வியாழன், 30 மே, 2019

அபிஷேக காலத்தில் முருகன்

பிரபஞ்ச சக்தி கொண்ட  திருமேனியனாய் காட்சி தரும் முருக பெருமானை திரவியங்களால் அபிஷேகம் செய்கின்ற அற்புத காட்சியை அனுதினமும் நாம் கண்டு மெய் உருகி வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள்*

பாலாபிஷேகத்திலே*
பால் மனம் கொண்டு
 தூய்மையாகி ..

நெய்யா அபிஷேகத்திலே*
 இரு கை கொண்டு
 உமை வணங்கி மெய்யுருகி ..

தயிராபிஷேகத்திலே*
 தீதெனவும் உருமாறி
பண்பட்ட மனமாகி..

சந்தனாபிஷேகத்திலே*
 பிணி தீர்ந்து தேகமோ
திடமாகி ..

பழத்தாபிஷேகத்திலே*
 வாழையடி வாழையாக
குலம் தழைத்தாகி ..

தேனாபிஷேகத்திலே*
 தெள்ளளவும்  குறையாது
வாழ்க்கை வளமாகி..

 இளநீராபிஷேகத்திலே*
இளமையெனும்
இப்பிறவி  சிறப்பாகி ..

விபூதி மணமாபிஷேத்திலே*
முதுமையையும்
ஆட்கொண்டு ஏற்பாகி..

பஞ்சாமிர்தாபிஷேகத்திலே*
 கனிவான மனம்
உமதோடு ஒன்றாகி..

நல்லெண்ணெய் அபிஷேகம் *
உமை  நனைக்க
 குளிர்ந்த மனதோடு
நலமான வாழ்க்கையை
அருள்வாயே முருகா *கந்தா*
கதிர்வேலா *உன்னை வணங்கிப் போற்றுகிறேனே
 நின்பாதமே சரணம்*
 சரணம்* சரணம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக