இல்லறத்தில் இனிமை காண்க
கணவனே கேளாயோ !கண்ணுக்கினிய மனைவி தனை இமைபோல் காப்பதற்கு இவ்வழி பின் செல்க..
மலரினுள் உள்ள வாசம் போல் -ஒரு பெண்ணின் உள்ளுணர்வை கணவன் அறிந்து கொண்டால் மட்டுமே..
அந்த குடும்பம் சுபிட்சம் பெற்று- வாழ்க்கை வளம் பெற்று- பழம் கிடைத்து கனியபெற்று- புண்ணியத்தை அடைந்து மோட்சம் கிடைக்கும். என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும் -
என உறுதி கொண்டு திருமண பந்தத்தில் இனிதே தொடங்குக- தொடங்குக தொடங்கி வாழ்ந்து வளர்ந்து பயன் பெருக- பலன் பெருக- முக்தி கிடைக்க வழி தேடுக- தேடுக மனமே-நின் கருத்துதனை உள்வாங்கி ..
பெண் இனிய மனைவி எனும் நல்லாள் அமையப்பெற்று -அமைதி கினிய வாழ்வுதனை நீ பெற்று - வாழ்க வாழ்க வளம் பெருக- வாழிய வாழியவே. வாழியவே என வாழ்ந்து விட்டால் ..
இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ!
உமையவளே கேளாயோ கணவன் எனும் மணவாளன் மனமொத்து வாழ்வதற்கு இவ்வழி பின் செல்க..
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ part-6 🍀🌹🍀🌹🌹🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/part-6.html
கணவன் மனம் கல்லாயினும் கருங்கல்லை உளிதனில் செதுக்குகின்ற உளியாக நீ இருந்து வடிவமைக்க .
அழகான சிற்பம் போன்ற வாழ்வுதனை நீ பெறுவாய்.. பெற்ற வாழ்வு தனில் இனிது கண்டு இன்பமெனும் மழலைகள் பல பெற்று மங்கள வாழ்வு நீ பெற்று
-சிறப்பு என்றும் கனிய பெற்று- சிந்தை குளிர வாழ்வு பெற்று- தமிழ்ப்பண்பு தகிக்க பெற்று -பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே என்று வாழ்ந்து விட்டால்.. வாழ்க்கை என்றும் இனிய தன்றோ!
சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து 10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
இல்லறத்தில் இனிமை காணும் தம்பதியரே நீ கேளாய்!
தேனூறும் ஐஞ்சுவை பழத்தில் கிடைக்கும் சுவை போல -அன்பு பண்பு கனிவு கோபம் தாபம் எனும் அனைத்திலும் கலந்து சுவை அனைத்தும் நீ பெற்று-
தேனூறும் வாழ்க்கையிலே அனுபவ பாடத்தில் பயிற்சி பெற்று -மழலைகள் தோள் சாயும் மகிழ்ச்சி பெற்று- தோரணங்கள் தொங்கும் சுபநிகழ்ச்சிகள் பல பெற்று ..
செல்வங்கள் குவியும் சீரும் சிறப்பும் நீர் பெற்று வாழிய வாழிய வாழியவே. வாழ்வினிலே இனிது காண்கிடவே.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக