வெள்ளி, 29 மே, 2020

திருமணம் நிச்சயமாக பிரம்ம முகூர்த்த வழிபாடு





திருமணம் விரைவில் கைகூடி கல்யாணம் இனிதே நிகழ்ந்து நினைத்த காரியம் முடிந்த மகிழ்ச்சி நிலவ  நாம் செய்யக்கூடிய பிரம்மமுகூர்த்த வழிபாடு முறைகள் பற்றி காண்போம்..


தெய்வங்கள் அனைத்தும் ஒருசேர சங்கமித்து காட்சிதரும் மங்களகரமான நேரம்- தினமும் விடியற் பொழுது பிரம்ம முகூர்த்தம் என சொல்லக்கூடிய 4-30 மணி முதல் 6 மணி வரை என்பதுதெய்வீக காலம்.

திருமணம் விரைவில் நடந்தேறும் சங்கடகரசதுர்த்தி விரதம் 🙏🍀🙏🌹👇👇


 

ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெறிந்து மன உறுதியோடு தெய்வத்தின் பாதத்தை விடாது கெட்டியாக பிடித்து அவன் நாம் அதனை திரும்பத் திரும்ப பாடி 48 நாட்கள் விரதத்தை பூர்த்தி செய்துவிட்டால்- விரதம் கடைப்பிடித்து கொண்டு இருக்கும்போதே நல்ல காதுக்கினிய செய்திகள் தேடி வரும் அல்லது மூன்று மாதத்திற்குள் திருமணம் நிச்சயம் ஆகும்.


விரதத்தை எப்போது தொடங்கலாம்!

அமாவாசை முடிந்து நான்காம் நாள் சதுர்த்தி அன்று விரதத்தை தொடங்கலாம்.

விரதத்தின்போது பூஜை அறையில் என்ன கடைப்பிடிக்க வேண்டும் !

எப்போதும்போல் பூஜை அறையை சுத்தம் செய்து புதிய மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு ஐந்து முக விளக்கை ஏற்றிக் கொள்ளவும். 48 நாட்கள் தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முக விளக்கு ஏற்றப்பட வேண்டும் .

விரதம் ஆரம்பிக்கும் நாள் அன்று அதிகாலை நீராடி  பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முக விளக்கை ஏற்றுக.

 நறுமண வத்திகள் ஏற்றி வைக்கவும். வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும் . ஒரு இனிப்பு சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி என ஒரு இனிப்பு கிண்ணத்தில் வைத்து- பால் கற்கண்டு வைக்கவேண்டும் .


திருமணம் நடைபெற நினைக்கும் மகள் அல்லது மகன் ஜாதகத்தை மஞ்சள் குங்குமம் இட்டு -ஒரு பலகை வைத்து அதன்மேல்  வைக்க வேண்டும். தீபத்தின் நெருப்பு படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

படைப்பதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவும் கீழே வரும் மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்தவாறு சொல்ல வேண்டும்.

தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திராணி பிரியமாமினி!
 விவாக பாக்ய ஆரோக்கியம்
 புத்ர லாபம் சதேஹிமே !!
பதிம் தேஹி சுதம் தேஹி சௌபாக்கியம் தேயிமே சுபே! சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே சிவ சுந்தரி  !!
காத்யாயனி மகாமாயே
 மகா யோக நிதீஸ்வரி!
 நந்த கோவ சுதமத்  தேவம்
 பதிம்மே குருதே நமஹ !!

முக்கியமாக கவனிக்க.. பிரம்மமுகூர்த்தத்திற்குள்  கற்பூர ஆராதனை தெய்வத்திற்கு காட்டி விடவும் .பிறகு கூட மனையில் அமர்ந்து ஸ்லோகங்கள் படிக்கலாம். (20 நிமிடங்கள்- நமக்கு பிடித்தமான ஸ்லோகங்கள்)

'திருமணம் உடனே நினைத்த இடத்தில் நல்லபடியாக சிறப்பாக நிச்சயித்து நடக்க வேண்டும்' என மனதார
 வேண்டிக் கொள்ளவும்.

48 நாட்கள் பிரம்ம முகூர்த்தத்தில் படைக்கும் முன்பாக கருத்து கொள்ள வேண்டியவை..

வாரம் ஒருமுறை விளக்கை  விளக்கிக் கொள்ளலாம். ஆனால் தினமும் சிறிய துணியால் விளக்கின் மேல் பாகத்தை நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமம் இட்டு கொள்ளவும்.
(தினமும் விளக்கை துடைப்பதற்கு சிறிய கட்டம் கட்டமாக துணிகளை கட் செய்து ஒரு பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள்)

தினமும் படைக்கும் இடத்தை ஈரத்துணியால் துடைத்து -பச்சரிசி மாக்கோலம் போடவேண்டும் .புதிய திரி- புதிய நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்ற வேண்டும். புதிய மலர்கள் தினமும் சாற்ற வேண்டும். கற்பூர ஆராதனைக்கு  பிறகு தரையில் விளாவும் நீர் புதியதாக தினமும் மாற்ற வேண்டும் .

இந்த ஐந்து பொருட்கள் - பச்ச‌‌ரிசி மாக்கோலம் -புதிய எண்ணெய்- புதியதிரி- புதிய மலர்கள் புதிய நீர் இவைகள் அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும்.

 முதல் நாள் மட்டும் இனிப்பு பிரசாதமும் -முடிக்கும் நாள் இனிப்பு பிரசாதமும் செய்து படைக்கவேண்டும். இடைப்பட்ட நாட்களில் கற்கண்டு- பால் வைத்து படைக்கலாம்.

திருமணம் பிராப்தம் கைகூட
மரப்பாச்சி பொம்மைவழிபாடு🙏🌹👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

மங்கல வாழ்வு தரும் இளநீர்
அபிஷேக வழிபாடு🙏🍀🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/blog-post_24.html

இதேபோல் எந்த காரியமும் ஜெயமாவேண்டும்  என நினைத்து தொடர்ந்து 48 நாட்கள்  இந்தபிரம்ம முகூர்த்தத்தில் படைத்தாலும் அந்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

 வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும்.
 ஜாதகம் 48 நாட்களும் பூஜை அறை இருக்க வேண்டும் . இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் நினைத்த நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

திருமணம் கனிந்து தம்பதிகள் சமேதராக பல்லாண்டு காலம் வாழ்ந்து பேறுகள் பல பெற்று -பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைகவே.

Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக