வியாழன், 30 மே, 2019

மீனாட்சி சுந்தரேஸ்வரர் தல வரலாறு


மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்


ஓம் சிவனே போற்றி *
ஓம் ஒப்பிலா ஈசனே போற்றி*
 ஓம் முதல்வனே போற்றி*
 ஓம் முக்கண்ணனே போற்றி*
 ஓம் அப்பனே போற்றி*
 ஓம் அருள்வாய் போற்றி போற்றி*

திருமணம் என்பது  ஆயிரம் காலத்து பயிர் * அந்த திருமண வாழ்க்கை கனிந்து மனம் போல் மாங்கல்யம் அமைந்து -அந்த மாங்கல்யம் தீர்க்க சுமங்கலி பவ * எனும் ஸ்லோகம்- நம் வாழ்க்கையில் என்றும் நிலையாக வேண்டி அந்த வேண்டுதலை ஏற்று அருள்கின்ற ஒரு அற்புத தலமே மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் *

மீன் போன்ற கண்
கொண்ட மீனாட்சி
சுந்தரேஸ்வரரை
திருமணம் புரிந்த
சிறப்பான தல வரலாறுதனை அறிந்து கொண்டு மனத்திற்கு பிடித்தமாக திருமண வாழ்க்கை அமைவதற்கான வழிமுறைகளை அறிவோமே ..

பாண்டிய மன்னன்
மலயத்வஜன்- காஞ்சனை தம்பதிக்கு குழந்தை வரம் வேண்டி
' காமேஷ்டி யாகம் '
நடத்துகையிலே யாக
குண்டத்தில் அழகு
மலராக *
பிஞ்சு கைகள் சிலம்பாட*
மீன் போன்ற 
கண்களிலே
நீர் ததும்ப *
தாமரை மொட்டு
 வாயிதழாட *
குழந்தை வடிவத்தில்
அம்மையோ காட்சி தர..

ஆனந்த பரவசம்
அனைவரின் நெஞ்சிலும்
ஊஞ்சல் ஆட ..அள்ளி
அணைத்து மகிழ்ச்சியிலே
தடாதகை எனும்
பெயரோடு மீனாட்சி
வளர்ந்தாளே மதுரையிலே*



கண்ணுக்கு இனியவளாய்
கன்னியாய்
வளர்ந்தவளோ
வீரத் திருமகளாய்
உலகத்தையே வசமாக்க
உலா வருகையிலே..
கைலாய மலையோ
கண்ணிலே பட்டுவிட
போரிட வந்தவளோ!
 நாணத்தோடு தலைகவிழ்ந்தாள் சிவனின் பார்வையிலே..

பித்தனாக -புலித்தோல்
போர்த்தியவனாக
சுடுகாட்டிலே
திரிபவனாக -மண்டையோடு அணிபவனாக
காட்சியளித்த 
எம்பெருமானோ! மீனாட்சியின்
கண்களுக்கு சுந்தரனாக
காட்சி தர. .


 அந்நிமிடமே மீனாட்சியின்
பார்வையிலே சொக்கியதால் சுந்தரேஸ்வரர்* எனும் 
பெயர் பெற்றவர் ஆகிறார் .

பிரம்மா *விஷ்ணு* தேவர்*
என படை சூழ மாப்பிள்ளையாக சென்றவரோ மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தருகின்றார் மதுரையிலே.

பிரதோஷம் அன்று 
சிவனும் *சக்தியும் *ஒன்றாகி 
நடனமாடும் அற்புத தருணம்
 கொண்ட சிறப்பான தலமே
மதுரை மீனாட்சி திருக்கோவில்* 

மனதிற்கு பிடித்தமான
 மணவாளன்*
 கிடைப்பதற்கும் 
மனதிற்கு பிடித்தமான 
மனைவி * அமைவதற்கும்
மிக அருமையான
 தெய்வ வழிபாடு 
பிரதோஷம்* அன்று

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து  5 அகல் தீபம்* ஏற்றி 
 வந்தால்  மூன்று பிரதோஷத்துக்குள் திருமணம் நிச்சயம் கைகூடும்*
 என அறிந்து அதன்படி நடந்து வாழ்க்கையில் சிறப்பை அடைவோமே.

ஜோதி எனும் 
ஒளியிலே ஒளிர்ந்து*
 ஞான ஒளி 
நமக்கெல்லாம் அளித்து *
தவறு செய்யும்
 மனதினை மறுத்து *
உண்மை எனும் 
சொல்லிலே ஐக்கியமாகி*
 பக்தி எனும் மார்க்கத்தை 
நமக்குள்ளே புகுத்துகின்ற 
இறைவனடி போற்றி போற்றி*

சொந்த வீடு மனை அமைவதற்கு பத்து தெய்வீக வழிபாடுகள் 🍀🌹🍀🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

விரைவில் திருமணம் கைகூட  தெய்வ வழிபாடுமற்றும் பரிகாரஸ்தலங்கள்🌹👇
https://amzn.in/ibYVUJD

Copy rights at Balakshitha






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக