வெள்ளி, 27 மார்ச், 2020

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம் part - 2


தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று பதிகம்


ஈசனின் திருப்புகழைப் பாடிய திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறை பாடிய தீராத நோய்களையும் தீர்க்க உதவும் திருநீற்றுப்பதிகம்

தொடர்ந்து 21 நாட்கள் படித்து வந்தால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.


 காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந்தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந்தருவது நீறு
திரு ஆலவாயான் திருநீறே .


பூச இனியது நீறு
புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு
பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு
அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திரு ஆலவாயான் திருநீறே.

 அர்த்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு
 வானம் அளிப்பது நீறு

பொருத்தமதாவது நீறு
 புண்ணியர் பூசும் வெண்ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த
திரு ஆலவாயான் திருநீறே.

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக