திங்கள், 25 நவம்பர், 2019

தியாகம்




தியாகம் கொண்ட வாழ்க்கையை ஏற்று அந்த  வாழ்க்கையும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக அமைத்துவிட்டால் -வாழ்க்கை என்றும் இனி தன்றோ!


மனம் இனிது- கடமை இனிது
 நேர்மை இனிது -உண்மை இனிது தியாகம் இனிது என அறிந்து வாழ்வின் சுவையை அறிந்து வாழ்வில் இனிது காண்போமே..


 பிறந்தேன் -வளர்ந்தேன் -வாழ்ந்தேன் என்பது தான் வாழ்க்கை என்றால்
 ஒரு சிலர் வேண்டுமானால்- இனிமை எனலாம்.

தியாகம் செய்த நெஞ்சு கனமான சுமைதான்- எனினும் அதில் இனிமை காணும் இதயம் சொல்லுமே ..எதில் இனிமை என்று.

ராமாயணத்தில் மனம் கனம் எனினும் நாட்டுக்காக -அன்புமனைவி சீதாதேவியை தனிமைப்படுத்திய ராமன் செய்தது தியாகமா!


மகாபாரதத்தில் சொந்த பந்த பாசத்தில் சிக்குண்டு-  ஆனாலும் சத்திரிய குல வழக்கத்திற்காக- மனம் கனம் எனினும் -பீஷ்மரையே
அம்பு படுக்கையில் படுக்க வைத்தானே-அர்ஜுனன் அன்று அவன்செய்தது தியாகமா !



அந்த நெஞ்சங்கள் சுமைதாங்கியாய் மனம் கனத்து- விதி பயனை அனுபவித்து வாழ்ந்ததால் தான் இன்றும் காவியம் கதை பேசுகின்றதோ!

 மகிழ்ச்சியோடு வாழ்ந்து முடிந்த கதை என்பது பாரதத்தில் கண்டதும் தான் உண்டோ!

 காவியம் ஆகட்டும்- பாரதம் ஆகட்டும் அனைத்தும் என்றென்றும் கதை சொல்லும் -தியாகம் கொண்ட நெஞ்சையே-யன்று  கடமையிலாது வாழ்ந்த மனிதனினை  ஏறெடுத்தும் பார்க்குமோ!

இனிது இனிது வாழ்க்கை
 இனிது அன்றோ part 5🌹🍀🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/part-4.html

குடும்பத்துக்காக நான் செய்த தியாகம் இனிமை தருமோ! மனைவிக்காக செய்த தியாகம்.. இல்லை- கணவனுக்காக நான் செய்த தியாகம் !

இல்லையன்று- காதலிக்காக நான் செய்த தியாகம் ..அன்றன்று நண்பனுக்காக நான் செய்த தியாகம்! தியாகத்தில் இத்தனை வகை உண்டோ!
ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் தியாக நெஞ்சம் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதுவன்றோ வாழ்க்கை *மனம் கனம் எனின்- கடமை இனி வேண்டேன் என சொல்வார் எவருண்டு!


வாழ்க்கை எனும் சுழற்சியில் உழன்று உழன்று- கீழிறங்கி மேலெழும்பி இன்பம் -துன்பம் என சுழன்று சுழன்று எதுவாயினும்'நின்மீது நான் பிடித்த என் பிடியை தளர்த்தி விட மாட்டேன் என் பெருமானே நின் பாதமே சரணம் சரணம் -சரணம் .

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக