வில்லொடித்த இராமனோ
வெற்றி வீரனாக *
அரங்கினிலே காட்சிதர -மலர்ந்த வதனதிலே
நாணத்தை சுமந்தவளாய்
சீதா தேவியோ
மலர்கொண்டு நடந்துவர
ஆனந்த கானமொன்று அரண் எங்கும் ஒலி எழுப்ப
மலர் மழை பொழிந்திடவே தேவர்களும் வாழ்த்திடவே
சுற்றத்தார் அனைவரும்
மெய்மறந்து மனமகிழ்ந்திடவே!
பத்தரை மாற்று தங்கமே
வருக வருகவே!
மஞ்சள் நிற மேனியளே
வருக வருகவே !
குனிந்த தலை நிமிராது
வருக வருகவே !
தோழியரின்
புடைசூழ
வருக வருகவே!
மேளதாள இசை ஒலிக்க
வருக வருகவே!
பொறுமையின் இலக்கணமாய்
வருக வருகவே!
ஆயிரம் காலத்து பயிராக
வாழிய வாழியவே*
இளமை குன்றாத இனிமை
நிறைந்திட வாழிய வாழியவே*
என அனைவரும் வாழ்த்திட
மலர்களெலாம் ஒன்று சேர்ந்து மாலையாக
மங்கள கழுத்தினிலே
அலங்கரிக்க
சீதாதேவி வந்து மணமகளாக
ராமனின் பக்கத்தில் அமர்கின்றாள்
தாமரை முகம்
கொண்டவனே ஸ்ரீராமனாக*
தன் மலர் கரங்களால்
புனிதமான தாலியை
இனிதே எடுத்த தருணத்திலே..
புவிமகள் கழுத்தினிலே அரங்கேற
இருவரின் மனமும்
இன்பமயம்
நிறைந்திருக்க
சீதாராமன்
திருமணம் மிக இனிதாக
நடந்தேறியது*
திருமண பந்தம்
என்பது
தெய்வீக பந்தமாகும் *
அக்னி சாட்சியாக
மேளதாளங்கள் முழங்க
வேதங்கள் ஒலிக்க ..
சொந்தபந்தங்கள் வாழ்த்த
ராமபிரான் சீதா தேவி
திருமணம்* இனிதே
நடக்கின்றது .
இதுநாள் வரை
ரகு குல ராமனாக *
தசரதர் ராமனாக*
கோசலை ராமனாக*
காட்சி தந்த இராமபிரான்
இப்போது சீதா தேவியை
கைப்பிடித்து
சீதாராமனாக
காட்சி தருகின்றார்.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக