Prathosham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Prathosham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 செப்டம்பர், 2020

பிரதோஷ வழிபாடு

 பிரதோஷ வழிபாடு 



சிவனும் பார்வதியும் ஒன்றிணைந்து ஆடுகின்ற நடன காட்சி கண்டு பேரானந்தம் கொள்ளும் திருநாள் பிரதோஷம் .

பிரதோஷம் என்றால் -பொதுவாக நமக்கு தெரிந்த விஷயங்கள் இதுதான்..

சிவனுக்காக வேண்டுகின்ற ஒரு தினம் தான் பிரதோஷம் மாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் பிரதோஷ நேரம் .

அந்த நேரத்தில் சிவ பூஜையை கண்ணால் தரிசிப்பது மிக சிறப்பு.மனதில் ஒரு காரியத்தை நினைத்து விரதம் இருந்தால் காரியம் ஜெயமாகும் .

சிவனுடைய எதிரே இருக்கும் நந்தியின் காதில் நம்முடைய வேண்டுதலை சொன்னால்  நந்தி பகவான் சிவபெருமானிடத்தில் சொல்ல நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பது  நாம் அனைவரும் அறிந்த விஷயம் .

ஆனால் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய ..அந்த நாளில் அந்த நாளில் பெரியவர்கள் சொல்லி கடைப்பிடித்த ஐதிகமான கருத்தினை  இந்த பதிவினில் பார்க்கலாம்.

சிவனுக்கு  கோபம் வந்தால் நடப்பது ருத்ரதாண்டவம் ..அதற்கு இணையாக தேவியும் கோபத்தில் பத்ரகாளியாக காட்சி தருபவள்.


 இருவருக்கும் அடிக்கடி நடக்கின்ற வாக்குவாதத்தில் கோபம் கொண்டு பூலோகத்தில் வாசம் செய்யும் வந்துவிடுவாள் அம்மையவள்.

 இப்படிப்பட்ட கோபம் கொண்ட தம்பதியர்  கோபம் தணிந்து ..ஒருவர்பால் ஒருவர் அன்பு கொண்டு சேர்கின்ற திருநாளே பிரதோஷம்.

 மனதில் வேறுபாடு கொண்டு பிரிந்த தம்பதிகள் பலர் உண்டு -மனக் குழப்பத்தோடு வாழ்க்கை நடத்தும் தம்பதிகளும் பலர் உண்டு..

 அனைத்து மன குழப்பங்களும் விலகி ஒற்றுமையோடு வாழவேண்டும் என்று விரும்பும் தம்பதியினர் இந்த பிரதோஷ வழிபாட்டை பயபக்தியோடு மேற்கொண்டால்  ஐந்து பிரதோஷத்துக்குள்  அவர்களுடைய மனக் குறை தீர்ந்து வாழ்க்கையில் ஒன்று சேருவார்கள்.

தம்பதியர் ஒன்று சேர சிவபெருமானை வேண்டுகின்ற  அற்புத நாள்தான் பிரதோஷம்.




 பார்வதி தடுமாறி விழுகின்ற பொழுது தாங்குகின்ற சிவன் நமக்கெல்லாம் பாடம் புகட்டுகிறார் ..


ஆயிரம் கோபத்தில் கணவன் மனைவி சண்டையிட்டுக் கொண்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது என்றென்றும் வாழ்ந்து திருமணத்தில் புனிதத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு பாடம் புகட்டுகிறார்.

 இருவரும் ஒருவரை ஒருவர் வாதம் புரிந்து கொண்டாலும் ஒருபோதும் இடையில் யாரையும் அனுமதித்தது கிடையாது என்பது தெய்வம் நமக்கு புகட்டுகின்ற பாடம்.


 அதை என்றும் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் நிச்சயம் கணவன் மனைவி பிரிவு என்பது நேராது.


    "கணவன் மனைவி ஒற்றுமை என்பது இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது கலந்தது.. இருந்தாலும் காற்று கூட புக முடியாத உறவு நம் உறவு -என உறுதி கொண்ட மனம் கொண்டு வாழ்க வாழ்க தம்பதியர் என்றும் வாழ்ந்திடவே" என பாடம் புகட்டும் ஒரு சிறந்த தினம்தான் பிரதோஷம்.


 பிரிந்த தம்பதியர் பிரதோஷம் அன்று   வில்வ இலை அர்ச்சனைக்கு கொடுத்து தொடர்ந்து 5 பிரதோஷங்கள் சிவபார்வதியின் நடன காட்சியை மனதால் கண்டுகளித்து 2 நெய் அகல் தீபம் ஏற்றி வர ..கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் .


ஓம் ஓம் நமச்சிவாய என்று சொல்கின்ற மந்திரத்தில் சிறப்பு..


புழு  மாறி -வண்ணத்துப் பூச்சியாகி-பூச்சி உருமாறி அழகிய  மான் ஆகி - மறைந்து மனிதப்பிறவி ஆகி சிரித்த மழலை தனை  நான் கண்டேன் 'ஓம் நமச்சிவாய 'எனும் நாமம் நாம் உரைக்க - உயர்வாகிய நிலைதனையே. 

அதுபோல நம் சிந்தையில் 

'ஓம் நமச்சிவாய ' எனும் மந்திரத்தின் ஒலி உணர்கையில்.. மனம் பண்பட்டு படிப்படியாக உயர்நிலை நாம் பெற்று பிறவா நிலை பெற்று- என்றென்றும் தெய்வத்தோடு கலந்த உன்னத நிலை பெற்று  மனித பிறவியின் நிறை காண்போம். அதற்கு இந்த பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.

ஓம் சிவாய நமஹ எனும் திருநாமத்தை 108 முறை சொல்வது சிறப்பு .

திருநாமத்தை சொல்லும் போது முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி அமர்ந்து வடக்கு நோக்கி அமர்ந்து சிவபெருமானை மனதில் நிறுத்தி சொல்வது சிறப்பு.

இதனால் ஏற்படும் தெய்வீக பலன் தம்பதியரின் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும் .ஒற்றுமை பலப்படும் .மனச்சுமைகள் குறையும். வாழ்வினில் என்று தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.


 சிவ பார்வதி சொரூபம் சிந்தனையில் தெவிட்டாத பேரின்பம் -சிவசக்தி நடனம் சர்வ உலகமும் சர்வேஸ்வரன் இடத்தில் சங்கமம்- சந்தன வாசம் சகலமும் மறக்கவைக்கும் மனோபாவம்- நெய் உருகி ஒளி கொடுக்கும் சுடரொளியில்  மூச்சை அடக்கி சிவனிடத்தில் சித்தம் புகுந்து ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எனும் அவன் நாமம் பாடி சிவன் அருளைப் பெறுவோம்.

மனக்குழப்பம் கண்திருஷ்டி தோஷம் அனைத்தும் விலகி வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற கல் உப்பு பரிகாரம்

🌹🍀🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇

https://youtu.be/0p5op0-Zjwk


மேலும் படிக்கலாம்

 கோவிட்19 நோய் தொற்றில் இருந்து நம்மைகபாதுகாத்துக் கொள்ள கூடிய முக்கியமான உணவு முறைகள்

🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_15.html

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


Copy rights at balakshitha

செவ்வாய், 7 ஜூலை, 2020

பிரதோஷம் வழிபாடு

                                          மஹா மகா பிரதோஷம் 

"தேவா   சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே -ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்" - திருஞானசம்பந்தர்


மாதத்தில் சிவனுக்கு 2 பிரதோஷம் வருவது நியதி .நமக்கெல்லாம் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கக்கூடிய
அற்புதம் வழிபாடு இந்த பிரதோஷ வழிபாடு.


சிவனை நினைத்து உருகி -மெய்யாகி அவன் நாமம் 'ஓம் நமச்சிவாய' என பாடி- சிவனோடு ஒன்றி நற்கதி பெற்று -வேண்டிய வரங்கள் பெற்று சிந்தை குளிர்ந்து - கண்ட கனவு நிஜமாகி -செல்வச் சிறப்போடு வாழ்வதற்கு- இந்த பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.

 பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று வழிபட்டால் மிகவும் சிறப்பு

இன்றைய சூழலில் வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே பிரதோஷத்தை முறைப்படி விரதம் இருந்து வழிபடலாம் .


தெய்வம் கொடுத்த இந்த மனிதப்பிறவியில்  கடந்த காலத்தில் வந்த துன்பங்களை  முற்றிலும் மறந்து வரும்- நிகழ்காலம் மிகவும் சிறப்பான முறையில் அமைவதற்கு இந்த பிரதோஷ வழிபாடு மிகுந்த பலனை அளிக்கும்.


எளிமையான முறையில் விரதம் இருக்கும் முறை..

1 - பிரதோஷம் அன்று கங்கா ஸ்நானம் செய்வது சிறப்பு ( ஒரு குவளை நீரில் 'ஓம்' என எழுதி அந்த புனித நீரை  தலையிலே  கங்காஸ்நானமாக நினைத்து நீராடுதல்)

2 - பிரதோஷம் அன்று புலால் உணவை தவிர்ப்பது நல்லது

3 -  பிரதோஷம் அன்று மாலை நான்கு முப்பது மணிக்கு மேல் ஆறு மணிக்குள் இந்த பூஜை செய்வது சிறப்பு.

 4 -   ஐந்து முக விளக்கு ஏற்றப்பட வேண்டும் -ஓம் நமச்சிவாய எனும் தெய்வீக ஓசை வீட்டிலே ஒலிப்பது தெய்வீக பலனை கொடுக்கும்.

 5- தேவையான பொருட்கள் -மஞ்சள் குங்குமம்- விபூதி - சந்தனம்-மலர்கள்  வில்வ இலை -தூபம் கற்பூரம்- நறுமண வத்திகள்- தேங்காய் வெற்றிலை பாக்கு- பால் பழம்.

 பூஜை அறையை மலர்களால் மிக அழகாக அலங்கரித்து ஐந்து முக விளக்கை ஏற்றவும். நறுமண பத்திகள் வாசனையோடு சிவனின் நாமம் ஒலிக்க பூஜையை ஆரம்பிக்கலாம்.

பிரதோஷம் நேரத்திலே சிவபெருமான் என்ன செய்து கொண்டிருப்பார்! 🌹🍀👇
http://balakshitha.blogspot.com/2018/07/blog-post_15.html

சிவனுக்கு உகந்த வில்வஇலையின் சிறப்பு 🙏🙏🙏 🌹🍀🌹🍀🌹🍀👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/blog-post_8.html

ஒரு  மனைவைத்து அதன் மேல் வில்வ இலைகள் மலர்களால் அலங்கரித்து 
சந்தனத்தால் லிங்கம் செய்து குங்குமப் பொட்டிட்டு சிவபெருமான் ஆக மனதார வேண்டிக்கொண்டு லிங்கத்தை வில்வ இலையின் மேல் வைக்கவும்.


தேங்காய் உடைத்து  இனிப்பு பிரசாதம் பால் பழம் வில்வ இலை அனைத்தும் வைத்து அந்த மங்கல பூஜையை கண்டு கண்களால் மகிழ்ந்து மனதால் நிறைவு கொண்டு..

 வடக்கு நோக்கி அமர்ந்து சிந்தையை சிவனிடத்தில் செலுத்தி -இரு கை கூப்பி -கண்களை மூடி -ஓம் நமசிவாய எனும் நாமம் தனை 108 முறை சொல்லவும் .




அடுத்து உங்களுடைய நியாயமான எண்ணங்களை ஆசைகளை ஐந்து முக தீபத்தினை கண்களினால் உற்றுநோக்கி சிவனிடத்தில் வைக்கவும்.

கற்பூர ஆராதனை செய்து விரதத்தை முடிக்கலாம் .இதேபோன்று மூன்று பிரதோஷங்கள் பூஜையை நல்ல முறையில் நிறைவேற்றி சிறப்பாக செய்து உங்கள் வேண்டுதல்களை வேண்டிக்கொள்ளுங்கள் .

சொந்தவீடு மனை வாங்குவதற்கு 10 தெய்வீக வழிபாடுகள் 🙏🍀🌹🌹👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

நினைத்த காரியம் அத்தனையும் ஜெயமாகும் .சிந்தையிலே சிவனை நிறுத்தி -சித்தாந்த வேதங்கள் பாடி மனம் முழுதும் மங்களம் நிறைய தடைப்பட்ட திருமணம் கூட- கணவன் மனைவி இனிதே வாழ -குழந்தை பாக்கியம் நிலைக்க -கடன் பிரச்சனை விலக -செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ்வதற்கு  பிரதோஷம் கை மேல் பலன்-வெற்றி கிடைக்கும்.

 முறையாக பூஜை செய்து வாழ்வில் வளம் காண்கவே- காண்கவே  கண்டு மனம் மகிழவே- செல்வச் சிறப்போடு வாழ்ந்து வாழ்க்கை பயனை
 அடைகவே.

ஓம் நமசிவாய சரணம் சரணம் சரணம்

Copy rights at balakshitha

வெள்ளி, 6 மார்ச், 2020

பிரதோஷம் அன்று விரதம் இருக்கும் முறை‌ பகுதி-1



பிரதோஷம் அன்று விரதம் இருக்கும் முறை

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

பிரதோஷம் அன்று விரதம் இருக்கும்  முறை..

அன்றைய தினத்திலே சிவபெருமானின் அருளை பெறுவதற்கு ஒரு யோகியின் தவத்தை உள்வாங்குவது மிக சிறப்பு.

 ஒரு யோகியின் தவம் என்பது..



 ஒரு நிமிடம் மனதை ஒடுக்க-2வது நிமிடம் ஈசனை நினைக்க- 3வதுநிமிடம் அவன் நாமம் ஓத -4வது நிமிடம் அகம்பாவம் மறைய- 5வது நிமிடம் ஆணவம் விலக  ..

6வது நிமிடம் இறைவனை அகத்தில் இருத்தி-7வது நிமிடம் ஐந்து முக விளக்குகள் சுடர் விட்டு எரிய- எட்டாவது நிமிடம் கணீர் எனும் அமுதமான மணியோசை எழும்ப- 9வது  நிமிடம் ஆராதனை அழகாக தெரிய..

10வது நிமிடம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்- இறந்து மடியும் இம்மனித பிறவியிலே ஆத்மாவை உன் வசம் ஆட்கொள்ள -கண்டு கொண்டேன் என் பெருமானே.

 இது ஒரு யோகியின் தவம் அன்றோ!


 அதே நேரத்தில் நாம் சொந்த பந்தத்தில் ஆட்கொண்டு- கவலைகள் பல கொண்டு -இன்பத்தில் இனிமைகண்டு -கடமையில் கண் கொண்டு -வாழ்கின்ற போதிலும்..

 பிரதோஷ வேளையில் யோகியின் தவத்தை நாம் உள்வாங்கி -

ஈசனின் நாமம் தனை உயிர் என நினைத்து-

 மனதாலும் உடலாலும் உண்மையாய் விரதம் இருந்து-

 ஈசனை இரு கை கொண்டு  வணங்கினால்...

 பிரதோஷ வேளைகளில் கைலாயத்தில் மிக ஆனந்தமாக சிவன் சக்தியோடு சேர்ந்து சிவசக்தி கோலத்திலே  நடனமாடி கொண்டிருக்கும் அற்புதமான தருணத்தில்..

 நம்முடைய வேண்டுதல் அனைத்தையும் உடனே நிறைவேற்றுவான் என் பெருமான்.

பிரதோஷ நாளன்று விரதம் இருந்தால் ஏற்படும் சிறப்புகள்..



 எம்பெருமான் நம் எண்ணங்களை புனிதப் படுத்துவான். நாம் காண்கின்ற காட்சிதனை மலர வைப்பான் -செல்வ கடாட்சத்தை அள்ளி கொடுத்திடுவான்- குடும்பம்  மகிழ்வோடு இருப்பதற்கு அருள்புரிவான்.

எம் ஈசனின் பாதமே சரணம் சரணம் சரணம்.

கோபத்தை தணிக்க  எம்பெருமான் முருகன் காட்டிய வழி


https://balakshitha.blogspot.com/2021/07/blog-post_28.html

திருமணத்திற்கு மாங்கல்யம் எந்தநாள் எப்படி யாரிடம் செய்வதற்கு கொடுக்க வேண்டும்


https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.htm



Copy rights at balakshitha

வெள்ளி, 8 நவம்பர், 2019

பிரதோஷம் அன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை சிறப்பு

பிரதோஷம் 


சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையில் அர்ச்சனை செய்யும் போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

 கற்பக மரம்- சுபிட்சம் மரம் -தெய்வீக மரம் என மிகவும் புகழ்பெற்ற சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த மரமே வில்வமரம் .


 வில்வமரம் பிறந்த வரலாறு..


மனிதர்களின் தலையெழுத்தை எழுதுகின்ற பிரம்மன் இடத்திலே அவ்வெழுத்து அனைவருக்கும் இனிதாக அமைந்திட வேண்டி- வில்வமரத்தை பிரம்மனோ உருவாக்க " தெய்வீக மரத்தை வணங்குவோர் அனைத்து செல்வமும் பெற்று சிறப்போடு வாழியவே "என  வேண்டி அன்னை மகாலட்சுமியானவள்  தம்முடைய திருக்கரங்களால் அந்த தெய்வீக மரத்தை நட்டாள்.


 அம்மரமே சுபிட்சமாகி தெய்வீக மரமாக உயர்ந்து நிற்க -அந்த வில்வ மரத்தின் இலைகளை பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வாழ்க்கையில் அனைத்து சிறப்புகளையும் பெறலாம்.

 வில்வ மரத்தின் சிறப்புகள்..



   சிறப்பு -1 மும்மூர்த்திகளும் ஒன்றிணைந்து காட்சிதரும் வில்வத்தை அர்ச்சனை சிவனுக்கு செய்கையில் செய்த வினைகள் யாவும் விலகி விடும் .

சிறப்பு- 2  மும்மூன்று இலைகள் சேர்ந்தவாறு காட்சி தரும் வில்வ இலையிலே இடதுபக்கம் பிரம்மா வலதுபுறம் விஷ்ணு -நடுவில் சிவன் என காட்சிதரும் வில்வ இலையால் பிரதோஷத்திலே அர்ச்சனை செய்து வழிபட்டால் குறைகள் யாவும் அகன்று விடும் .

சிறப்பு -3   லட்சம் தங்க மலர் கொண்டு அர்ச்சனை செய்த பூஜா பலன் அனைத்தும் பிரதோஷத்திலே சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கிடைத்து- தங்கமலர் கொண்ட தாமரையாள் மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்கும்.

சிறப்பு -4 வாழ்க்கையில் சுபீட்சம் கிடைத்திடவே - பிரதோஷத்தில் வில்வ இலையால் சிவனுக்கு சிவார்ப்பணம் செய்கையிலே 108 சிவாலயங்கள் சென்ற புண்ணிய பலனை அடையலாம். 

 சிறப்பு- 5 வில்வ இலை எனும் தெய்வீக இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே கங்கா என்னும் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்த பலனை அடையப் பெற்று நோய் நொடிகள் அனைத்தும் அகன்றுவிடும். 

சிறப்பு -6 வில்வ மரத்தில் உள்ள கிளைகளே வேதங்களாக- இலைகளே சிவ ரூபமாக -வேர்களே கோடி கோடி ருத்ரர்கள் ஆக உயர்ந்து நிற்கும் வில்வ மரத்தின் இலைகளை சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே மூன்று ஜென்மபாவம் விலகி புண்ணியம் பலன்கள்தான் பெற்று வாழ்க்கையில் நாம்  சிறப்பை அடையலாம்.


 சிறப்பு -7 ‌ அனைத்து செல்வமும் பெறுவதற்கு அஸ்வமேதயாகம் செய்ய வேண்டுமெனில் -இருகை சேர்த்து வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைத்து விடும் .

பிரதோஷம் அன்று செய்யக்கூடிய வழிபாட்டு விரத முறைகள் 🙏🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/07/1-8-2020.html

திருமண தடைகள் நீங்க அற்புதமான சிவன் பிரதோஷ வழிபாடு 🙏🌹🍀🌹👇
http://balakshitha.blogspot.com/2019/05/blog-post_30.html


 சிறப்பு - 8 ‌ பிரதோஷ தினத்தில்- கணப்பொழுதும் மறவாது சிவாயநம எனும் மந்திரம் ஜெபித்து -வில்வ இலைகளை சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே -காசி ராமேஸ்வரம் சென்ற பலன் அனைத்தும் கிடைத்துவிடும் . 

 சிறப்பு-9 108 சிவாலயங்கள் சென்ற பலன் கிடைத்திடவே -சிறப்பான வாழ்க்கை வாழ்க்கை நல்கிடவே பிரதோஷ தினத்தன்று -வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்து -புண்ணியப் பலனை அடையலாம்.

சொந்த வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் 🙏🌹🍀👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

சிறப்பு-10 ‌மனதிலே பல சலனங்கள் இருப்பினும் -குடும்பத்தில் பல குறைகள் இருப்பினும் -சிந்தையிலே பல குழப்பங்கள் இருப்பினும் -மனதில் பல காயங்கள் இருப்பினும் பிரதோஷத்தன்று தளராத உறுதியோடு -ஓம் சிவாய நமஹ திரும்பத் திரும்ப சொல்லி வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே வாழ்க்கையில் வழி நடத்தும் பாதைதனை அவன் காட்டி மலர்கின்ற வாழ்வுதனை கொடுப்பான்- எம்பெருமானின் பாதமே சரணம் சரணம் சரணம்

உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்க 🌹🍀🙏🙏

Copy rights at balakshitha