அன்றைய காலத்து திருமணம் பெரியவர்கள் செய்து வைத்த முறை வழிமுறைகளை காண்பதில் இனிது காண்போம்
நம் முன்னோர்களின் காலம் பழமையான பழுத்தகாலம்
பசுமையான தளிர் காலம்
முன்பு நடந்த நிகழ்வுகளை
எழுத்து சுவடிகளில்
பதிக்கும் காலம்*
அந்த முத்தான கருத்துக்களை
நாம் அறிந்து அவர்களுடைய சிறப்புகளை அறிவோமே*
தாலி எனும் புனிதமான பெயர்
ஏன் வந்தது? என்பதற்கு நம் முன்னோர்கள் சொல்லும்
அழகான கருத்து..
மணமகன் *மணமகள் *மனமறிந்து பெற்றோரோ! மணமுடிக்க
முடிவெடுத்து -பெரியோர்களின் முன்னிலையில் சுப நாள்* குறித்து
அன்று முதல் ஆனந்தம் -அலங்காரம் அனுபோகம் -அனுதினமும் நடந்தேற அனைவரையும் வரவேற்று திருமணத்திற்கு முதல் நாளே
நடத்துகின்ற ஏற்பாடோ!
' நீண்டு வளர்ந்த
பனை மரத்தைப் போன்று
மணமக்கள் நீடூழி வாழ வேண்டும்* பனை மரத்தின் நுங்கு போன்று மணமக்களின் வாழ்க்கை
குளிர்ச்சி மிகுந்த வாழ்க்கையாக அமைய வேண்டும் 'என்பதை
கருத்தில் கொண்டு பெரியவர்கள் திருமணத்திற்கு முதல் நாள்
காலையில தால ஓலையில்
அதாவது பனை ஓலையைதான்
தாலம்னு சொல்வாங்க..
தாளம் ஓலையில
மஞ்சளை பூசி
பிள்ளையார் சுழியிட்டு
' இன்னார் மகளை இன்னார் மகன்
மணந்தார் வாழ்க *'என்று
என்று எழுதி சுருட்டி
மஞ்சள் கயிற்றில் சேர்த்து
மணமகன் மணமகள் கழுத்தில் கட்டுவார் 'தாலம் 'என்ற சொல்லே
பிற்காலத்தில் தாலி* என்று
பெயர் மாறியது.
இரு மனமும் ஒரு மனமாகி
மணமக்கள் வாழியவே*
பனை மரத்தின் தத்துவத்தை
புரிந்து கொண்டு
வாழ்வில் இனிமை
நிறைந்திட
வாழியவே*
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக