புதன், 24 ஜூலை, 2019

கணபதி யானை முகத்தவன் ஆன கதை




கணபதி யானை முகத்தவனாக  மாறிய வரலாறு


ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்-தனை ஞானக் கொழுந்தினை -புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

கணங்களுக்கு எல்லாம் அதிபதி கணபதி.


சப்த ரிஷிகள் -தேவர்கள் அரம்பையர்கள் -அசுரர்கள் தானவர்கள் -நாகர்கள் -கருடர்கள் கின்னரர்கள்- கிம்புருடர்கள்?யட்சகர்கள் -யட்சினிகள் வித்யாதரர்கள் -அரக்கர்கள் கந்தர்வர்கள் -சித்தர்கள்- சாரணர்கள் பூதகணங்கள் -பிசாசர்கள் இவர்கள் அனைவருக்கும் அதிபதி கணபதி.

க என்றால் என்றால் ஞானம்
ண என்றால் மோட்சம்
பதி என்றால் தலைவன்.


ஞானத்தையும்- மோட்சத்தையும் நமக்கெல்லாம் தந்து தலைவன் ஆகின்றான் கணபதியே-

கணபதி யானை முகத்தவனாக காட்சி தந்தமைக்கு உரிய வரலாறு தனை காண்போமே..



பண்பிலே சிறந்தவனாய் நல்லொழுக்கம் நிறைந்தவனாய்..

தெய்வ பக்தி மிக்கவனாய் மகேசுவரன் என்றொரு அரசனோ  பிரகஸ்பதி தேவரை தினமும் அன்புடன் பூஜித்து வர

பூஜையை ஏற்று பிரகஸ்பதி தேவர்  மன்னனுக்கு காட்சி தந்து வரம் ஒன்று கொடுக்கின்றார்


"எம்முடைய பாதங்களில் அன்போடு வணங்கிய உம்முடைய சிரம் அதாவது தலை தேவர்கள் -முனிவர்கள் பெரியோர்கள் -அனைவராலும் வணங்கப்படுக"என்று மகிழ்ந்து வரம் கொடுக்க -

மகிழ்ந்த மன்னனோ இந்த திருவாக்கு எப்போது பலிக்கும் ? "என்று ஆர்வத்தோடு கேட்க -"நீ எப்போது யானை பிறவியில் பிறக்கிறாயோ அப்போது தப்பாமல் பலிக்கும்" என்று கூறி மறைகின்றார்.

சிலகாலம் கழிந்தன -ஒரு நாள் பரிவாரங்களுடன் - மன்னனோ உலா வருகையிலே ..

எதிரே வந்த நாரதரை கவனியாது போகையிலே -

கோபம்கொண்ட நாரதரோ" தன்னை மதியாமல் சென்று விட்ட காரணத்தால் -மறுபிறப்பில் யானையாக  பிறந்து 'கயமுகாசுரன் ' என அழைக்கப்பட்டு ..

சிவபெருமான் அருளால் சிரமறுபட்டு அவன் அருள் பெறுவாயாக" என சபித்தார் .


அந்த மன்னன் மகேஸ்வரனே அடுத்த பிறவியில் 'கயமுகாசுரன்' ஆக  பிறந்து -சிரமறுக்கப்பட்டு விநாயகப் பெருமான் தம்முடைய திருமேனியில் சேர்த்து காட்சி கொடுக்கின்றார்.

யானை முகனாக காட்சி அளித்ததால் யானை முகத்தவன் என்றும் 'கஜானனர்'
என்றும் பெயர் பெற்றவர் ஆகிறார்.
யானை முகன் நமக்கு உணர்த்துகின்ற கருத்தானது..


அனைவரிடத்திலும் அன்பு கொண்டு
 அமைதிக்கு பெயர் கொண்டு
பண்புக்கு மனதில் இடம்கொண்டு -
புண்ணியபலன்அனைத்தும் தான்
கொண்டு -தெய்வத்திற்கே அர்ப்பணம் என மனம் கொண்டு..

'வாழ்கின்ற இப்பிறவி _நற்பிறவி எனும் நாம் செய்த தர்ம புண்ணிய பலன் அனைத்தும் -வீண் போகா அடுத்து வரும் அனைத்து பிறவியுமே-

ஆனந்தம் ஆட்கொண்டு  பிறவி பயனை அடைந்து  சிறப்பதற்கு ஆண்டவனே  வழி வகுப்பான்' எனும் தத்துவத்தை மிக மிக அழகாக உணர்த்துகின்றான் கணபதியே.

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக