துளசி மாலையின் மகிமை
துளசி செடி பிறந்த வரலாறு முதலில் அறிந்து பின் துளசியின் மகிமை தனை அறிவோம்..
பிருந்தாவனத்திலே கண்ணனின்
குழலோசை வனம் முழுதும் இனிமை தர , ஓசை கேட்ட ராதையோ கண்ணன் இடம் தேடி ஓடி வர.. கோபிகைகளின் நடுவினிலே அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் கண்ணனோ புல்லாங்குழல்இசைத்து கொண்டு இருக்கின்றான்.
கோபியர் அனைவரும் ராதை முகம் பார்த்து விலகி வழிவிட, ஆசையோடு கண்ணனை காண்கின்றாள் ராதை
ஆனால் கண்ணனின் பார்வையோ எங்கே பார்க்கின்றது ! அதிசயதோடு கண்ணனின் பார்வை போகும் திசையை ராதையோ நோக்க.. கோபிகைகளின் நடுவினிலே தனித்த அழகோடு நிற்கின்ற மங்கையின் அழகில்தான் சொக்கினானோ கண்ணன் -என கண்டு அழகு முகம் சிவக்க, கோபம் கொள்கின்றாள் ராதை.
ராதையின் கோபம்
அந்த அழகிய ஓவியமாய் நின்ற பெண்ணை பார்த்து "கண்ணனை விட்டு வெகுதூரம் உள்ள பூலோகத்திலே சென்று செடியாக போகக் கடவாய்" என செக்க சிவந்த இன்முகத்தாள் ராதையோ சபித்து விட....
அதன்படி அந்த மங்கை பூலோகத்தில் துளசி எனும் செடியாக மலர்ந்து விட...அதை கண்ட செந்தாமரை மலராள் ஸ்ரீ மகாலட்சுமி ஆனவள் "கண்ணனுக்கு பிடித்தமான துளசி மலர்ந்து இருக்கும் இடத்தில்தான் நான் என்றும் வாசம் செய்வேன்"என மகாலட்சுமியும் துளசியோடு ஐக்கியமாகி தெய்வீக செடியாக துளசியிலே ஆட்சி செய்கின்றாள்.
பூலோகத்தில் பெருமாளுக்கு பிடித்த துளசி
கோபிகைகள் சிறந்தவளாய் -அழகு முகத்தவளாய் -சிரிப்பிலே இனிப்பவளாய் தனித்து நின்ற துளசியை கண்டால் அளவில்லாத ஆனந்தம் கொள்கின்றார் எம்பெருமான்.
பூலோகத்திலே மகாவிஷ்ணு அவதாரமான கண்ணன் என அழைக்கப்படும் பெருமாளின் மார்பினில் துளசிமாலை சாற்றுவோர் நெஞ்சிலே கோவிந்தன் நிறைந்து இருக்கின்றான்.
மகா விஷ்ணுவுக்கு துளசி எவ்வளவு பிடித்தமானது எனும் இந்த வரலாறு அறிந்து ஆனந்தம் கொண்டு பக்தியோடு துளசி மாலை சாற்றி குறை அனைத்தும் நீக்கி நிறை கொண்ட வாழ்க்கை வாழ்ந்து வாழ்ந்த பயனை அடையலாம்.
துளசி மாலையை எம்பெருமானுக்கு சாற்றுவதால் ஏற்படக் கூடிய சிறப்புகள்..
வாழ்க்கையின் புனிதத்தை அறிந்து வாழ்வதற்கு வழிவகுத்து கொடுக்கின்றான் .
புனிதம் அடைந்த மனதுதனை குளிர்வித்து மகிழ்கின்றான்.
குளிர்ந்த மனதினில் குறைகள் அனைத்தும் நீக்குகின்றான்.
குறைகள் நீங்கிடவே அளவிலாத செல்வத்தை தருகின்றான்
கோவிந்தா -கோவிந்தா எனும் திருநாமம் நெஞ்சிலே சுமந்து
துளசிதரா - துளசிதரா என துளசி மாலையை கைகளோ சுமந்து
பெருமாளே பெருமாளே என துதிபாடி மலை நோக்கி கால்களால் நடந்து திருப்பதி செல்லும் பக்தர்களை கண்கொண்டு பார்க்கின்ற எம்பெருமானே...
நின் அருளால்- கவலையில்லாத இனிதான வாழ்வை அருள்வான் எம்பெருமானே.
சரணம் சரணம் சரணம் கோவிந்தா சரணம்.
கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணன் பிறந்த வரலாறு🙏🌹🍀🌹👇👇👇
https://balakshitha.blogspot.com/2021/08/blog-post_29.html
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக