சனி, 28 மார்ச், 2020

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று திருப்பதிகம் part- 3

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம்


ஈசனின் திருப்புகழை பாடிய திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் பாடிய  தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று பதிகம் தொடர்ந்து21 நாட்கள் படித்து வர- நோய்கள் அனைத்தும் குணமாகும்..


எரிவது  அட்டது நீறு
இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கியமாவது நீறு.

 துயிலைத் தடுப்பது நீறு
 சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு
 சூலத்து ஆலவாயான் திருநீறே .

இராவணன் மேலது நீறு
எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு
பாவம் அறுப்பது நீறு

 தராவணமாவது நீறு
 தத்துவ மாவது நீரு
அரா வணங்கும் திருமேனி
ஆலவாயான் திருநீறே .

மாலொடு அயன் அறியாத
வண்ணமும் உள்ளது நீறு
 மேலுறை தேவர்கள தங்கள்
 மெய்யது வெண்பொடி நீறு

 ஏல உடம்பு இடர் தீர்க்கும்
இன்பம் தருவது நீரு
ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

குண்டிகை கையர்களோடு
சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப் பிப்பது நீறு
 கருத இனியது நீறு

 எண்டிசை பட்ட பொருளார்
ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர்  பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே

ஆற்றல் அடல் விடை ஏறும்
ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னன் உடல் உற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் நல்லவர் வல்லவர் தாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக