விநாயகருக்கு
ரொம்ப நாளா
ஒரு ஆசை.. எவ்வளவு
அழகா நம்ம தந்தையார்
சிவபெருமான்
நடனம் ஆடரார்!
நம்ம அம்மா
பார்வதி தேவி மட்டும்
என்ன சும்மாவா !
அவங்களும்
ரொம்ப அழகா நடனம்
ஆடுறாங்க ..அவங்களுக்கு
மகனாக பிறந்து
நமக்கு மட்டும் ஏன்
இந்த நாட்டியம் வரவே
மாட்டேங்குது !கவலையோடு அமர்ந்திருக்கார்
நம்ம கணேசன்..
இதைக் கண்ட
நந்திதேவர் !
அருகிலே வந்து
காரணத்தை கேட்க..
தன்னோட மனக்கஷ்டத்தை விநாயகப்பெருமான் கூற நந்திதேவருக்கு உடனே
சிரிப்பு வந்துடறது ..
இது என்ன
பெரிய விஷயமா !
என்ன சொல்லிணடே
விநாயகரின் காதில்
ஏதோ சொல்ல
விநாயகர் முகம்
அப்படியே
மலர்ந்து போயிடறது!
அப்படி என்னதான்
சொல்லியிருப்பார் நந்தி தேவர் !
இந்தப் பாட்டுல ஏதாவது விடை தெரியுதான்னு பார்க்கலாம் ..
சுற்ற சுற்ற என்
மனமும் சேர்ந்து சுற்ற*
சுற்ற சுற்ற தீவினைகள்
அகன்று போக*
சுற்ற சுற்ற நோய்
நொடிகள் அற்றுப் போக *
சுற்ற சுற்ற துன்பமெலாம்
தொலைந்து போக*
சுற்ற சுற்ற சோம்பல்
எல்லாம்தோற்று
போக *
சுற்றியது யார்
என யான் மலைத்து நிற்க
வேலன் இன்றி மயிலும்
ஏன் தனித்து இருக்க !
விநாயகரின் பொற்கரமோ
வேலனின் பொன்னுடல்
பற்றியிருக்க
ஆனந்தத்தோடு
இருவரும் சேர்ந்து
சுற்ற அதைக் கண்ட
நம் மனமும் சுற்றதுவே*
விநாயகர் வேலவனை
தமிழ் கைகளாலும்
வாரி அணைத்து
கொண்டு கைலாயத்தை
சுற்றி வந்த அந்த
அற்புதமான நடன
காட்சியை லோகத்தில்
இருந்த அனைவருமே
ஆவலோடு கண்டு
களித்தனர் .நடனமாடிய
திருப்தியோடு
விநாயகரின் ஆசையும் நிறைவேறிவிட்டது*
ஆலயத்தை
பயபக்தியோடு
சுற்றி வாருங்கள்
அனைத்து துன்பங்களும்
பறந்தோடும்* உடல்
சோர்வுக்கு மருந்து
கொடுக்கலாம் -ஆனால்
மன சோர்வுக்கு
என்றுமே மருந்து
கிடையாது
சுறுசுறுப்பாய் இருங்கள் *
சுகமான வாழ்க்கை
தானாக உங்களை
தேடிவரும்.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக