சனி, 4 ஏப்ரல், 2020

எலுமிச்சம் பழத்தில் தோஷம் விலக பரிகாரங்கள் part-2

எலுமிச்சம் பழத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் ..
தெய்வீக சக்தி கொண்ட எலுமிச்சை பழம் கொண்டு நாம் நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருப்பதற்கு பரிகாரங்கள் செய்யலாம்.

 எலுமிச்சம் பழத்தில் செய்யக்கூடிய பரிகாரத்தின் ஏற்படும் பலன்கள்..


விழுந்து எழும் மழலை இனிதாக துவண்டு விழும் உடல் எழுந்தாக
 கவலை கொண்ட முகம் சிரிப்பாக குழப்பம் கொண்ட மனம் தெளிவாக

இருப்பதற்கு நாம் எலுமிச்சை பழத்தில் குங்குமத்தை நிறைத்து திருஷ்டி சுற்றி போடலாம்.


பரிகாரம்- 1


ஒரு புது பொருள் வாங்குகின்றோம். டிவி ஸ்கூட்டி ஃபிரிட்ஜ் என பெரிய பொருளாகவும் இருக்கலாம்..

 அடுப்பில் வைக்கக் கூடிய பாத்திரங்கள் அருவாமனை- கத்தி என சிறிய பொருளாகவும் இருக்கலாம்..

 உபயோகப்படுத்துவதற்கு முன்பாக மிக முக்கியமாக நாம் இதை செய்ய வேண்டும்..

எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து வாங்கிய பொருளை நன்றாக திருஷ்டி சுற்ற வேண்டும் .


இந்த பொருள் நீடித்த நல்ல முறையில் பயன்பட வேண்டும் என சொல்லியவாறு சுற்றவேண்டும்

எலுமிச்சை பழசாற்றை அந்த இடத்தில் சிறிது பிழிந்து   விட்டு  தெருவிலே-பழத்தை எறிந்து விடவும்.

 பிறகு அந்த புது பொருளைப் பயன்படுத்தும் பொழுது அந்தப் பொருள் நீடித்து உழைக்கும்.


பரிகாரம்- 2 உடல் பிணி அகல ஆரோக்கியமாக இருப்பதற்கு..


 நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது அர்ச்சனை கொடுக்கும் போது அல்லது மலரை தெய்வத்திற்கு கொடுத்தாலும்..

ஒரு எலுமிச்சை பழம் வாங்கி கொண்டு சென்று -அய்யரிடம் கொடுத்து அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கி வந்து அந்த பழத்தை பிழிந்து வீட்டில் உள்ள அனைவரும் தீர்த்தமாக குடிக்க வேண்டும்.



எந்த பிணி இருந்தாலும் விரைவில் குணமாகும். உடல் ஆரோக்கியமாகவும் வாழ்க்கை நலமாக இருப்பதற்கும் இந்த தெய்வீக அருள் நிறைந்த இந்த எலுமிச்சை பழம்- வாரம் ஒரு முறை குடிக்கலாம்.

எலுமிச்சை பழத்திலே செய்ய கூடிய பரிகாரங்கள் part-1🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html

வீட்டிலேயே செய்யக்கூடிய கல் உப்பு பரிகாரங்கள் 🌹🍀🌹🍀🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html


பரிகாரம் -3

திருமணம் விரைவில் நடப்பதற்கு- வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு- மனதில் நினைத்த காரியம் நிறைவேற -குடும்ப ஒற்றுமை நிலவ- கணவன் மனைவி பிரச்சனை தீர ..

என அனைத்திற்கும் சிறந்த பரிகாரம் எலுமிச்சை பழ தீபம் ஏற்றும் பரிகாரம்.


செவ்வாய் வெள்ளி ஞாயிறு 3 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தொடர்ந்து ஒன்பது வாரம் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றுதல் சிறப்பு .

நினைத்த காரியம் தங்கு தடையில்லாமல் நிறைவேறும்.


தெய்வத்திற்கும் உகந்த பழமாக ராஜ வம்சத்தின் கனியாக -உடல் பிணி அகற்றும் மருந்தாக -சிந்தையை குளிரவைக்கும் தேனாக திகழும் எலுமிச்சை பழத்தின் அற்புதத்தை புரிந்துகொண்ட வாழ்க்கையை சிறப்பை அடையலாம்.


வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக