வெள்ளி, 3 ஏப்ரல், 2020

எலுமிச்சை பழத்தில் ஐந்து விதமான பரிகாரங்கள் part-1

கடவுள் படைத்த பழங்களில் அற்புதமான படைப்பு ராஜகனி என்று சொல்லக்கூடிய எலுமிச்சை பழம் .

தெய்வீகசக்தி கொண்ட பழம். தீயசக்திகளில் இருந்து நம்மை காக்க கூடியது.

பரிகாரம் -1


அம்பாளுக்கு உகந்த இந்த எலுமிச்சை பழத்தை வெள்ளிக்கிழமை தோறும் பூஜை அறையில் மஞ்சல் குங்குமம் வைத்து அன்னபூரணி அம்பாளின் மடியிலே சாற்றலாம் .

நம் குடும்பத்தில்எந்த வித துன்பமும் நிகழாத வண்ணம் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசமாக எலுமிச்சைபழ காக்கும்.

எலுமிச்சை பழத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் part -2🌹🍀🌹🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/part-2.html

வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவிட கல்லுப்பு பரிகாரங்கள்🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html

எழுத்துக்கெல்லாம் முதன்மையாய்

வெளியே போக முடியாத சூழ்நிலையில் கூட -நாம் இந்த எலுமிச்சை பழத்தை மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்தால் ..

எந்த வித தீய சக்தியும் நம்மிடம் நெருங்காது .



எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி குங்குமத்தை வைத்து வீட்டின் அறிவுகாலில் இரண்டு புறமும் வைத்தால்  எதிர்மறை சக்திகள் மறைந்து வாழ்க்கை சுபிட்சம் கொடுக்கும்.


பரிகாரம்- 2


செவ்வாய்க்கிழமை -ஞாயிற்றுக்கிழமை திருஷ்டி சுற்ற ஏற்ற நாள். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்..

 ஆறு மணிக்கு மேல் அந்த பழத்தின் அடிப்பாகம் வெட்டுபடாது பார்த்து நான்காக வெட்டிக் கொண்டு.. அதில் குங்குமத்தை நிறைக்க வேண்டும்.


சுண்ணாம்பு படிகாரம் மஞ்சள் கலந்து செய்யப்பட்டது குங்குமம். இவை அனைத்தும் திருஷ்டி விலகுவதற்கான பொருள்- என்பதால் தெய்வீக சக்தி கொண்ட குங்குமத்தை எலுமிச்சை பழத்தில் இடுகின்றோம்.

 திருஷ்டி -தோஷம் -உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் பெரியவர்கள் இருந்தால் அவர்களை கிழக்கு முகமாக அமர வைத்து..


 அந்த எலுமிச்சம்பழத்தை என்ன குறை உள்ளதோ அவற்றை சொல்லி- கண் திருஷ்டி தோஷம் அனைத்தும் விலக வேண்டும் எனக்கூறி வலது புறம் மூன்று முறை இடது புறம் மூன்று முறை என நன்றாக சுற்றி மேலிருந்து கீழாக மூன்று முறை இறக்க வேண்டும்.

 பிறகு வெளியே எடுத்துச் சென்று கோலம் போடும் இடத்தில் நின்றுகொண்டு..


 அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு பாகத்தையும் நான்கு புறமுமாக எறிந்துவிட வேண்டும் நம் வீட்டில் உள்ளவர்களின் திருஷ்டி அனைத்தும் விலகிய மாற்றம் அடுத்த சில நாட்களில் தெரியும்.


ஒரு குடும்பம் சுபிட்சம் காண வேண்டும் எனில் தெய்வீக பொருட்கள் வீட்டினில் நிறைந்து இருக்க வேண்டும் -என்பதை உணர்ந்து எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்து வாழ்க்கையில் சிறப்பை காண்போம்.

Copy rights at balakshitha




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக