வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஆனந்ந தாண்டவ விநாயகர்

       விநாயகருக்கு
 ரொம்ப நாளா 
   ஒரு ஆசை.. எவ்வளவு
 அழகா நம்ம தந்தையார்
    சிவபெருமான் 
   நடனம் ஆடரார்!

    நம்ம அம்மா
 பார்வதி தேவி மட்டும்
 என்ன சும்மாவா !
    அவங்களும்
 ரொம்ப அழகா நடனம்
ஆடுறாங்க  ..அவங்களுக்கு 
  மகனாக பிறந்து
   நமக்கு மட்டும் ஏன் 
இந்த நாட்டியம் வரவே 
மாட்டேங்குது !கவலையோடு அமர்ந்திருக்கார் 
நம்ம கணேசன்.. 

   இதைக் கண்ட 
     நந்திதேவர் !
   அருகிலே வந்து
   காரணத்தை கேட்க..
   தன்னோட மனக்கஷ்டத்தை        விநாயகப்பெருமான் கூற    நந்திதேவருக்கு  உடனே
 சிரிப்பு வந்துடறது ..

    இது என்ன 
   பெரிய விஷயமா !
    என்ன சொல்லிணடே
     விநாயகரின்  காதில் 
    ஏதோ சொல்ல
    விநாயகர் முகம் 
    அப்படியே
     மலர்ந்து போயிடறது! 
          
அப்படி என்னதான் 
    சொல்லியிருப்பார் நந்தி தேவர் !
   இந்தப் பாட்டுல ஏதாவது விடை      தெரியுதான்னு பார்க்கலாம் ..

சுற்ற சுற்ற என் 
மனமும் சேர்ந்து சுற்ற* 
சுற்ற சுற்ற தீவினைகள் 
அகன்று போக* 

சுற்ற சுற்ற நோய்
நொடிகள் அற்றுப் போக *
சுற்ற சுற்ற துன்பமெலாம்
 தொலைந்து போக*

 சுற்ற சுற்ற சோம்பல்
 எல்லாம்தோற்று
போக *

சுற்றியது யார் 
என யான் மலைத்து நிற்க 
வேலன் இன்றி மயிலும் 
ஏன் தனித்து இருக்க !
விநாயகரின் பொற்கரமோ  
வேலனின் பொன்னுடல் 
பற்றியிருக்க 
ஆனந்தத்தோடு
 இருவரும் சேர்ந்து 
சுற்ற அதைக் கண்ட 
நம் மனமும்  சுற்றதுவே*

விநாயகர் வேலவனை 
தமிழ் கைகளாலும்
 வாரி அணைத்து
கொண்டு கைலாயத்தை
 சுற்றி வந்த அந்த 
அற்புதமான நடன
காட்சியை லோகத்தில் 
இருந்த அனைவருமே 
ஆவலோடு கண்டு 
களித்தனர் .நடனமாடிய 
திருப்தியோடு 
விநாயகரின் ஆசையும் நிறைவேறிவிட்டது*

 ஆலயத்தை 
பயபக்தியோடு 
சுற்றி வாருங்கள் 
அனைத்து துன்பங்களும் 
பறந்தோடும்* உடல் 
சோர்வுக்கு மருந்து
 கொடுக்கலாம் -ஆனால் 
மன சோர்வுக்கு 
என்றுமே மருந்து
 கிடையாது
 சுறுசுறுப்பாய் இருங்கள் *
சுகமான வாழ்க்கை
 தானாக உங்களை
 தேடிவரும்.


Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக