பெண்கள் அனைவரும் இயற்கையிலேயே அழகின் இலக்கணம் படைத்தவர்கள்
பெண்களின் கண்கள் அழகு என்பதை விட- கண்களில் தெரியும் ஒளி அழகு .
கருமை நிறம் அழகு என்பதைவிட களங்கம் இல்லா உள்ளம் அழகு.
சிவந்த உதடு அழகு என்பதை விட- அதில் தெரியும் உண்மை அழகு .
இடையழகு என்பதை விட - நேர்மையின் நடை அழகு.
வில் போன்று வளைந்த புருவம் அழகு என்பதை விட - தோல்வியிலும் துவளாத பாவனையை அழகு .
கவிதை எழுதுகையில் சிந்தனை மாறுவதேன்! கேள்விக்கு விடை முதலில் என மனம் சொல்ல, பகிர்கின்றேன் பதிவுதனை...
இன்றைய காலகட்டத்தில் வேலை சுமை முழு நேரமும் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலைப் பார்ப்பது செல்போனில் கதிர்வீச்சு போன்றவற்றால் கண்களுக்கு பாதிப்பு கண் புருவங்களில் முடி உதிர்தல் நிகழ்கின்றது
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மகள்களுக்கு தாயின் அறிவுரையின் சில துளிகள்...
1 - ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள் .
2- தினமும் 10 நிமிடம் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கு செலவு செய்யுங்கள்.
3 - கம்ப்யூட்டர் செல்போன், கண்களின் வேலை என இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு பத்து நிமிடம் என இடைவெளி கொடுங்கள் உங்களை நீங்களே ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்.
4 - நம் உடல், கண்கள் , மனம் அனைத்தின் செயல்பாடுகளுக்கும் மிகமுக்கியமானது தூக்கம் . இரவு அதிக நேரம் கண் விழிக்காதீர்.
5 - மன அழுத்தம் என்பது இடையிடையே வந்து போகும் இடைவேளை எனினும் இதமான நினைவுகள் இடமளித்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்
ஐந்து கருத்துக்களும் அனைவரும் பின்பற்ற... அடுத்து வரும் நாட்களில் யாவும் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வழி வகுக்கும்
கண்களின் புருவத்திற்கு ட்ரிம் செய்து அழகுபடுத்தும் கலை என்பது இப்பொழுது பார்ப்பதற்கு அழகு என கூறலாம். ஆனால் அது பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்.
இதனால் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புண்டு புருவத்தின் தோலில் சிவந்து , நமக்கே தெரியாமல் புண்கள் உருவாகி வேர்க்கால்களில் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு மோசமான சூழ்நிலைகள் வரக்கூடும்.
கண்களின் புருவத்தில் உள்ள நரம்புகள் எதிர்காலத்தில் கண்டிப்பாக பாதிக்கும்.
வளைந்த புருவத்தில் விளக்கெண்ணெய் சிறிது தொட்டு இருபுருவத்திலும் இதமாய் வளைத்து சில நிமிடங்கள் தினம் செய்தால் குளிர்ச்சி தரும்.. புருவ முடிகள் மிக அழகாக கருமை நிறத்துடன் காட்சிதரும் என அதன்படி செய்து முன்னேற்றம் கண்டு கண்ணாடியில் களித்தது என் காலம்.
விளக்கெண்ணெயோடு தேங்காய் எண்ணெயும் சிறிது சேர்த்து புருவத்தில் தடவி அழகை மேம்பட செய்தது என்னுடைய மகளின் காலம்.
விளக்கெண்ணை தேங்காய் எண்ணெயோடு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து வெங்காயச்சாறு ஒரு சொட்டு மேலும் சேர்த்து தடவ , புருவத்தின் அழகு முகத்தின் பொலிவை எடுத்துக்காட்டும் என்று இன்று செய்து வருவது என் பேத்தியின் காலம்.(ட்ரெண்டிங் காலம்)
காலங்கள் மாறலாம்.. நம்முடைய கலாச்சாரம் ஒருபொழுதும் மாறக்கூடாது அந்த நாளில் அம்மா நமக்கு நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே .. ஒரு பியூட்டி பார்லர் உருவாக்கி தந்தாள். அதன் வழியில் நாம் நம்முடைய தலைமுறையினருக்கும் சொல்லி கொடுப்பது மிகவும் அவசியம்.
அடிக்கடி புருவத்தின் நரம்புகள் பலவீனம் செய்யாதீர். அவசியம் இருந்தால் மட்டுமே செய்க. செய்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகம் அலம்பி, சிறிது தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் ஆலிவ் ஆயில் கலந்து புருவத்தில் தடவி விடுங்கள் .பாதிப்புகளை தடுக்கலாம்.
மூத்தோர் சொன்ன சொல்லும் கனிந்த நெல்லிக்கனியின் சுவையும் முதலில் கசக்கும் துவர்க்கும் , முடிவில் இனிக்கும் என்பது அறிந்து அவர்களுடைய சொல்லின் பொருளுணர்ந்து அதன்படி கடைப்பிடித்து மகிழ்வு காணுங்கள்.
தினமும் யோகா பயிற்சியோடு சிறிது நேரம் உறவாடி, புதினா எலுமிச்சை பழ சாறு கடலை மாவு (வீட்டில் இருக்கும் தக்காளி,கேரட், ஆப்பிள்சாறு) தினம் எடுத்து முகம் மலர பரவ செய்து பொலிவான முகம் பெற்று, கஸ்தூரி மஞ்சள் நறுமணம் உடலினில் கமழ நீராடி ,