செவ்வாய், 30 ஜூன், 2020

திருக்கருகாவூர் கர்ப்ப ரட்சாம்பிகை அம்மையின் மகத்துவம்



திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில்

குழந்தை வரம் வேண்டும் .அந்த வரம் கிடைத்து- கரு கலையாது நிலைக்க வேண்டும். அந்தக் கரு கனிந்து சுகப்பிரசவம் நடக்க வேண்டும்- என நினைப்போர் அனைவரும் மனமுருக வேண்டி வழிபட வேண்டிய அற்புத தலம் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை .


கோவில் திருத்தலம் திருக்கருகாவூர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள- இந்த திருத்தலத்தில் தல மூர்த்தியாக முல்லைவனநாதர் புற்று மண்ணால் ஆன சுயம்பு வடிவில் காட்சி தருகிறார்.

அந்த திருத்தலத்திலே அம்மை கற்பரட்சாம்பிகை மிக அழகாக வீற்றிருக்கின்றாள்.


கர்ப்பரட்சாம்பிகை வரலாறு..


 அழகான முல்லைவனம் -ஏழ்மையான தம்பதியர்  -வேதியை- நித்துருவர்

 அன்பு எனும் அழகான குடில்
கட்டி - பாசம் எனும் நிழலில் பரிவுகளை பரிமாறி ஒருவரை ஒருவர் மனம் கோணாது -புரிதல் எனும் இலக்கணம் கண்டு வாழ்ந்து வந்தனர்.

 ஆயினும் ஒரு கவலை ! குழந்தைபேறு காணாது துளிர்த்த துன்பம் தனை வெளிக்காட்டாது வாழ்ந்து வந்தனர் தம்பதியர் .

வறுமை எனும் துன்பத்தை விட கொடியதன்றோ.. மழலைமொழி காணாத வாழ்வுதனை நினைக்க நினைக்க அவர் காணா வண்ணம் இவளுமாய்- இவள் காணா வண்ணம் அவருமாய்  கண்களை துடைப்பது வாடிக்கையாகவே ஆனது .


முல்லை வனத்தில் ஒரு அழகிய அம்மை எழுந்தருளி வீற்றிருக்க- அந்த இறைவியை தினமும் மனமுருக வேண்டி வர..கருவுற்றாள் வேதிகை.

கனவுகள் பல காண்கின்றாள் ஆனந்தமாய் கண்ட கனவுகள் அனைத்தும் அரை நிமிடத்தில் காணாமல் போனது.

 ஊர்த்துவ பாதர் எனும் முனிவர் வந்து பிச்சை கேட்க- கருவுற்றிருந்த வேதிகை எழுந்திருக்க முடியாது சில நிமிடம் தடுமாற- நிலை தெரியாத முனிவரோ இட்டார் ஒரு சாபம்..
அலறுகின்றாள் வேதிகை ..

பக்தையின்  குரல் கேட்டு ஓடி வருகின்றாள் அம்மை அவள். கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைக்கின்றாள் . குழந்தை அழகாக உருவானது.

 உருவாய் மலராய் கனியமுதாய் மலர்ந்த குழந்தையை அம்மையிடம் ஒப்படைக்கிறாள்.அந்த தலத்திலேயே வேதிகையின்  வேண்டுதலுக்கு இணங்கி அமர்கின்றாள் .இன்றும் வீற்றிருக்கின்றாள்.


 குழந்தை வரம் வேண்டி போவோர் அனைவருக்கும் - மனம் இனிக்க இனிக்க குழந்தை வரம் அருள்கின்றாள்.

குழந்தை செல்வம் பெற குலதெய்வ வழிபாடு🌹🙏🌹🍀🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_25.html

 வெளியே செல்ல முடியாத இந்த சூழலில் -வீட்டில் இருந்தவாறே குழந்தை வரம் வேண்டி திருக்கருகாவூர் அம்மையை வேண்டி வந்தால் நினைத்த காரியத்தை ஜெயமாக  திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை .


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மையின் படத்தினை பிரின்ட் அவுட் எடுத்து பூஜை அறையில் வைத்து செவ்வாய்தோறும் 2 நெய் தீபம் ஏற்றி
வடக்கு நோக்கி அமர்ந்து
' ஓம்  கர்ப்பரட்சாம்பிகை போற்றி' எனும் 108 போற்றி பாடலை தொடர்ந்து -ஒன்பது வாரங்கள் வேண்டி வழிபட்டால் அம்மை அவள் மனம் கரைந்து குழந்தை வரத்தினை அருள்வாள்.

சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து  10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

அம்மையிடம் நம் வேண்டுதலை வைத்து -மனம் உருகி வேண்டி

கனிந்த மழலைதனை  கண்ணை இமைபோல் காத்து - நற்பண்பு எனும் தேனூட்டி திகட்டாத செல்வமென வளர்த்து  உலகம் போற்றும் உத்தமனாய் உருவாக்கி -அவ் இன்பம் கண்டு வாழ்ந்த பயனை அடைந்து -வாழையடி வாழையாக வாழிய வாழிய சிறப்புற வாழியவே.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்