தெய்வ கடாட்சம் பொருளான தர்ப்பையின் மகிமை
கிருமித்தொற்று உலகையே அச்சுறுத்தும் இந்த சூழலில் ஒவ்வொரு வீட்டிலும் தெய்வீக மூலிகையான தர்ப்பை இருப்பது அவசியம் இருத்தல் நலம் .
ஒரு மனிதன் ஆணவம் என்னும் மலத்தை அறுத்து -பணிவிலே வளைந்து கொடுக்கும் தன்மையில் சிறந்து விளங்க வேண்டும்.. எனும் தத்துவம் கொண்டு விளங்கும் ஒரு அற்புதமான தெய்வீக மூலிகையே தர்ப்பை புல்.
பூஜை அறையிலே தர்ப்பையை வைத்து இருந்தால் வீட்டினிலே தோஷங்களும் தீய சக்தியும் விலகி தெய்வத்தின் அருள் என்றும் நம்மை காக்கும்.
திருப்பதி ஏழுமலையான் பத்மாவதி தாயாரின் திருமண காட்சிகளை நம் கண்முன்னே முதலில் காட்சி தரும் ஒரு மங்கல பொருளே தெய்வீக சக்தி கொண்ட தர்ப்பை.
மகாலட்சுமி கடாட்சம் பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம்🌹🍀🌹🌹👇👇👇
கிரகண சமயத்திலும் கிரகணம் முடிந்த பிறகு உணவின் மீது தர்ப்பைப் புல்லை போட்டு விட்டால் தோஷம் நீங்கி சுபம் கிடைக்கும்.
ஏழு தர்ப்பை தம் வசம் கொண்டு இனிதே லோகத்தை ஆண்டார்கள் தேவர்கள் அன்று..
அந்த தேவமூலிகையின் நுனியில் பிரம்மனும் - மத்திமம் விஷ்ணுவும்- நுனியிலே ருத்ரனும் அமர்ந்திருக்க -அந்த தர்ப்பை நம் வீட்டில் இருந்தால் என்னென்ன பயன்கள் என்பதை அறிந்து கொள்வோம்.
கடவுள் நமக்கு கொடுத்த ஒரு பெரிய வரமான தர்ப்பையை நம் கையில் வைத்துக் கொண்டு விளக்கேற்றி பத்து நிமிடம் அமர்ந்து கொண்டு நாம் மனதில் நினைக்கும் காரியங்களை வேண்டினாலே போதும்.
தெய்வத்திற்கும் நமக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து தெய்வ சக்தி பல மடங்கு பெருகி-நினைத்த காரியம் ஜெயமாகும்.
கண் திருஷ்டி தோஷங்கள் விலக கல்லுப்பு பரிகாரம் 🍀🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html
எலுமிச்சை பழத்தில் ஐந்து விதமான பரிகாரங்கள் 🌹🍀🌹🌹🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/part-2.html
கிருமி தொற்று அனைவரையும் அச்சுறுத்தும் இந்த சூழலில் -தர்பை ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருத்தல் நலம் .
நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் தர்ப்பையை அவசியம் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
மனக்குழப்பங்கள் விலக -சுபிட்சம் நிலவ -பிணி அகல -சக்தி கிடைக்க என்றும் புத்துணர்ச்சியோடு இருப்பதற்கு மிக அருமையான வழிமுறையை பார்க்கலாம்.
சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து 10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
தாயத்து கடைகளில் கிடைக்கும் தாயத்தும் -தர்ப்பைப் புல்லும் வாங்கி வைத்துக் கொள்ளவும்.
சிறப்பு- 1 சுபநாள் வெள்ளிக்கிழமை ஏற்றி வைத்த தீபம் மங்களம் உண்டாகட்டும்.
சிறப்பு - 2அந்த மங்கலகரமான காலை ஏழு மணியிலிருந்து 8 மணிக்குள் சுக்கிர ஓரையில் -ஒரு தர்ப்பைப் புல் தாயத்து -விபூதி எடுத்து தாம்பாளத் தட்டில் வைக்கவும்.
சிறப்பு- 3 தீபத்தை கண்டு தெய்வத்தோடு மனம்
ஒன்றி உங்களுடைய வேண்டுதலை வைக்கவும்
சிறப்பு -4 கையிலே ஒரு சிட்டிகை விபூதியை எடுத்து 'ஓம் நமசிவாய' என்று சொல்லி தாயத்தின் மேல் அர்ச்சனை செய்யவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சிட்டிகையாக விபூதியை எடுத்து 11 முறை 'ஓம் நமசிவாய 'என்று சொல்லி தாயத்தின் மேல் அர்ச்சனை செய்யவும்.
அந்த அர்ச்சனை செய்த விபூதியை தாயத்தினுள் போட்டு- தர்ப்பைப் புல்லும் தாயத்துக்குள் அடங்குமாறு செய்து மூடிவிடவும் .
அந்த தெய்வீக தாயத்தில் குங்கும பொட்டு வைத்து ஒரு உங்களுக்கு சாதகமான கருப்பு அல்லது சிகப்பு கயிற்றில் அல்லது செயின் போன்றவற்றில் கட்டி -கழுத்தில் அணிந்து கொள்ளலாம் .
நினைத்த காரியம் ஜெயமாகும். பயம் குழப்பம் அனைத்தும் விலகி தைரியம் கண்டிப்பாக உருவாகும்.தொழில் முன்னேற்றம் -நிம்மதி -சந்தோஷம் ஒற்றுமை அனைத்தும் கிடைக்கும்.
ஒரு செயல் தடைபட்டால் நாம் மனம் சஞ்சலம் அடையும் தருணங்களில் இந்த தாயத்தை கட்டிக்கொண்டால் மிக சிறந்த ஒரு தெய்வீக சக்தி கிடைத்து வாழ்க்கை சிறப்புற வழிவகுக்கும்.
தர்ப்பையின் பயனை உள்ளுணர்ந்து தெய்வீக சுவாசம் கலந்து நற்பண்புகளோடு கரைந்து நற்செயல்கள் புரிந்து நலமோடு வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைவோம்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக