ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

கோகுலத்தில் கிருஷ்ணன்

 


கோகுலத்தில் கிருஷ்ணன் 



கிருஷ்ணன் பிறந்த வரலாறு

ஒரு செடியில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களின் தோட்டமே அண்ணன் தங்கை பாசம் என்பது ....

திருஷ்டி பொட்டு தானே  வைப்பேன் என குழந்தையில் பிடிவாதம் செய்து..‌.
தூக்கி வளர்த்து பாசமழை பொழிந்து திருமணம் சீர்  செய்து தாய்மாமன் மடியில் தமக்கையின் மகனை அமர வைத்து... மொட்டை அடிப்பது காது குத்துதல் என  ஆனந்தம் காணும் அருமையான உறவு பந்தம்  அண்ணன் தங்கை உறவு என்பது .

அப்படிப்பட்ட அண்ணனே
தங்கையின் குழந்தையை வதம் செய்த வரலாறுதான் , கிருஷ்ணன் பிறந்த வரலாறு.

அசரீரி வாக்கு

தவறு செய்பவன் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது  நியதி .  என்னதான் தங்கை தேவகியின்  மீது பாசம் பற்றுதல் வைத்தாலும் ....ஊருக்கு கொடியவனாய்  வாழ்ந்த‌ கம்சன்  அசீரிரி  குரல் கேட்க அதிர்ந்து போனான் ஒரு நாள்.

"தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தான் நேரிடும்  உன் மரணம்" இது அசரீரி வாக்கு . கேட்டதும் அதிர்ந்து போனான் . ஒரு முடிவுக்கு வந்தான் கம்சன்.

பாதத்தில்  முள் பட்டாலே துடித்துப் போகும் ... உயிருக்கு உயிராய் வளர்த்த தங்கை தேவகியின் மகனால் தன உயிருக்கு ஆபத்து என தெரிந்த   அடுத்த கணமே .‌‌..தேவகி, வசுதேவர் இருவரையும் சிறைவைத்தான்.  அடுத்தடுத்த பிறந்த குழந்தைகள் அனைவரும் கம்சன் கொடூரமாக கொல்கின்றான்.

8வது முறையாக கர்ப்பமுற்றாள்  தேவகி.  என் செய்வேன்! கம்சனுக்கு தங்கையாய் பிறந்த பாவத்திற்காக குழந்தைகள் பலியாவதை கண்டு துடிக்கின்றாள். அழுகின்றாள். தெய்வத்திடம் மன்றாடுகிறாள்.

விஷ்ணு எழுந்தருளல்

திடீரென சிறைக்குள்ளே மிகப்பெரிய ஒளிக்கீற்று ... அதிலிருந்து பிரம்மாண்டமான உருவத்தில், நம் அனைவருக்கும் காக்கும் கடவுளாய், தவறு செய்பவர்களை அழிக்கும் தெய்வமாய், உள்ளன்போடு வேண்டுவோர்க்கு அடைக்கலம் கொடுக்கும் பரந்தாமனாய் வைகுண்டத்திலிருந்து எழுகின்றான்கோவிந்தன்.

'கம்சனுக்கு அழிவு காலம் வந்து விட்டது. அத்தாட்சியாய் உனக்கு பிறக்கப்போகும் மகன் கிருஷ்ணன் கோகுலத்தில் வளரவேண்டும் ...அங்கே இருக்கும் நந்தகோபர், யசோதைக்கு பிறக்கும் பெண் குழந்தையை இங்கே தேவகியின் குழந்தையாய் இடம் மாற வேண்டும்' என  வழி சொல்கின்றான்  பரந்தாமன்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே எனும் கோட்பாடு மனதில் எழுந்துவிட்டால் நடந்த சோகங்கள் காணாது புத்துணர்ச்சி காண்பது என்பது திண்ணம்.

கோகுலம் நோக்கி கண்ணன்

தேவகிக்கு குழந்தை பிறக்கின்றது உடனே வாசுதேவர் புறப்படுகின்றார் கொட்டும் மழையில் குழந்தையை தூக்கிக்கொண்டு கோகுலம் நோக்கி....

ஆச்சரியம் அதிசயம் அளவளாவும் ஆனந்தம் அன்று நடந்த நிகழ்வு. குழந்தையை வசுதேவர் தூக்கிய கணம்... சிறை கதவுகள் தானாக திறக்க ,காவலாளிகள் கண்ணயர்ந்து போக, நாத கானம் இன்னிசை பாட சந்திரன் வாழ்த்துமடல்  கூற, நட்சத்திரக் கூட்டம் பிரகாசமாய் ஒளிக்கற்றை வீச , தேவலோகம் திரண்டுவந்து பூ மழை தூவ...



பிறந்த மழலை‌ சிரிக்கின்றான் தெய்வீக  சிரிப்பால் அனைவரும் வசமாக, பிஞ்சு கால்களோ ஜதிதாளம் போட,  பஞ்சு போன்ற கைகள் இதழில்  பட்டு அசைந்தாட,  தந்தையின் கையில் தவழ்ந்தபடி செல்கின்றான்  அழகாய் அசைந்தபடி  செல்கின்றான் கோகுலம் நோக்கி.

கொட்டும் மழை கண்டும் மனம் தளராத வசுதேவர் பத்திரமாக குழந்தையின் கொண்டு சேர்க்கும் பொருட்டு நடக்கையிலே... தெய்வ குழந்தையை காப்பதற்கு ஆதிசேஷன் ஐந்து தலை நாகமாய் படமெடுத்து   மழையிலிருந்து காத்து  தொடர்ந்து அசைந்து வர,  மிக அழகாய்  அலைகடல்,  பாதை அமைத்து வழிவிட்டு மகிழ்ச்சி பெற ,கோகுலத்தை அடைகின்றான் கண்ணன்.

கிருஷ்ண ஜெயந்தி

புண்ணியம் கண்ட நம் மனமெலாம் ஆனந்தம் கரை புரண்டோட ,மகிழ்ச்சி அளவளாவ கிருஷ்ணன் பிறந்த கதை கேட்டீரோ!  கேட்டால் மட்டும் போதாது ஆவணிமாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவன் கண்ணன். அந்தநாளே கிருஷ்ண ஜெயந்தி  என கொண்டாடக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த நன்னாள்.

பெருமாளின் அவதாரமாய் உலகிலுள்ள அக்கிரமங்களை அழிப்பவனாய் நம்மை காக்கும் பரம்பொருளாய் விளங்கும் கிருஷ்ணன் பிறந்த தினத்தில் கிருஷ்ணன் ஜெயந்தியை  கோகுலத்தில் எப்படி கொண்டாடி மகிழ்கின்றார்களோ.... அது போல நாமும் நம்மால் முடிந்த பட்சணங்கள் வைத்து படைத்து கிருஷ்ண கானம் கேட்டு ஆனந்தமாய் ஆத்மார்த்தமாய் கொண்டாடுவோம்.


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்

64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக