ஆடி மாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடி மாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஜூலை, 2021

ஆடி மாதம் சிறப்பு

 ஆடி மாதத்தின் சிறப்பு





        ஆடி மாதம் 1ஆம் தேதி

         17 -7 -2021 -சனிக்கிழமை
             

           ஆடி மாதம் சிறப்பு

ஆடி மாதம் வீட்டினில் அம்மனை வரவேற்று வழிபடும் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

            1 - அம்மனுக்கு உரிய மாதம்               2  தேவர்களுக்கான   குளிர்ச்சியான மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய மாலைப்பொழுது , இந்த ஆடி மாதம்.


                  3-குலதெய்வத்தை  நினைத்து வழிபட்டு     வணங்குவதற்கான மாதம்      

4-அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் மாதம்.

5 - நினைத்த காரியங்கள் ஜெயமாகும் மாதம்.

 6 -   திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் அம்மனை நினைத்து விரதமிருந்து வழிபட்டால்,  நிச்சயம் அடுத்த ஆவணி மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து  திருமணம் நடக்கும்.

7 - வீட்டில் ஒவ்வொரு வருடமும் அம்மனை நினைத்து  குலதெய்வத்திற்கு  ஆடிமாதத்தில் பட்டுப்படவை அல்லது நம்மால் முடிந்த புதிய காட்டன் புடவை எடுத்து வைத்து அம்மனுக்கு படையல் வைத்து படைத்தால் வாழ்வினில் அனைத்து அனுகூலமும் உண்டாகும்.

ஆடி மாதம் நம்முடைய வீட்டிற்கு அம்மனை அழைப்பது சிறப்பு. இந்த மாதம் முழுவதும் அம்மனை நினைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

ஆடி மாதத்தில் நாம் மிக முக்கியமாக வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிபாடு




ஆடி மாதம் முதல் நாள், வீடு வாசல் நிலை வாசற்படி அனைத்தையும் சுத்தம் செய்து  நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர் வைத்து வழிபடுவது சிறப்பு.

ஆடி மாதம் முதல்நாள் அல்லது செவ்வாய் ,வெள்ளி கிழமைகளில் கலசம் வைத்து வழிபடுவது சிறப்பு.

ஆடி மாதத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் ஒன்பது நாட்கள் 30 நாட்கள் என கலசம் பூஜை அறையில் இருப்பது சிறப்பு.

ஆடி மாதம் 1 ஆம் தேதி அம்மனுக்கு மிகவும் உகந்ததாக பச்சரிசி, வெல்லம் கற்கண்டு, முந்திரி, திராட்சை,நெய் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்து வைத்து படைத்தல் சிறப்பு.

வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்து இருக்க ...இந்த ஆடி மாதம்  அம்மனை
வீட்டிற்கு அழைத்து, அதற்கான வழிமுறைகளை‌ முறைப்படி அறிந்து  சிறப்பாக வழிபட்டு வாழ்வினில் மகிழ்ச்சி. பெறுவோம்.

ஆடி மாதம் பக்திக்கு உரமிடும் மாதமாக, உள்ளத்திற்கு தெளிவு கொடுக்கும் மாதமாக, சிந்தைக்கு இனிமை கொடுக்கும் மாதமாக, துன்பங்கள் நீங்கி செல்வங்கள் பெருகும் மாதமாக , மலர்ந்து அனைத்து செல்வமும் பெற்று, நோய்நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு பெற்று அனைத்து வளமும் பெற்று- வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்வின் பயன் அடையவே.

ஆடி மாதத்தில் அம்மனுடைய பூரணமான தெய்வீக சக்தி அனைத்தும் பெறுவதற்கு வேப்பிலை வழிபாடு🙏🙏🌹🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/07/blog-post.html

சுமங்கலி பெண்களாக என்றும் திகழ்வதற்கு புனிதமான மாங்கல்யம் செய்வதற்கான நேரம் மற்றும் செய்யக்கூடிய முறைகள்🙏🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.html



Copy rights at Balakshitha