11 -10 -2019 வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வாரத்திற்கான நாட் கிழமைகளில் சிறப்பைப் பற்றி பார்க்கலாம் ..
வெள்ளிக்கிழமை-பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை-பவுர்ணமி
புதன்கிழமை- . கிருத்திகை
வியாழக்கிழமை- சங்கடஹர சதுர்த்தி
வெள்ளிக்கிழமை- பிரதோஷம்
11-10-2019 புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை அன்று பிரதோஷம். சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த நாள்.
13 -10 -2019 ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி திதி. அன்றைய தினம்
அமிர்தயோகம் 60 நாழிகையும் இருப்பதால் எந்த காரியமும் தொடங்கலாம் .மிகவும் சிறப்பாக நடக்கும். அன்றைய தினமும் அம்மனுக்கு மிகவும் பெரிய விசேஷம். எல்லா அம்மன்கோவில்களில் பிரத்தியேக பூஜை செய்கின்ற சிறப்பான நாள். மாலை 6 மணிக்கு கோவிலுக்கு சென்று அம்பாளின் அபிஷேகத்தையும் ஆராதனைகளும் தரிசித்து வணங்குவது இந்த பவுர்ணமி பூஜையில் மிகவும் நன்மையை கொடுக்கும் .சிறப்பை கொடுக்கும்- என்பதால் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து நிலவை வணங்கி விரதத்தை முடிக்கலாம் .
16 -10- 2019 புதன்கிழமை அன்று கிருத்திகை .முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் .ஒரு நாள் முழுவதும் 'கந்தா- கடம்பா -கதிர்வேலா' என மனம் முழுக்க சொல்லி விரதமிருந்தால் கேட்ட வரத்தை அப்படியே கொடுப்பான் முருகப் பெருமான் -என்பதால் அன்றைய தினம் கிருத்திகை அருமையாக பூஜை செய்து பலனை அடையலாம் .
17 -10 -2019 புரட்டாசி மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விநாயக பெருமானுக்கு உகந்த தினம் அன்று விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல் மாலையாக கட்டி விநாயகருக்கு சாத்தலாம் .செவ்வரளி நந்தியாவட்டம் போன்ற மலர்கள் அர்ச்சனைக்கு கொடுக்கலாம் . பூஜை அறையில் மாலை விளக்கேற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமம் மலர் வைத்து கும்பிடுவது என்பது மிகவும் சிறப்பைக் கொடுக்கும் .ஓம் கணேஷாய நமஹ எனும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம்.
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு இந்த விசேஷ தினங்களில் தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து இறைவனை வணங்கி அடையலாம்.
Copyright at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக