பகவத் கீதை பொருளுணர்ந்து படிக்கும் முறை
கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்தால் போதும் உடைந்த மனமும் உவகை கொண்டு எழுந்து விடும்
திரு கண்ணபிரான் திருவாய் மலர்ந்து அருளிய பகவத்கீதை நன்னெறி நூலை கண்ணால் பார்த்தாலே போதும்.. கவலை கொண்ட மனதில் புத்துணர்ச்சி புகுந்துவிடும் .
பக்தி எனும் சுவாசத்தை நுகர்ந்தாலே போதும் -சூரிய பலம் சந்திர பலம் சகல பலமும் கூடிவிடும் .
பெருமாளின் சகஸ்ரநாமம் எனும் இனிய கானத்தை கேட்டாலே போதும் சகல ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் பெற்ற பலன் கிடைத்துவிடும்.
கண்ணனின் பாதத்தினை கரங்களால் தொட்டு வணங்க வேண்டும் என மனம் நினைத்தாலே போதும் நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் .
பெருமாளின் அவதாரம் ஆகிய கண்ணபிரான் அர்ஜுனனுக்கு சொல்லிய உபதேசமே பகவத் கீதை அந்த பகவத் கீதையின் சிறப்பைப் பற்றி காண்போம்..
திரு கண்ணபிரானின் திரு வாய்மொழியாக தர்ம ஷேத்திரமாகிய
குருஷேத்திரம் என்ற போர்க்களத்தில் பிறந்தது தான் பகவத் கீதை .
போர்களத்தில் அர்ஜூனன் எதிர் அணியில் நின்ற உற்றார், உறவினர் சான்றோன், ஆசான் இவர்களை கண்டு மதி மயங்கி போரிட மாட்டேன் என்று பின்வாங்கியபோது அவரது மனக்கலக்கத்தை நீக்கி ஞானம் ஊட்டிய ஒரு அற்புத நூல் தான் பகவத் கீதை .
ஒரு பயணி ஓடக்காரனை நம்பி ஓடத்தில் ஏறுகின்றான் ..
ஓடக்காரனும் தம்மை நம்பி வந்தவர்களை பத்திரமாக கொண்டு போய் அக்கரையில் சேர்க்கின்றார் .
அதுபோல கடவுளும் பக்தி என்ற ஓடத்தில் ஏற்றி -தாமே ஓடக்காரனாக
இருந்து சகல இன்னல்களிலும், கஷ்டங்களிலும் ,விபத்துக்களிலும், இருந்து விலக்கி..
வெகு விரைவில் இன்பமெனும் அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார் .
நாம் பக்தி எனும் ஓடத்தை
நம்பி ஏறினால் தான்
இன்பம் எனும் -அக்கரைக்கு
செல்ல முடியும் .
அதைப்போல அர்ச்சுனனும் கிருஷ்ணரை பக்தியோடு நம்பி சரணடைகிறார்.
திரு கண்ணபிரானின் திரு வாய் மொழியாக தர்ம ஷேத்திரம் ஆகிய குருஷேத்திரம் என்ற போர்க்களத்தில் பிறந்ததுதான் பகவத் கீதை .
வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சிக்கல்களையும் அழகாய் தீர்த்து வைக்கும் ஒரு இனிய நண்பனாக பேரானந்தத்தை கொடுக்கக்கூடிய ஒரு பக்தி மார்க்கமாக திகழ்கின்றது பகவத் கீதை
போர்களத்தில் அர்ஜூனன் எதிர் அணியில் நின்ற உற்றார், உறவினர் சான்றோன் , ஆசான் இவர்களை கண்டு மதி மயங்கி ..
போரிட மாட்டேன் என்று பின்வாங்கியபோது அவரது மன கலக்கத்தை அகற்றி புத்தி புகட்டிய ஞானம் ஊட்டிய ஒரு அற்புத நூல் தான் பகவத் கீதை
ஸ்ரீமத் பகவத் கீதையின் பெருமை எல்லையற்றது .அளவற்றது பல சாஸ்திரங்கள் அடங்கிய நூல் என்றும் சொல்லலாம்.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கின்ற உபதேசம் தான் பகவத் கீதை.
இதில் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை கருத்துக்களும் அடங்கி இருக்கின்றன .
தன்னுடைய உபதேசமான கீதையைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணரே மிகஅழகாககூறுகின்றார் ..
"கீதையை அண்டி நான் வாழ்கிறேன் -கீதையை என்னுடைய சிறந்த வீடு -கீதையின் ஞானத்தை கைக்கொண்டு நான் மூவுலகத்தையும் காக்கிறேன் "என்று மனம் உவந்து கூறுகின்றார்.
நாம் வாழ்க்கையில் வாழ்ந்த பயனை அடைய வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் முக்கியமாக பகவத் கீதையின் புத்தகத்தை வாங்கி பூஜை அறையில் வைக்கவும்.
புரட்டாசி மாதத்தில் தினமும் படித்தால் ஏழுமலையானின் அனுகிரகம் கிடைத்து மோட்சம் பெறலாம் என்பது ஐதீகம்.
மனையின் மீது பகவத் கீதை புத்தகம் இருக்க வேண்டும் .பகவத்கீதை ஸ்லோகம் பொருளறிந்து படிப்பது உத்தமம் .தெய்வத்தை வணங்குவது போன்று- பகவத் கீதையை பயபக்தியோடு வணங்கி பிறகு எடுத்து படித்தல் சிறப்பு .மீண்டும் படித்து முடித்ததும் வைக்கும்பொழுது தொட்டு வணங்கி நமஸ்காரம் செய்வது உத்தமம்.
தினம் ஒரு அத்தியாயம் என பொருளறிந்து படிக்கலாம் .படிக்கும் பொழுது தீபம் ஒளிர்ந்துகொண்டு இருப்பது அவசியம் .
அப்படிப்பட்ட பகவத்கீதை யை கேட்கவேண்டும் சொல்லவேண்டும்-படிக்க வேண்டும் கற்பிக்கவேண்டும்
மனனம் செய்ய வேண்டும்
மனதில் தரிக்க வேண்டும்*
ஓம் வெங்கடேசாய நமஹ.
Copyrighs at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக