பிரபஞ்ச சக்தி கொண்ட திருமேனியனாய் காட்சி தரும்
முருக பெருமானை திரவியங்களால் அபிஷேகம் செய்கின்ற அற்புத காட்சியை
அனுதினமும் நாம் கண்டு மெய் உருகி வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள்*
பாலாபிஷேகத்திலே*
பால் மனம் கொண்டு
தூய்மையாகி ..
நெய்யா அபிஷேகத்திலே*
இரு கை கொண்டு
உமை வணங்கி மெய்யுருகி ..
தயிராபிஷேகத்திலே*
தீதெனவும் உருமாறி
பண்பட்ட மனமாகி..
சந்தனாபிஷேகத்திலே*
பிணி தீர்ந்து தேகமோ
திடமாகி ..
பழத்தாபிஷேகத்திலே*
வாழையடி வாழையாக
குலம் தழைத்தாகி ..
தேனாபிஷேகத்திலே*
தெள்ளளவும் குறையாது
வாழ்க்கை வளமாகி..
இளநீராபிஷேகத்திலே*
இளமையெனும்
இப்பிறவி சிறப்பாகி ..
விபூதி மணமாபிஷேத்திலே*
முதுமையையும்
ஆட்கொண்டு ஏற்பாகி..
பஞ்சாமிர்தாபிஷேகத்திலே*
கனிவான மனம்
உமதோடு ஒன்றாகி..
நல்லெண்ணெய் அபிஷேகம் *
உமை நனைக்க
குளிர்ந்த மனதோடு
நலமான வாழ்க்கையை
அருள்வாயே முருகா *கந்தா*
கதிர்வேலா *உன்னை வணங்கிப் போற்றுகிறேனே
நின்பாதமே சரணம்*
சரணம்* சரணம்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக