போவது கீழே  குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கோவில் சுற்றும் பரிகாரங்களை மேற்கொள்ளலாம

திருமணம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி விரைவில் கை கூட - ஆலங்குடியில் அமைந்துள்ள சுயம்பு வடிவில் காட்சித் தரும் ஆபத்காயேஸ்வரர்  திருக்கோவில் திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வரலாம். அங்கே குருபகவான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகின்றார்.

குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டாகும்.  .நல்ல அறிவாற்றல் அழகு -ஆயுள்- ஆரோக்கியம் அனைத்தும் கூடிய ஒரு வரனை அருள்கின்ற சக்தி குருபகவானுக்கு உண்டு. 16 செல்வங்களும் பெற்று வாழ்க்கையில் சிறப்புமிக்க ஒரு வாழ்க்கையை அருள்கின்ற சக்தி குரு பகவானுக்கு உண்டு.

திருமணம் விரைவில் கை கூட சங்கடகர சதுர்த்தி விரதம் 🙏🌹🌹🍀🌹👇👇👇👇


 குருபகவானின் பார்வை ஒரு ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே- அந்த ஜாதகம் சிறப்பான முறையில் திருமணம் கைகூடும்.  சாத்வீக குணம் குணம் கொண்டவர் குரு பகவான்.இனிப்பு என்றால் கொள்ளை பிரியம்கொண்டவர்.
கொண்டைகடலை தானியத்தை கண்டால் மகிழ்ந்து ஆசிகளை அள்ளி வழங்கும் குருபகவானுக்கு  திருமணத்திற்கு தடையை ஏற்படுத்தும் களத்திர தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி உண்டு.

 நல்ல உயரம் உயரத்திற்கேற்ற அழகோடு மிக பொலிவோடு திகழும் குரு பகவானின் பார்வை ஜாதகத்தில் பார்ப்பதற்கு- நாம் செய்யக்கூடிய பரிகாரத்தை காண்போம்.

திருமணம் விரைவில் நடப்பதற்கு வீட்டில் இருந்தவாறே மரப்பாச்சி பொம்மை வழிபாடு👩‍🦰👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

திருமணம் விரைவில் பிரம்ம முகூர்த்த வழிபாடு 🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/05/blog-post_29.html

 ஆலங்குடியில்  குருபகவான் தட்சிணாமூர்த்தியாக  அற்புத கோலத்தில்  காட்சி தருகின்றார்.


அன்பு எனும் பந்தம் புரிவதற்கு ஆனந்தம் என்னும் பெருவாழ்வு வாழ்ந்து- வாழ்க்கையை இனிது காண வருகை புரிந்து எமை மணம் முடிப்பாய் ஈசனே'  என அம்பிகை தவம் இருந்து பெருமானை கரம்பிடித்த அற்புதமான தலம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.



 வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்கு ஏற்ற நாள் ..அந்த கிழமையில் நல்ல நாள் பார்த்து அன்றைய தினத்திலே அந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபடலாம். கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சாவூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர்  மாவட்டத்தில் அமைந்துள்ளது -ஆலங்குடி .


திருமணம் இனிதே கைகூடி நடந்த
பிறகு தம்பதி சமேதராக திருத்தலத்திற்கு சென்று தட்சிணாமூர்த்திக்கு புதிய வஸ்திரம் சாற்றி வழிபட்டு பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஆலகால விஷத்தையே தாம் குடித்து தேவர்கள் அனைவரையும் காத்த தலம் என்பதால் ஆலங்குடி என பெயர் பெற்ற- எம்பெருமான் ஈசனின் திருத்தலமாகிய ஆலங்குடிக்கு சென்று தோஷங்கள் அனைத்தும் நீங்கி  சிறப்பாக திருமணம் நடைபெற்று வாழ்க்கையில் இனிது காண்க.

Copy rights at balakshitha




திங்கள், 1 ஜூன், 2020

திருமணம் நடக்க மரப்பாச்சி பொம்மை வழிபாடு



மரப்பாச்சி பொம்மை வழிபாடு திருமணம் ஆகாது ஒரு மகனோ மகளோ இருந்தால் அந்த வீட்டிலே கீழ்காணும் முறைப்படி மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.

விரைவில் திருமணம் கைகட சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇👇👇👇




 திருமணம் ஆகாது ஏதாவது ஒருவிதத்தில் திருமணம் தடைபடும் சமயத்தில் மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.  சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளுக்கு தெய்வீக சக்தி அதிகம் . அந்த பொம்மைகளுக்கு உயிர் உண்டு .அந்த பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்தால்  உடனே திருமணம் நிச்சயம் ஆகும்.

திருமணம் விரைவில் நடக்க ஆலங்குடி குரு பகவான் கோவில் பரிகாரம்🌺🍀👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_4.html

திருமணம் விரைவில் நடக்க பிரம்ம முகூர்த்த வழிபாடு 🌹🙏🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/05/blog-post_29.html

ஒரு திருமணத்தில் எப்படி  முறைப்படி திருமணம் நடக்கின்றதோ அதுபோலவே மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் நடத்த வேண்டும். ஆண் -பெண் என மரப்பாச்சி பொம்மைகள் கடைகளில் கிடைக்கும் . வாங்கிவந்து திருமணத்திற்கான மாதங்கள் சித்திரை- வைகாசி- ஆனி- ஆவணி கார்த்திகை- தை என  ஏதாவது ஒரு மாதத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

 அந்த மாதத்தில் நல்ல நாள் பார்த்து அந்த நாளிலே திருமணத்தை நடத்த வேண்டும். நம் குடும்பத்தில்  முக்கிய உறவினர்கள்  என ஒன்பது பேர் சேர்ந்து இந்த திருமணத்தை நடத்தலாம் .மிக அழகாக மரப்பாச்சி பொம்மைகளை மணமகன் மணமகள் ஆக அலங்கரித்து- வரிசைத் தட்டுக்கள் புடைசூழ மங்கல நிகழ்ச்சியாக இந்த திருமணத்தை நடத்த வேண்டும்.


 மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்து அனைவரும் ஆசியோடும் மரப்பாச்சி பொம்மையான மணமகன் -மரப்பாச்சி பொம்மையான மணமகளுக்கு தாலி கட்ட  திருமணத்தை நடத்தி- விருந்து படைக்க வேண்டும் .


 இவ்வாறு மிகவும் ஆத்மார்த்தமாக இந்த திருமணத்தை நடத்தினால் அடுத்து வரும் மூன்று மாதங்களில் அந்த வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும்.

திருமணம் விரைவில் கை கூட தெய்வீக வழிபாடுகள் மற்றும் பரிகார ஸ்தலங்கள் மின்னணு புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🌹🍀👇🌷🍀👇🌷

https://amzn.in/ibYVUJD


 திருமணம் நிச்சயம் ஆகும். சுபமாக திருமணம் நடந்து தம்பதிகள் சீரும் சிறப்புமாய் ஒற்றுமையோடு வாழ்வார்கள் .திருமணம் முடிந்ததும் சீதன பொருட்களோடு மரப்பாச்சி பொம்மைகளையும் வைத்து- புகுந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

 வாழ்வினில் இன்பம் மலர அனைவரும்  மகிழ்ச்சியோடு வாழ பழங்காலத்து சடங்கான- இந்த மரப்பாச்சி பொம்மைகளின் திருமணத்தை இனிதே நடத்தலாம். வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதற்கான மிகச்சிறந்த வழிபாடு இந்த மரப்பாச்சி பொம்மைகளின் திருமண வழிபாடு.

தங்கள் கருத்துகளை பதிவு செய்க

Copy rights at balakshitha


வெள்ளி, 29 மே, 2020

திருமணம் நிச்சயமாக பிரம்ம முகூர்த்த வழிபாடு





திருமணம் விரைவில் கைகூடி கல்யாணம் இனிதே நிகழ்ந்து நினைத்த காரியம் முடிந்த மகிழ்ச்சி நிலவ  நாம் செய்யக்கூடிய பிரம்மமுகூர்த்த வழிபாடு முறைகள் பற்றி காண்போம்..


தெய்வங்கள் அனைத்தும் ஒருசேர சங்கமித்து காட்சிதரும் மங்களகரமான நேரம்- தினமும் விடியற் பொழுது பிரம்ம முகூர்த்தம் என சொல்லக்கூடிய 4-30 மணி முதல் 6 மணி வரை என்பதுதெய்வீக காலம்.

திருமணம் விரைவில் நடந்தேறும் சங்கடகரசதுர்த்தி விரதம் 🙏🍀🙏🌹👇👇


 

ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெறிந்து மன உறுதியோடு தெய்வத்தின் பாதத்தை விடாது கெட்டியாக பிடித்து அவன் நாம் அதனை திரும்பத் திரும்ப பாடி 48 நாட்கள் விரதத்தை பூர்த்தி செய்துவிட்டால்- விரதம் கடைப்பிடித்து கொண்டு இருக்கும்போதே நல்ல காதுக்கினிய செய்திகள் தேடி வரும் அல்லது மூன்று மாதத்திற்குள் திருமணம் நிச்சயம் ஆகும்.


விரதத்தை எப்போது தொடங்கலாம்!

அமாவாசை முடிந்து நான்காம் நாள் சதுர்த்தி அன்று விரதத்தை தொடங்கலாம்.

விரதத்தின்போது பூஜை அறையில் என்ன கடைப்பிடிக்க வேண்டும் !

எப்போதும்போல் பூஜை அறையை சுத்தம் செய்து புதிய மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு ஐந்து முக விளக்கை ஏற்றிக் கொள்ளவும். 48 நாட்கள் தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முக விளக்கு ஏற்றப்பட வேண்டும் .

விரதம் ஆரம்பிக்கும் நாள் அன்று அதிகாலை நீராடி  பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முக விளக்கை ஏற்றுக.

 நறுமண வத்திகள் ஏற்றி வைக்கவும். வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும் . ஒரு இனிப்பு சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி என ஒரு இனிப்பு கிண்ணத்தில் வைத்து- பால் கற்கண்டு வைக்கவேண்டும் .


திருமணம் நடைபெற நினைக்கும் மகள் அல்லது மகன் ஜாதகத்தை மஞ்சள் குங்குமம் இட்டு -ஒரு பலகை வைத்து அதன்மேல்  வைக்க வேண்டும். தீபத்தின் நெருப்பு படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

படைப்பதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவும் கீழே வரும் மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்தவாறு சொல்ல வேண்டும்.

தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திராணி பிரியமாமினி!
 விவாக பாக்ய ஆரோக்கியம்
 புத்ர லாபம் சதேஹிமே !!
பதிம் தேஹி சுதம் தேஹி சௌபாக்கியம் தேயிமே சுபே! சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே சிவ சுந்தரி  !!
காத்யாயனி மகாமாயே
 மகா யோக நிதீஸ்வரி!
 நந்த கோவ சுதமத்  தேவம்
 பதிம்மே குருதே நமஹ !!

முக்கியமாக கவனிக்க.. பிரம்மமுகூர்த்தத்திற்குள்  கற்பூர ஆராதனை தெய்வத்திற்கு காட்டி விடவும் .பிறகு கூட மனையில் அமர்ந்து ஸ்லோகங்கள் படிக்கலாம். (20 நிமிடங்கள்- நமக்கு பிடித்தமான ஸ்லோகங்கள்)

'திருமணம் உடனே நினைத்த இடத்தில் நல்லபடியாக சிறப்பாக நிச்சயித்து நடக்க வேண்டும்' என மனதார
 வேண்டிக் கொள்ளவும்.

48 நாட்கள் பிரம்ம முகூர்த்தத்தில் படைக்கும் முன்பாக கருத்து கொள்ள வேண்டியவை..

வாரம் ஒருமுறை விளக்கை  விளக்கிக் கொள்ளலாம். ஆனால் தினமும் சிறிய துணியால் விளக்கின் மேல் பாகத்தை நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமம் இட்டு கொள்ளவும்.
(தினமும் விளக்கை துடைப்பதற்கு சிறிய கட்டம் கட்டமாக துணிகளை கட் செய்து ஒரு பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள்)

தினமும் படைக்கும் இடத்தை ஈரத்துணியால் துடைத்து -பச்சரிசி மாக்கோலம் போடவேண்டும் .புதிய திரி- புதிய நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்ற வேண்டும். புதிய மலர்கள் தினமும் சாற்ற வேண்டும். கற்பூர ஆராதனைக்கு  பிறகு தரையில் விளாவும் நீர் புதியதாக தினமும் மாற்ற வேண்டும் .

இந்த ஐந்து பொருட்கள் - பச்ச‌‌ரிசி மாக்கோலம் -புதிய எண்ணெய்- புதியதிரி- புதிய மலர்கள் புதிய நீர் இவைகள் அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும்.

 முதல் நாள் மட்டும் இனிப்பு பிரசாதமும் -முடிக்கும் நாள் இனிப்பு பிரசாதமும் செய்து படைக்கவேண்டும். இடைப்பட்ட நாட்களில் கற்கண்டு- பால் வைத்து படைக்கலாம்.

திருமணம் பிராப்தம் கைகூட
மரப்பாச்சி பொம்மைவழிபாடு🙏🌹👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

மங்கல வாழ்வு தரும் இளநீர்
அபிஷேக வழிபாடு🙏🍀🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/blog-post_24.html

இதேபோல் எந்த காரியமும் ஜெயமாவேண்டும்  என நினைத்து தொடர்ந்து 48 நாட்கள்  இந்தபிரம்ம முகூர்த்தத்தில் படைத்தாலும் அந்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

 வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும்.
 ஜாதகம் 48 நாட்களும் பூஜை அறை இருக்க வேண்டும் . இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் நினைத்த நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

திருமணம் கனிந்து தம்பதிகள் சமேதராக பல்லாண்டு காலம் வாழ்ந்து பேறுகள் பல பெற்று -பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைகவே.

Copy rights at balakshitha



ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

விரைவில் திருமணம் நடக்க சங்கடகர சதுர்த்தி விரதம்



விரைவில் திருமணம் கைகூட தெய்வீக வழிபாட்டு முறைகள் மின்னனு புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுங்கள் 🌹🍀🌹🙏🌹🍀🌹👇👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

திங்கள், 6 ஜனவரி, 2020

திருமணத்திற்கு முன்பு செய்யவேண்டிய மங்கல நிகழ்ச்சி முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் (பந்தக்கால்) நடும் விழா பற்றிய முழு விளக்கங்கள்






நம்முடைய வாழ்க்கையின் அழகான ஒரு பந்தம் திருமணம்.   திருமணத்திற்கு முன்பாக முகூர்த்தக்கால் அதாவது பந்தக்கால் நடும் விழா என்பது முதன் முதலில் நாம் செய்யக்கூடிய ஒரு ஐதீகமான விஷயமாகும். 

அன்றைய தினத்தில் நாம் என்ன சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக காண்போம்.







திருமண பந்தம் சிறப்பாக அமைந்து தம்பதியர் ஆயுள் முழுவதும்  மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் செய்து வந்த ஐதீகமான வழக்கம்தான் இந்த முகூர்த்தக்கால் நடும் விழா என்று சொல்லக்கூடிய பந்தக்கால் விழா நிகழ்வு .


பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு சொந்த பந்தங்களோடு சென்று பந்தக்கால் நட்டு திருமண நிகழ்ச்சிகளை தொடங்குகின்ற ஒரு அருமையான சுப நிகழ்ச்சியையே முகூர்த்தக்கால் நடும் விழா என்று அழைக்கிறோம். 

திருமணத்திற்கு முன்பாக கண்டிப்பாக நாம் சொல்லக்கூடிய குலதெய்வ ஸ்லோகம்🙏🌹👇👇


https://balakshitha.blogspot.com/2019/08/blog-post.html


திருமணத்திற்கு முன்பாக பெற்றோர்கள் முதலில் யோசிக்க வேண்டியது என்ன?

மணமகளுக்கு மணமகனை  பிடித்து போக மணமகனுக்கோ  மணமகளின் அம்சத்தில் முழுமையான திருப்தி பெற,  இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் நடத்துதல் என்பது மிக உத்தமம்.

ஜாதகம் ஒரு சில குறையிருப்பின் அதற்கான நிவர்த்தி பரிகாரங்கள் முடித்தபின் இந்த சுப நிகழ்ச்சி நடப்பது மிக சிறப்பு .

முகூர்த்தக்கால் நடும் இந்த மங்கல நிகழ்ச்சி நாம் எதற்காக செய்கின்றோம் என்பதை முழுமையாக அறிந்து செய்தோமானால் ..

நம்முடைய ஆத்மாவின் அபரித சக்தியும் செய்கின்ற காரியத்தில் ஐக்கியமாகி..

செய்கின்ற செயல்  சிறப்பாக திருமண பந்தம் முறையாக தம்பதிகள் வாழ்வு இனிமையாக அவர்களின் வாழ்வு வளமாக அமையும் என்பது திண்ணம்.

பந்தக்கால் நடும் விழா எப்பொழுது நடத்த வேண்டும்?

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நல்ல நாள் பார்த்து பந்தக்கால் நடும் விழாவினை நிகழ்த்துவது சிறப்பு.


 சூழ்நிலைக்கேற்ப வசதிக்கேற்ப பத்திரிக்கை அடித்து அல்லது நேரிலோ சென்று இந்த மங்கல நிகழ்ச்சிக்கு சொந்த பந்தங்களை வரவேற்கலாம் .

(இன் முகம் ஒன்றே.இனிய நிகழ்ச்சிக்கும் இசைந்தேறும்  என்பது இந்த மங்கல நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு தரும்)




பந்தக்கால் நடும் விழா அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

திருமணத்திற்கு ஒரு வாரத்திருக்கு முன்பு நாள் பார்த்து பிரம்ம முகூர்த்த வேளையில்- (4/30மணியில் இருந்து 6மணிக்குள்) பந்தக்கால் நடும் விழா என்று சொல்லக்கூடிய முகூர்த்தக்கால் நடும் விழா நடத்த வேண்டும் .

இந்த மங்கல நிகழ்ச்சி மணமகன் வீட்டாரால் செய்யப்பட வேண்டும்.

 பெண் வீட்டார் தங்கள் சொந்த பந்தங்களை தன் வீட்டிற்கு  வரவழைத்து அனைவரும் தாங்கள் பெண் வீட்டார் என சேர்ந்து,  மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல வேண்டும்.

 பட்டுப் புடவை மஞ்சள் குங்குமத்தோடு தலையில் பூச்சூடி மங்கலகரமான சுமங்கலிகள் என பெண் வீட்டார் 9 பேர் 11 என ஒற்றைப்படை வரிசையிலே  அழைத்து இந்த மங்கல நிகழ்ச்சியை செய்வது சிறப்பு .



மூங்கில் கழி  என்று சொல்லக்கூடிய 2 கழிகளை  முன்பே தேர்வு செய்து கொள்க.

மூங்கில் கழிகளை நாம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

திருமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை மூங்கில் போல வளர்ந்து சிறப்பாக அமைதல் வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் மூங்கில் கழியை  தேர்ந்தெடுத்தனர்.

மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற  பெண்வீட்டார் மூங்கில் கழிகளை தண்ணீரினால் சுத்தம் செய்து  மஞ்சள் குழைத்து ஏறு முகமாக பூசி  சந்தனம் குங்குமம் கீழிருந்து மேலாக  வைத்தல் சிறப்பு

மலர்களோடு கூடிய மாவிலை சேர்த்து இரண்டு கழிகளிலும் மஞ்சள் பூசிய நூல் கொண்டு கட்டி காசு முடிப்போடு கூடிய வெள்ளை சரிகை துணியை மூன்று முடிச்சு என கழிகளோடு சேர்த்து  கட்டி தெரு வாசலில் ஒரு கழியையும் -
வீட்டின் உள் வாசலில் ஒரு கழியையும் அரசாணை கால்களாக நடவேண்டும்.

குறிப்பு ( முதல்நாளே இந்த அரசங்கால் நடுவதற்கு தேவையாக உள் வாசலிலும் -தெரு வாசலிலும் சுவற்றை ஒட்டி செங்கற்களால் தொட்டி போல் அடுக்கி  அதனுள் மண் கொட்டி வில்வ இலையும் அருகம்புல்லும் வைத்து அதன் மேலும் மண் நிறைத்து கொள்ளவும்.)

 வீட்டின் உள் வாசலில் குத்து விளக்கு ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு , பழம்,  தேங்காய் உடைத்து சாம்பிராணி வத்தி ஏற்றிவைத்து- பிறகு இந்த மங்கல நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதே மிக உத்தமம்.

விளக்கம் - பந்தகால் நிகழ்ச்சியை நாம் முறையாக செய்யும்பொழுது மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு ருத்ரன் அனைவருக்கும் இந்த அரசாணை கால்களில் மூன்று முடிச்சு என அர்ப்பணித்து  இந்த தெய்வ அம்சமான சூழ்நிலையில் அவர்களே தம்பதி சமேதராய் நேரில் வந்து திருமணம் இனிதாக நடக்க தம்பதியரை வாழ்த்துவதாக ஐதீகம்.


 பாலிகைமுளை இடுதல் விழா


இந்த மங்கல நிகழ்ச்சிகள் மிக முக்கியமாக ஐந்து பஞ்ச லோகங்கள் (பவுன்-வெள்ளி-செப்பு-பவழம்- முத்து ) குண்டுமணிகள் கடையில் வாங்கி கொள்ள வேண்டும்.


 நெல் , உளுந்து ,கொள்ளு , பச்சைப்பயிறு என நவதானியங்களை முதல்நாளே  ஊற வைத்து கொள்ளவும்.


பந்தல்கால் நடும் அன்று  பந்தக்கால் நட்டு முடித்தவுடன் நவதானியங்களும் பால் சொம்பும் வைத்து மணமகன் வீட்டாரின் சுமங்கலிப் பெண் வைத்திருக்க -

உள் வாசலிலும் -வெளி வாசலிலும் பந்தகால் நடுகின்ற அந்த மண்ணிலே பஞசலோகத்தை இட்டு ..

 பந்தக்கால் நட்ட  சுமங்கலி
பெண்மணிகள் நவதானியங்களை அள்ளி மண்ணிலே தூவி , சிறிது பால் ஊற்றி

 குலதெய்வத்தை வேண்டி தம்பதியரை  வாழ்த்துவதே இந்த பாலிகை இடுதலின் சிறப்பு.

 விளக்கம்- ‌ முளைத்து வரும் தானியங்கள் போன்று -தம்பதியர் தொடங்கக் கூடிய வாழ்க்கை சிறப்பாக முத்து போன்ற நன்மக்களை ஈன்று வாழ்க்கையை இனிதே  நடத்த வேண்டும் என்பதே இந்த பாலிகை இடுதல்  எனும் மங்கல நிகழ்ச்சி ஆகும்.


நெல் குத்தும் நிகழ்ச்சி



ஒரு பெரிய பாத்திரத்தில் நெல் நிறைத்து -மூன்று பானைகள் மூன்று அடுப்பு -3 பல்லா- ஒரு பெரிய உரல்
 2 உலக்கை -அனைத்திலும் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மலர் நிறைவாக சுற்றி  உள் வாசலில் பச்சரிசிகோலம் போட்டு முதல் நாளே தயார் செய்து கொள்ளவேண்டும்.


விளக்கேற்றி  மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து சாம்பிராணி ஏற்றி தேங்காய் உடைத்து -பந்தக்கால் நட்ட பின்னர் சூடம் ஏற்றி படைத்த பின்னரே இந்த நெல்குத்துதல் நிகழ்ச்சி நடைபெறும் .

பந்தக்கால் நட்ட பெண் வீட்டார் சுமங்கலி பெண்கள் இருவர் இருவராக படியினால் நெல்மணிகளை அள்ளி மூன்று பானைகளிலும் உரலிலும் நிறைத்து உலக்கையால் இருவரும் சேர்ந்து மூன்று முறை குத்துதல் சிறப்பு.

 அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்தல் மிக மிக உத்தமம்

 இதுபோல சுமங்கலி  பெண்மணிகள் இருவர் இருவராக சேர்ந்து குத்தி தாம்பூலம் பெறவேண்டும்.

விளக்கம்   - ‌எங்கள் வீட்டு திருமகள் இந்த வீட்டு மகாலட்சுமி ஆக செல்வத்தை குவிப்பவளாக என்றும் வாழ்க்கையை சிறப்படையச் செய்வாள் என பெண்வீட்டார் ஆனந்தத்தோடு நெல் மணிகளை குத்துதல்  மூலமாக தெரிவிப்பதே இந்த நெல் குத்துதல் நிகழ்ச்சி ஆகும்.


பிறகு அனைவருக்கும் விருந்து படைத்து முகூர்த்தக்கால் நிகழ்ச்சியை நிறைவு செய்தல் சிறப்பு.

குறிப்பு (இந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் குத்துகின்ற நெல் ஒரு படி அளவிற்கு எடுத்து அவித்து -நிழலில் காயவைத்து -குத்தி அந்த அரிசியை திருமணத்தன்று  மணப் பொங்கல் பொங்கி வாழையிலையில் வைத்து படைக்க வேண்டும்)


திருமணத்திற்கு முன்பு தெரிந்து கொள்ள போது குலதெய்வ வழிபாடு 🙏🌹👇👇


https://balakshitha.blogspot.com/2019/11/part-1.html


மேலும் படிக்கலாம்..

சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html


இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

லட்சக்கணக்கில் செலவு செய்து செய்யக்கூடிய திருமணத்தில் பலருக்கும் படித்து பயன்பெறக்கூடிய மிக அருமையான இந்த புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்து வாழ்வினில் கனிந்த மகிழ்ச்சிதனை  நாம் பெறலாம்.

‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha










புதன், 4 டிசம்பர், 2019

திருமணம் விரைவில் கைகூட பெருமாளின் அங்கவஸ்திரம் வழிபாடு



பெருமாளின் பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் பரிகார வழிபாடு


 திருமணம் இளம் வயதில் நடக்கக்கூடிய ஒரு இனிதான வைபோகம்.. அது பல பேருக்கு சில தடைகள் காரணமாக தள்ளிக்கொண்டே போகும்.

 இதனால் மனமுடைந்து வாழ்க்கையில் விரக்தி அடைவோர் பலர்  உண்டு. அ


அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒருநாள் பரிகாரமே பெருமாளின் பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் வழிபாடு

 ஜாதக கோளாறுகளை சரிசெய்து தெய்வத்தின் திருவருளை பெற்று  அடுத்த ஓரிரு மாதங்களில் இனிதே திருமணம் நிச்சயம் முடிந்து மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.


சொந்த வீடு மழை வாங்குவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🌹🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

 அதற்கான வழிமுறை..

சிறப்பு 1  பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சாற்றகூடிய - பட்டு வேஷ்டி துண்டு ஐயரிடம் முன்பே சொல்லி வைத்து ...

தட்சணை கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைக்க வேண்டும் .


வெள்ளிக்கிழமை நல்ல சுப நாளில்
 'தன் மகனுக்குதிருமணம் இனிதே ஆக வேண்டும் 'என மனதார பெற்றோர் வேண்டிக்கொண்டு -

பூஜைஅறையில் ஐந்து முக விளக்கேற்றி பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தை வைத்து- நன்றாக வேண்டிக்கொண்டு வாழ்த்தி மகனிடம் கொடுக்க-பெருமாளின் மேனியில் சாற்றிய
அங்க வஸ்திரத்தை அணிந்துகொண்டு மணமகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது மிக சிறப்பு .


அர்ச்சனை செய்வதற்கான பொருள்கள்


தேங்காய்-வெற்றிலை பாக்கு வாழைப்பழம்- துளசி மாலை
புஷ்பத்தில்‌  ஏலக்காய் சேர்த்து கட்டிய
பூமாலை (நம்முடைய கையால் பூக்களை தொடுத்து ஏலக்காய் இடையிடையே ஊசியால்  கோர்த்து கட்டுவது மிக விசேஷம்)

ஏனென்றால் ஏலக்காய் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த பொருள் -என்பதால் ஏலக்காய் சேர்ந்த புஷ்பத்தை பெருமாளுக்கு சாற்றும்பொழுது-பெருமாளின் மார்பினிலே வாசம் செய்யும் மகாலட்சுமியும்
அளவில்லாத ஆனந்தம் கொண்டு நாம் வேண்டும் வேண்டுதலை- மனம் குளிர நிறைவேற்றுவாள்-என்பது ஐதீகம்

 மூன்று பெருமாள் சன்னதிக்கு சென்று வருவது மிகவும் சிறப்பு.

பிறகு வீட்டிற்கு வந்தபிறகு அந்த பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தை மடித்து பத்திரமாக பூஜை அறையில் வைக்கலாம்.


இந்த வழிபாடு தொன்றுதொட்டு பெரியவர்கள் சொல்லுகின்ற மங்கள வழிபாடு .

இன்று வரை நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழிபாடு .



பெருமாளின் திருமேனியில் சாற்றிய  -பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் மணமகன் அணிய -அந்த வஸ்திரத்தின் புனிதம் பட்டு தோஷங்கள் தடைகள் விலக திருமணம் விரைவில் கூடும்

இந்த பரிகாரத்தை சிறப்பான முறையில் செய்தால் அடுத்து உடனே திருமணம் நல்ல இடத்தில் நினைத்த இடத்தில் உடனே கைகூடும் .

 பெருமாளின் அருளால் திருமணம் இனிதாக நடந்து முடிந்த பிறகு
பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பட்டுடடை சாற்றி அதேமுறையில்அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றலாம்.

வாழ்க்கையில் விரக்தி நீங்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைப்பதற்கு -அருமையான பரிகாரம் இந்த பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் வழிபாடு.

 இதே முறையில் பெண்களுக்கும் திருமணம் கை கூட ..

பெருமாள் கோவிலுக்கு சென்று மகாலட்சுமியின் திருமேனியில் சாற்றிய புடவையை அய்யரிடம் தட்சணை கொடுத்து வாங்கிவந்து இதே முறையில் வழிபாடு செய்தால் பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.

சுப மாதங்களில் சுப நாளில் சுப நேரத்தில்  இந்த வேண்டுதலை நிறைவேற்றுவது உத்தமம்.

பெருமாளின் அனுக்கிரகத்தால் திருமண வைபோகம் சுபமாக வீட்டினில் நடந்தேற- அளவிலாத மகிழ்ச்சி குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் நிறைந்திட -ஆனந்தம் பெற்று சிறப்புடன் வாழ்ந்து வாழ்வின் பயனை அடைவோம்.

 Copy rights at balakshitha

வியாழன், 27 ஜூன், 2019

இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ part -4

திருமணம்

பிறவியில் சிறந்தது மனிதபிறவி *மனிதப் பிறவியில் பிறந்தவர்கள் நான்கு நெறிகளை கடைபிடிக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன..
கிரஹஸ்தம் -பிரம்மச்சரியம் வானப்பிரஸ்தம் -சந்நியாசம்
இதில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் படிதான் கிரஹஸ்தம்
அதாவது இல்லறம்.


ஒரு ஆண் மகனும் ஒரு பெண் மகளும் இல்லறத்தில் இணைகின்ற
 ஒரு பந்தம்தான் திருமணம் .
அக்னி சாட்சியாக அருந்ததி
பார்த்து- சப்தரிஷிகள்
வேத பிராமணர்கள்- உற்றார் உறவினர் -நண்பர்கள் சாட்சியாக வைத்து  மேளதாளத்தோடு மணமகன் -மணமகள் கழுத்தில் கட்டப்படும் புனிதமான தாலியுடன் கூடிய மஞ்சள் கயிற்றை தான் மாங்கல்யம் என்கின்றோம் ‌.இதன் பிறகே கணவன் மனைவி- என்ற அந்தஸ்தை பெற்று தம்பதிகளாக மாறுகின்றனர் .

இனிது இனிது வாழ்க்கை
இனிதன்றோ part -3🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_6.html

இனிது இனிது வாழ்க்கை
 இனிது அன்றோ part- 5🍀🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/part-4.html

மனைவி என்பவள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களை விட சிறந்தவள் ஆவாள்- என்று காயத்ரி மந்திரம் கூறுகின்றது. அவளுடைய கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் 9 இழைகளை கொண்டதாக அமைகின்றது .
அந்த ஒவ்வொரு இழையுமே   நமக்கு ஒரு கருத்தை சொல்கின்றது.


இழை (1) வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் .
(2 )மேன்மை உடையவளாய் திகழவேண்டும்.
(3) ஆற்றல் மிக்கவளாய் சிறக்க வேண்டும்.
(4) ‌ தூய்மை கொண்டவளாய் இருக்க வேண்டும்.
(5) ‌ தெய்வீக பக்தியோடு
(6) ‌ உத்தம குணங்களோடு
 (7) ‌விவேகத்தோடு
(8) ‌தன்னடக்கத்தோடு
 (9) ‌பொறுமையோடும் -ஒரு பெண்
திகழ வேண்டும் என்பதே- மாங்கல்யத்தின் இலக்கணம் ஆகும். அந்த மாங்கல்யமே மங்களத்தின் அடையாளமாக திகழ்கின்றது.

திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

திருமணம் நடைபெறும் பொழுது
வேத பிராமணர்கள் சொல்கின்ற மிக சிறப்பான ஸ்லோகம் இது..


மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுநா
 கண்டே பத்நாமி ஸுபகே
சஞ்சீவ சரதம் சதம்.

'நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி- உன் கழுத்தில் தாலியை முடிச்சு போடுகின்றேன்-சௌபாக்யவதியே * நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக என்னுடன் வாழ்வாயாக -என்று ஆண்டவன் அருளட்டும்' என்று கூறியவாறு மணமகளின் கழுத்தில் தாலியை கட்டுகின்றான் மணமகன்.



 அக்னிசாட்சியாக இப்படி மந்திரம சொல்லிமுறைப்படி மணமகன் -மண மகளுக்கு கட்டகின்ற  புனிதமான  மாங்கல்யம் நிலைத்து இருக்க வேண்டும்
என்றால் தெய்வத்தின் அருளானது நிறைந்து இருக்க வேண்டும்.தெய்வத்தின்
அனுகிரகம் கிடைத்தால்தான் -திருமணம்தங்கு தடையின்றி சிறப்பாகநடக்கும்.
அதனால்தான் வேத பிராமணர்கள் திருமணத்தின் போது கலச பூஜை -நவகிரக பூஜை நடத்துவர். கடவுளுடைய மனதை குளிர வைக்கக் கூடிய மகிழ்விக்க கூடிய சமஸ்கிருதசொற்கள் மந்திரத்தில் உண்டு .
ஹோம குண்டத்தை வளர்த்து நெய்வார்த்து நவ கிரக மந்திரம் வேத மந்திரங்கள் சொல்ல சொல்ல -அவை காற்றிலே கலந்து வானத்தை அடைந்து
வானத்தில் உள்ள தெய்வ சக்தியானது ஓமகுண்டத்திலே மீண்டும்
எழுந்து மணமக்களை வாழ்த்துகின்றது  என்பது ஒரு ஐதீகம் .

அப்படிப்பட்ட ஐதிகம் நிறைந்த திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர்
புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை
அடையவேண்டும்.

திருமணம் விரைவில் கைகூட
சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇



திருமணம் விரைவில் கை கூட..

பச்சை நிறத்து பைங்களி போற்றி இச்சைக் கிசைந்த இன்பே போற்றி குவளைக் கண்மலர் கொம்பே போற்றி -தவள வெண் நீற்றோன் தலைவி போற்றி -பவள வாய்மேற் பசுங்கொடி போற்றி *

என்ற மீனாட்சியின் 108 போற்றி பாடலை வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி -வடக்கு முகமாக மணையில் அமர்ந்து பாடி வர திருமணம் விரைவில் கைகூடும். கன்னிப்பெண்களுக்கு நல்ல மாங்கல்யம் அமையும். வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.

Copy rights at Balakshitha


வியாழன், 30 மே, 2019

மீனாட்சி சுந்தரேஸ்வரர் தல வரலாறு


மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்


ஓம் சிவனே போற்றி *
ஓம் ஒப்பிலா ஈசனே போற்றி*
 ஓம் முதல்வனே போற்றி*
 ஓம் முக்கண்ணனே போற்றி*
 ஓம் அப்பனே போற்றி*
 ஓம் அருள்வாய் போற்றி போற்றி*

திருமணம் என்பது  ஆயிரம் காலத்து பயிர் * அந்த திருமண வாழ்க்கை கனிந்து மனம் போல் மாங்கல்யம் அமைந்து -அந்த மாங்கல்யம் தீர்க்க சுமங்கலி பவ * எனும் ஸ்லோகம்- நம் வாழ்க்கையில் என்றும் நிலையாக வேண்டி அந்த வேண்டுதலை ஏற்று அருள்கின்ற ஒரு அற்புத தலமே மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் *

மீன் போன்ற கண்
கொண்ட மீனாட்சி
சுந்தரேஸ்வரரை
திருமணம் புரிந்த
சிறப்பான தல வரலாறுதனை அறிந்து கொண்டு மனத்திற்கு பிடித்தமாக திருமண வாழ்க்கை அமைவதற்கான வழிமுறைகளை அறிவோமே ..

பாண்டிய மன்னன்
மலயத்வஜன்- காஞ்சனை தம்பதிக்கு குழந்தை வரம் வேண்டி
' காமேஷ்டி யாகம் '
நடத்துகையிலே யாக
குண்டத்தில் அழகு
மலராக *
பிஞ்சு கைகள் சிலம்பாட*
மீன் போன்ற 
கண்களிலே
நீர் ததும்ப *
தாமரை மொட்டு
 வாயிதழாட *
குழந்தை வடிவத்தில்
அம்மையோ காட்சி தர..

ஆனந்த பரவசம்
அனைவரின் நெஞ்சிலும்
ஊஞ்சல் ஆட ..அள்ளி
அணைத்து மகிழ்ச்சியிலே
தடாதகை எனும்
பெயரோடு மீனாட்சி
வளர்ந்தாளே மதுரையிலே*



கண்ணுக்கு இனியவளாய்
கன்னியாய்
வளர்ந்தவளோ
வீரத் திருமகளாய்
உலகத்தையே வசமாக்க
உலா வருகையிலே..
கைலாய மலையோ
கண்ணிலே பட்டுவிட
போரிட வந்தவளோ!
 நாணத்தோடு தலைகவிழ்ந்தாள் சிவனின் பார்வையிலே..

பித்தனாக -புலித்தோல்
போர்த்தியவனாக
சுடுகாட்டிலே
திரிபவனாக -மண்டையோடு அணிபவனாக
காட்சியளித்த 
எம்பெருமானோ! மீனாட்சியின்
கண்களுக்கு சுந்தரனாக
காட்சி தர. .


 அந்நிமிடமே மீனாட்சியின்
பார்வையிலே சொக்கியதால் சுந்தரேஸ்வரர்* எனும் 
பெயர் பெற்றவர் ஆகிறார் .

பிரம்மா *விஷ்ணு* தேவர்*
என படை சூழ மாப்பிள்ளையாக சென்றவரோ மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தருகின்றார் மதுரையிலே.

பிரதோஷம் அன்று 
சிவனும் *சக்தியும் *ஒன்றாகி 
நடனமாடும் அற்புத தருணம்
 கொண்ட சிறப்பான தலமே
மதுரை மீனாட்சி திருக்கோவில்* 

மனதிற்கு பிடித்தமான
 மணவாளன்*
 கிடைப்பதற்கும் 
மனதிற்கு பிடித்தமான 
மனைவி * அமைவதற்கும்
மிக அருமையான
 தெய்வ வழிபாடு 
பிரதோஷம்* அன்று

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து  5 அகல் தீபம்* ஏற்றி 
 வந்தால்  மூன்று பிரதோஷத்துக்குள் திருமணம் நிச்சயம் கைகூடும்*
 என அறிந்து அதன்படி நடந்து வாழ்க்கையில் சிறப்பை அடைவோமே.

ஜோதி எனும் 
ஒளியிலே ஒளிர்ந்து*
 ஞான ஒளி 
நமக்கெல்லாம் அளித்து *
தவறு செய்யும்
 மனதினை மறுத்து *
உண்மை எனும் 
சொல்லிலே ஐக்கியமாகி*
 பக்தி எனும் மார்க்கத்தை 
நமக்குள்ளே புகுத்துகின்ற 
இறைவனடி போற்றி போற்றி*

சொந்த வீடு மனை அமைவதற்கு பத்து தெய்வீக வழிபாடுகள் 🍀🌹🍀🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

விரைவில் திருமணம் கைகூட  தெய்வ வழிபாடுமற்றும் பரிகாரஸ்தலங்கள்🌹👇
https://amzn.in/ibYVUJD

Copy rights at Balakshitha






புதன், 19 செப்டம்பர், 2018

இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ part- 7

 

அன்றைய காலத்து திருமணம் பெரியவர்கள் செய்து வைத்த முறை வழிமுறைகளை காண்பதில் இனிது காண்போம் 


நம் முன்னோர்களின் காலம் பழமையான பழுத்தகாலம்
பசுமையான தளிர் காலம்
 முன்பு நடந்த நிகழ்வுகளை 
எழுத்து சுவடிகளில்
 பதிக்கும் காலம்*
 அந்த முத்தான கருத்துக்களை
  நாம் அறிந்து அவர்களுடைய சிறப்புகளை அறிவோமே*

தாலி எனும் புனிதமான பெயர் 
ஏன் வந்தது? என்பதற்கு நம் முன்னோர்கள் சொல்லும்
 அழகான கருத்து..

 மணமகன் *மணமகள் *மனமறிந்து பெற்றோரோ! மணமுடிக்க 
முடிவெடுத்து -பெரியோர்களின் முன்னிலையில் சுப நாள்* குறித்து
 அன்று முதல் ஆனந்தம் -அலங்காரம் அனுபோகம் -அனுதினமும் நடந்தேற அனைவரையும் வரவேற்று திருமணத்திற்கு முதல் நாளே
நடத்துகின்ற ஏற்பாடோ!

' நீண்டு வளர்ந்த
 பனை மரத்தைப் போன்று
 மணமக்கள் நீடூழி வாழ வேண்டும்* பனை மரத்தின் நுங்கு போன்று மணமக்களின் வாழ்க்கை 
குளிர்ச்சி  மிகுந்த வாழ்க்கையாக அமைய வேண்டும் 'என்பதை
 கருத்தில் கொண்டு பெரியவர்கள் திருமணத்திற்கு முதல் நாள்
 காலையில தால ஓலையில்
அதாவது பனை ஓலையைதான்
 தாலம்னு சொல்வாங்க..
தாளம் ஓலையில
 மஞ்சளை பூசி 
பிள்ளையார் சுழியிட்டு
' இன்னார் மகளை இன்னார் மகன் 
மணந்தார் வாழ்க *'என்று
 என்று எழுதி சுருட்டி 
மஞ்சள் கயிற்றில் சேர்த்து 
மணமகன் மணமகள் கழுத்தில் கட்டுவார் 'தாலம் 'என்ற சொல்லே 
பிற்காலத்தில் தாலி* என்று 
பெயர் மாறியது.

 இரு மனமும் ஒரு மனமாகி
மணமக்கள் வாழியவே*
பனை மரத்தின் தத்துவத்தை
புரிந்து கொண்டு
வாழ்வில் இனிமை
நிறைந்திட 
வாழியவே*

Copy rights at Balakshitha