மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு வரலட்சுமி பூஜை வழிபாடு
வாழ்க்கை சிறப்பதற்கு- மாங்கல்யம் நிலைப்பதற்கு -மனமெல்லாம் மகிழ்வதற்கு -மங்கலம் அமைவதற்கு -குலம் தழைப்பதற்கு இறைவனை வேண்டி வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்துப் படைப்பது சிறப்பு.
நோன்பு என்பது மிகவும் ஆச்சரியமாக -பரிசுத்தமாக -உடலும் மனமும் தெய்வத்தோடு ஒன்றி படைக்கக்கூடிய ஒரு நோன்பு விரதம்* எந்த ஒரு புனிதமான விசேஷ தினத்திலும் கலசம் வைத்து படைக்கும் போது அங்கே மகாலட்சுமி வந்து அமர்ந்து அருள் புரிகின்றாள்.
நோன்பு எடுக்கும் பெண்கள் திருமணத்தன்று கட்டுகின்ற பட்டுப்புடவை தழைதழைக்க
தலை நிறைய மல்லிகை சரம் நிறைய- நெற்றி நிறைய குங்குமத்தோடு- இந்த நோன்பு எடுத்தல் சிறப்பு.
வாழ்வில் வளம் பெற தினமும் சொல்லக்கூடிய குலதெய்வ வழிபாட்டு ஸ்லோகம் 🙏🌹🍀🌹🌹🌹👇👇👇👇👇http://balakshitha.blogspot.com/2019/08/blog-post.html
வாழ்வின் தலைவிதியை மாற்றக்கூடிய மூன்றாம் பிறை வழிபாடு 🌹🍀🌹🙏🌹👇http://balakshitha.blogspot.com/2020/07/blog-post_19.html
தெய்வீக சிறப்பு வாய்ந்த நோன்புக்கான கலசம் வைத்து சுமங்கலி பெண்கள் மனதால் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கும் முறையை பற்றி அறிவோமே ..
'தெள்ளத் தெளிகின்ற பால் போன்ற மனம் கொண்டு -மனம் முழுதும் நின் அகம் கொண்டு ஆழ்மனதில் நெய்யூற்றி ஏற்றுகின்ற தீபத்திலே -ஒளிர்கின்ற ஒளிதனிலே முழுதாக நிறை கொண்டு ஏற்றுக் கொண்டேன் என் மகளே' தீர்க்க சுமங்கலி பவ ' என உன் பார்வை உணர்த்தும் அம்மா "அதை நினைத்து நிகழ்கின்றேன் என் தாயே என ஆனந்தத்தோடு ஐந்து முக விளக்கேற்றி..
'வாழையடி வாழையாக குலம் தழைப்பதற்கு அருள்புரிவாயே என் தாயே ' என வேண்டி நுனி வாழை இலை அதாவது தலை வாழை இலை வைத்து ..
'அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று அன்னமிடும்
என் கைகளுக்கு -இல்லை என்று சொலாது அனைவருக்கும் மனமுவந்து அளிப்பதற்கு அளவில்லாத பொருளை கொடுப்பாயே என் தாயே' -என வேண்டி படி நிறைவாக வாழை இலை தனிலே வெண்மையான பூ போன்ற பச்சரிசி தனையிட்டு ..
வெள்ளி சொம்பு -பித்தளை சொம்பு அல்லது பஞ்சலோக சொம்பு என வசதிக்கேற்றவாறு சொம்பு தனிலே(நம்மை ஆழ்ந்து பார்க்கும் தேவியானவள் சொம்பின் தரம் பார்ப்பதை விட நம் மனதின் ஆழம் பார்ப்பவள் ஆகின்றாள் என அறிந்து ) அவளுக்கு பிடித்தமான வளாக..
கங்கை நீர் -காவிரி நீர் என புனிதமான நீர் போன்று என் வாழ்க்கையில் பாவங்கள் அனைத்தும் நீங்கி புனிதமான வாழ்க்கையாக அமைவதற்கு அருள் புரிவாயே என் தாயே- என வேண்டி சொம்பு நிறைய சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நீர் நிறைத்து ..
செல்வகடாட்சம் நிறைந்த வாழ்க்கை என்றும் நிலவ அருள் புரிவாயே என் தாயே என வேண்டி அதனுள் தங்க காசு - வெள்ளி காசு அல்லது ஒரு ரூபாய் நாணயம் அந்த நாணயத்தை சொம்புதனிலே இட்டு ..
மா என்றால் பசுமை- துன்பம் துயரம் ,கலக்கம் ,அவை அனைத்தும் நீங்கி மாவிலைபோன்று பசுமை நிறைந்த இனிமையான வாழ்க்கையை கொடுக்குமாறு அருள் புரிவாயே என் தாயே என வேண்டி மாவிலை 5 -9 அல்லது 11 இலைகளை கொண்ட குருத்தை- நீர் நிரம்பிய சொம்பில் இட்டு ..
மங்கல நிகழ்ச்சிக்கு தேங்காய்க்கு முதல் பங்குண்டு -தேன் போன்ற காய் தேங்காய் ..தேன் போன்ற தெய்வ தன்மை கொண்ட நீரை உள்ளடக்கி தேங்காயை சுற்றிலும் பஞ்சு கொண்டு கட்டி காப்பது போன்று ..
தெய்வ அம்சம் கொண்ட-புனிதமான வாழ்க்கையை கட்டிக் காக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்று வழி நடத்துகின்ற பாக்கியத்தை கொடுத்த என் தாயே - தேனினும் இனிதாக அதை நிறைவோடு செய்வதற்கு அருள்புரிவாயே அம்மா 'என வேண்டி
தெய்வ அம்சம் கொண்ட-புனிதமான வாழ்க்கையை கட்டிக் காக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்று வழி நடத்துகின்ற பாக்கியத்தை கொடுத்த என் தாயே - தேனினும் இனிதாக அதை நிறைவோடு செய்வதற்கு அருள்புரிவாயே அம்மா 'என வேண்டி
தேங்காய்க்கு மஞ்சள் குழைத்து பூசி குங்குமம் இட்டு மாவிலையின் மேல் தேங்காயை வைத்து ..
மகிழ்ச்சி -மணம் -வாசம் -அழகு நிறைந்த மல்லிகை மலரோடு வண்ண மலர்கள் கொண்ட மாலையை தேங்காயின் மேல் சாற்றி வழிபடுதலே நோன்பின் சிறப்பு.
செல்வ செழிப்பும் பெற்று வீடு மனை வாங்கும் யோகம் பெற 🙏🌹🍀🌹👇👇👇http://balakshitha.blogspot.com/2020/02/blog-post_28.html
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்பதால் ஒன்பது நூல் இழைகளால் ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் மங்களத்தின் அம்சமாக கலசத்தின் மேல்வைத்த படைத்து வலது கையில் அணிந்து கொள்வது மிக சிறப்பு..
கல் உப்பிலே 5 விதமானபரிகாரங்கள்
பார்த்து பயன்பெறுங்கள்🌹🍀🌹👇👇👇
சுமங்கலி பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்று குங்கும பஞ்சதசி பாமாலை பாடி குங்குமத்தால் அர்ச்சனை செய்து மகாலட்சுமியின் மனதை குளிர வைத்து அவளுடைய அனுக்கிரகம் பெற்று - பெரியவர்களின் வாழ்த்து பெற்று மகிழ்ந்து வேண்டிய பலனை அடைவோமே.
உங்களது கருத்தை பதிவுசெய்க
உங்களது கருத்தை பதிவுசெய்க
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக