பிரதோஷ வழிபாடு
சிவனும் பார்வதியும் ஒன்றிணைந்து ஆடுகின்ற நடன காட்சி கண்டு பேரானந்தம் கொள்ளும் திருநாள் பிரதோஷம் .
சிவனுக்கு கோபம் வந்தால் நடப்பது ருத்ரதாண்டவம் ..அதற்கு இணையாக தேவியும் கோபத்தில் பத்ரகாளியாக காட்சி தருபவள்.
இருவருக்கும் அடிக்கடி நடக்கின்ற வாக்குவாதத்தில் கோபம் கொண்டு பூலோகத்தில் வாசம் செய்யும் வந்துவிடுவாள் அம்மையவள்.
இப்படிப்பட்ட கோபம் கொண்ட தம்பதியர் கோபம் தணிந்து ..ஒருவர்பால் ஒருவர் அன்பு கொண்டு சேர்கின்ற திருநாளே பிரதோஷம்.
மனதில் வேறுபாடு கொண்டு பிரிந்த தம்பதிகள் பலர் உண்டு -மனக் குழப்பத்தோடு வாழ்க்கை நடத்தும் தம்பதிகளும் பலர் உண்டு..
அனைத்து மன குழப்பங்களும் விலகி ஒற்றுமையோடு வாழவேண்டும் என்று விரும்பும் தம்பதியினர் இந்த பிரதோஷ வழிபாட்டை பயபக்தியோடு மேற்கொண்டால் ஐந்து பிரதோஷத்துக்குள் அவர்களுடைய மனக் குறை தீர்ந்து வாழ்க்கையில் ஒன்று சேருவார்கள்.
தம்பதியர் ஒன்று சேர சிவபெருமானை வேண்டுகின்ற அற்புத நாள்தான் பிரதோஷம்.
பார்வதி தடுமாறி விழுகின்ற பொழுது தாங்குகின்ற சிவன் நமக்கெல்லாம் பாடம் புகட்டுகிறார் ..
ஆயிரம் கோபத்தில் கணவன் மனைவி சண்டையிட்டுக் கொண்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது என்றென்றும் வாழ்ந்து திருமணத்தில் புனிதத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு பாடம் புகட்டுகிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் வாதம் புரிந்து கொண்டாலும் ஒருபோதும் இடையில் யாரையும் அனுமதித்தது கிடையாது என்பது தெய்வம் நமக்கு புகட்டுகின்ற பாடம்.
அதை என்றும் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் நிச்சயம் கணவன் மனைவி பிரிவு என்பது நேராது.
"கணவன் மனைவி ஒற்றுமை என்பது இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது கலந்தது.. இருந்தாலும் காற்று கூட புக முடியாத உறவு நம் உறவு -என உறுதி கொண்ட மனம் கொண்டு வாழ்க வாழ்க தம்பதியர் என்றும் வாழ்ந்திடவே" என பாடம் புகட்டும் ஒரு சிறந்த தினம்தான் பிரதோஷம்.
பிரிந்த தம்பதியர் பிரதோஷம் அன்று வில்வ இலை அர்ச்சனைக்கு கொடுத்து தொடர்ந்து 5 பிரதோஷங்கள் சிவபார்வதியின் நடன காட்சியை மனதால் கண்டுகளித்து 2 நெய் அகல் தீபம் ஏற்றி வர ..கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் .
ஓம் ஓம் நமச்சிவாய என்று சொல்கின்ற மந்திரத்தில் சிறப்பு..
புழு மாறி -வண்ணத்துப் பூச்சியாகி-பூச்சி உருமாறி அழகிய மான் ஆகி - மறைந்து மனிதப்பிறவி ஆகி சிரித்த மழலை தனை நான் கண்டேன் 'ஓம் நமச்சிவாய 'எனும் நாமம் நாம் உரைக்க - உயர்வாகிய நிலைதனையே.
அதுபோல நம் சிந்தையில்
'ஓம் நமச்சிவாய ' எனும் மந்திரத்தின் ஒலி உணர்கையில்.. மனம் பண்பட்டு படிப்படியாக உயர்நிலை நாம் பெற்று பிறவா நிலை பெற்று- என்றென்றும் தெய்வத்தோடு கலந்த உன்னத நிலை பெற்று மனித பிறவியின் நிறை காண்போம். அதற்கு இந்த பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.
ஓம் சிவாய நமஹ எனும் திருநாமத்தை 108 முறை சொல்வது சிறப்பு .
திருநாமத்தை சொல்லும் போது முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி அமர்ந்து வடக்கு நோக்கி அமர்ந்து சிவபெருமானை மனதில் நிறுத்தி சொல்வது சிறப்பு.
இதனால் ஏற்படும் தெய்வீக பலன் தம்பதியரின் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும் .ஒற்றுமை பலப்படும் .மனச்சுமைகள் குறையும். வாழ்வினில் என்று தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.
சிவ பார்வதி சொரூபம் சிந்தனையில் தெவிட்டாத பேரின்பம் -சிவசக்தி நடனம் சர்வ உலகமும் சர்வேஸ்வரன் இடத்தில் சங்கமம்- சந்தன வாசம் சகலமும் மறக்கவைக்கும் மனோபாவம்- நெய் உருகி ஒளி கொடுக்கும் சுடரொளியில் மூச்சை அடக்கி சிவனிடத்தில் சித்தம் புகுந்து ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எனும் அவன் நாமம் பாடி சிவன் அருளைப் பெறுவோம்.
மனக்குழப்பம் கண்திருஷ்டி தோஷம் அனைத்தும் விலகி வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற கல் உப்பு பரிகாரம்
🌹🍀🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇
மேலும் படிக்கலாம்
கோவிட்19 நோய் தொற்றில் இருந்து நம்மைகபாதுகாத்துக் கொள்ள கூடிய முக்கியமான உணவு முறைகள்
🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_15.html
சொந்தமாக வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at balakshitha