திங்கள், 30 செப்டம்பர், 2019

நவராத்திரி கொலு படிகளின் தத்துவம்

நவராத்திரி விழாவில் மிக சிறப்பு அம்சம் 9 படிகள் கொண்ட கொலு.. எந்த விசேஷத்திலும் இல்லாத சிறப்பு .
ஐதீகமாக குலவழக்கத்தின்படி தொன்றுதொட்டு கொலுவைத்து படைப்பது என்பது உண்டு.. அதுபோல ஆர்வத்தின் காரணமாக கொலு அமைத்து வழிபாடு நடத்துவது என்பதும்  சிறப்பு.
கொலு வைப்போர் நவராத்திரி ஒன்பது நாட்களும் - குழந்தைகள் -கன்னிப் பெண்கள் சுமங்கலிப் பெண்கள் என அனைவரையும் இல்லத்திற்கு  அழைத்து தெய்வீக பாடல்கள் ஒலிக்க கொலுவை மிக அழகாக அலங்கரித்து - குழந்தைகள் பாட்டு பாடி நடனம் ஆடுவது -பிரசாதம் சுண்டல் செய்து படைத்து வழங்குவது தாம்பூலம் கொடுத்து பூஜையை சிறப்பாக செய்வது என மிக அழகாக மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இந்த விசேஷத்தை செய்வார்கள்.
அனைத்து அம்மன் கோவில்களிலும் கொலு வைத்து இந்த நவராத்திரி மிக அழகாக நடைபெறும்.
கொலுவின் முதல் படியில் ஓரறிவு கொண்ட-மரம் செடி கொடிகள் 2வது படி -சங்கு  நத்தை ஆமை 3வது படி ஊர்வன 4 வது படி-பறப்பன  5வது படி --ஆடு மாடு சிங்கமென ஆறாவது படி -ஆறறிவு கொண்ட மனிதன் என ஏழாவது படி -ரிஷிகள் எட்டாவது படி -தேவர்கள் ஒன்பதாவது படி முடிவிலே தெய்வீக பொம்மைகள் என்பதே கொலுவின் சிறப்பான அமைப்பு கொண்ட அம்சமாகும்
ஒரு குழந்தை தன்னுடைய தாயின் அரவணைப்பில் மெல்ல மெல்ல அனைத்தும் கற்றுக் கொள்வது போல -ஒன்றுமறியாது தவறுகள் செய்கின்ற நம்மை நமக்கெல்லாம் தாயாகிய அம்பிகை அவள் படிப்படியாக முன்னேற்றம் கொடுத்து முடிவிலே தெய்வீக பாதையில்  அழைத்துச்சென்று நமக்கெல்லாம் அருள் புரிகின்றாள் .
எனும் சிறப்பே நாம் அறிந்துகொள்ள கூடிய  தத்துவம் ஆகும்.
வாழ்க்கையில் அனைத்து துன்பங்களையும் மறந்து -பக்தி ஒன்றையே மனம்நினைத்து ஆடம்பரத்தை தவிர்த்து -அம்மனின் அருள் கொண்ட பாடல்கள் பாடி ஆனந்த பரவசம் கொண்டு கோவில்களுக்கு சென்று அம்மன் முகம் கண்டு -கொலுவை தரிசித்து அவளையே சரணடைந்து  இந்த ஒன்பது நாட்களும் அவள் புகழ் பாடி வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் சிறப்புகளையும் அடைந்து வாழ்க்கை பயனை அடைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக