வழிவழியாக நம் முன்னோர் காலத்தில் இருந்து வணங்கக்கூடிய தெய்வமே -நம்முடைய குல தெய்வம்.
நம்முடையமுன்னோர்கள் ஆசி கிடைக்க -நம்முடைய வம்சம் தழைக்க ஒரு காரியம் ஜெயமாக- வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கும்பிட்டு வரவேண்டும்.
அந்த குல தெய்வம் நம்மை நம்முடைய குடும்பத்தை- நம் வம்சத்தை ஏழு ஏழு ஜென்மங்களுக்கு காப்பாற்றும்.
குல தெய்வம் தெரியாது வணங்காது விட்டுவிட்டால் வரக்கூடிய இன்னல்கள் அறிவதும் மிக மிக அவசியம் ..
1--நம்முடைய முன்னோர்கள் ஆசி நமக்கு கிடைக்காது போகலாம்.
2--வீட்டில் பிறந்த குழந்தைக்கு அகால மரணம் நேரிடலாம் .
3- அடிக்கடி விபத்து ஏற்படலாம்.
4- கெட்ட கனவுகள் மனதில் தேவையில்லாத பயம் ஏற்படுத்தலாம்.
5- நோய்நொடி என அடிக்கடி
படுக்கையில் விழ நேரிடலாம் 6-திருமண வாழ்க்கையில் வெறுப்பு வரலாம்.தம்பதி இடையே மனகசப்பு ஏற்பட்டு வாழ்க்கையில் வெறுப்பு வரலாம்.
அனைத்து இந்த நிகழ்வுகள் துன்பங்கள் விலகுவதற்கு இந்த நிமிடமே உறுதி கொண்டு அதற்கான பரிகாரத்தை வழிமுறையை புரிந்து கொண்டால் வாழ்க்கை என்றும் இனிதாக அமையும் .
குலதெய்வ வழிபாடு என்றால்
என்ன part -1🌹🍀🌹🙏🙏👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/part-1.html
குல தெய்வ கோவிலில் செய்ய வேண்டிய வழிமுறைகள் 🌹🌹🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_25.html
ஒருசிலருக்குதம்முடைய குல தெய்வம் யாரென்று தெரியாது இருக்கலாம் ..அவர்கள் வழிவந்த முன்னோர்களும் இது பற்றி அறியாது இருக்கலாம் .அந்த பட்சத்தில் நாம் நம்முடைய குலதெய்வத்தை தெரிந்துகொண்டு வணங்குவதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்..
நம்முடையகணவன்
வழி முன்னோர்கள் தாத்தா பாட்டி பூர்வீக இடம் இருந்தால்- அதற்கு அருகாமையில் கண்டிப்பாக ஒரு நதியோ அல்லது ஆறோ ஓடி கொண்டிருக்கும்
வரப்போகும் தை மாதம் அல்லது சித்திரை மாதம் ஆவணி மாதம் கார்த்திகை மாதம் போன்ற சிறப்பான மாதங்களில் வளர்பிறை நாள் பார்த்து -அந்த பூர்விக இடமான ஊருக்கு செல்ல வேண்டும் .
அருகாமையில் உள்ள நதியோ அல்லது ஆற்றிலோ ஜலம் எடுத்து தலையிலிருந்து கங்கா ஸ்னானம் செய்துகொள்ளவேண்டும்.ஆற்றின் ஓரத்தில் இருக்கும் களிமண்ணை இரண்டு கைகளாலும் ஒரு சேர பிடித்த அளவிற்கு பிடித்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அந்தக களிமண்ணால் பிள்ளையார் பிடிப்பது போன்று ஒரு பொம்மை செய்து வீட்டிலே பூஜை அறையில் வைக்க வேண்டும் .
நதியின் அருகே உள்ள மணலுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.. அதனால்தான் மாசிமகம் அன்று கடலோரத்தில் அத்தனை தெய்வங்களும் சங்கமித்து ஆற்றில் நீராடி -நீரையும் அதை சார்ந்த மணலையும் புனித படுத்துகின்றனர் .
அந்த காலத்தில் தெய்வங்கள் சித்தர்கள்- முனிவர்கள் அனைவருமே எந்தவித பூஜை செய்தாலும் நதிக்கரையின் ஓரத்தில் மணலை பிள்ளையார் பிடித்து வைத்து பூஜைகள் நடத்துவர் . அப்படிப்பட்ட புனிதமான மண்ணையே -நாம் குல தெய்வமாக நினைத்து பிள்ளையார் பிடித்து வைக்கின்றோம்.
விசேஷ நாட்களில் எப்படி பூஜையறையை அலங்கரித்து மிக அழகாக படைக்கின்றோம் அதுபோன்றே - பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு படைக்க வேண்டும். களி மண் பொம்மையை குல தெய்வமாக நினைத்து பக்தியோடு வணங்கவேண்டும். மாவிளக்கு ஏற்றி" எங்கள் குல தெய்வமாக உன்னை நினைத்து பூஜை செய்கின்றோம்-
எங்கள் குலதெய்வமே ..எங்களுடைய குடும்பத்தை வம்சத்தை நல்லபடியாக நீயே வைக்க வேண்டும்" என வேண்டி பொங்கல் வைத்து படைக்கவேண்டும்.
சந்தனம் விபூதி -மஞ்சள் குங்குமம் குல தெய்வமாக நாம் நினைத்து வழிபடக்கூடிய -அந்த களிமண் பொம்மையின் மேல் தூவ வேண்டும்
நாம் அவ்வாறு படைப்பதற்கான காரணம் -நம்முடைய குல தெய்வம் ஆணா பெண்ணா என்பது நமக்கு தெரியாது .சந்தனம் விபூதியும் ஆணாக இருக்கும் பட்சத்தில் குலதெய்வத்திற்கு ஏற்றுக்கொள்ளும். குலதெய்வம் பெண்ணாக இருந்தால் மஞ்சள் குங்குமத்தை தெய்வம் ஏற்றுக்கொள்ளும் .
நம்முடையகுல தெய்வத்திற்கு உயிர்சக்தி கிடைப்பதற்காகத்தான் இந்த வழிபாடு .
அந்த குலதெய்வ பொம்மை உடையாது பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒரு பேழையிலோ அல்லது மரப்பெட்டியிலோ மூடி வைத்து தினமும் மலர் வைத்து மனதார பூஜை செய்து கொண்டு வரலாம்.
வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைப்பதற்கு எடுக்கலாம் ஆனால் பூஜையறையில் நம் கண்காணிப்பில் இருக்கவேண்டும்
இப்படி நாம் திருப்தியாக முழுமனதோடு இந்த பூஜையை செய்ய வேண்டும் .
அடுத்த சில மாதங்களுக்குள் கண்டிப்பாக நம்முடைய குலதெய்வம் யார் என்று நமக்கு அந்த தெய்வம் அறிவுறுத்தும்.
மற்றவரின் மூலமாகவோ அல்லது கனவில்கூட கண்டிப்பாக நம்முடைய குல தெய்வம் யாரென்று நமக்குத் தெரியவரும். அவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வமே நம்முடைய குலதெய்வம்.
அவ்வாறு தெரிந்து கொண்டால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைத்து படைத்து விட்டு வரலாம்
அந்த குலதெய்வ பொம்மையை பத்திரமாக வைத்திருந்து நதியில் அல்லது குலதெய்வ கோவிலில் விருட்ச மரத்தின் அடியிலோ வைத்துவிடலாம்.
அனைத்து நலன்களும் செல்வமும் நிலைபெற்று வாழ்க்கை சிறந்திடவே தெய்வ வழிபாடு செய்கின்ற போதிலும் -அவை அனைத்தும் நிலைபெற்று வம்சம் விருத்தி பெற்றிடவே குலதெய்வ வழிபாடு அவசியம்- என அறிந்து குலதெய்வத்தினை வணங்கி போற்றி வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
Copyrights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக