பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோவில்.
3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில் . மூலவராக காட்சி தருகின்றார் தேவராஜ பெருமாள். பால் போன்ற தெளிந்த முகத்தினிலே நீண்ட நாமத்தோடு மூலவர் தேவராஜ பெருமாள் தம்மை நாடி வரும் பக்தர்களை வரவேற்கின்றார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாம் எப்படி உற்சாகத்தோடு செல்கிறோமோ ..அதே உற்சாகத்தோடு 'கோவிந்தா 'எனும் கோஷத்தோடு -மலையின் மேலே உள்ள பெருமாளை தரிசிக்க 24 படிகளையும் கடக்கும் போது மனதில் உள்ள பாரம் எல்லாம் மறைந்து போகும் .
உன் பாதம் பணிந்தேன் கோவிந்தா மனம் முழுதும் நிறை கொண்டேன் கோவிந்தா -இந்த பாக்கியம் ஒன்றே போதுமய்யா -வாழ்வில் இனி வேறு மகிழ்ச்சி உண்டோ கோவிந்தா' கோவிந்தா வேண்டுகின்ற ஆனந்தத்திற்கு நிகரேது !
என்பதால் அந்த மூலவரை தரிசனம் காணுகின்ற பொழுது அனைவரின் மனதிலும் எழும் என்பது திண்ணமே.
அடுத்ததாக பெருந்தேவி தாயார் சன்னதி. கண்களிலே கருணையோடும் -சிரித்த முகத்தோடும் பெருமாளுக்கு ஏற்ற துணையாக உருவத்தில் மட்டுமன்றி அகமும் முகமும் ஒத்தவளாக மிக அழகாக காட்சி தருகின்றாள்
பெருந்தேவி தாயார்
பெருமாளை பார்த்த பரவசத்தோடு 'கோவிந்தா 'எனும் நாமத்தை விடாது கோஷமிட்டு- பெருந்தேவித் தாயாரை தரிசிப்பது மிக சிறப்பு .பெருந்தேவி தாயாரிடம் இருந்து பெறப்படும் குங்குமத்திலே அதீதமான சக்தி நிறைந்து இருக்கின்றது .அந்த சக்தி மிகுந்த குங்குமத்தை நெற்றி வகிட்டிலும்- மாங்கல்யத்திலும் இடும்போது ஏற்படும் சிறப்புகள்..
சிறப்பு -1 கணவன் மனைவி பூசல்கள் மறைந்துவிடும்.
சிறப்பு-2 தம்பதியர் ஒற்றுமை பலப்படும் .
சிறப்பு- 3 கணவனின் ஆயுள் கிரகம் நீடிக்கும் .
சிறப்பு- 4 மாங்கல்ய தோஷம் விலகும்
சிறப்பு-5 மகிழ்ச்சியான வாழ்க்கை கிட்டும் .
தரிசிக்க வேண்டிய இடங்கள்..
உற்சவர் பேரருளாளன். பெருமாளின் பின்புறம் தங்கத்தினால் உருவான தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி தொட்டு தடவி கண்களில் ஒற்றிக் கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும்.
தனிசன்னதி -சக்கரத்தாழ்வார்
எதிரே அமைந்த அனந்தசரஸ் திருக்குளம் -குளத்தினுள் இரண்டு மண்டபத்தில் நீராழி மண்டபத்திலே அத்தி வரதர் சயன கோலத்திலே
தலவிருட்சம் அரசமரம்
கரியமாணிக்கரை சுற்றிவந்து அரச மரத்தில் ஊஞ்சல் கட்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
கண் பார்வை இழந்த கூரத்தாழ்வார் பார்வை இந்த ஆலயத்தில் தான் கிடைத்தது
என்பது வரலாறு- ஆதலால் கண் பிரச்சனை தொடர்பான அத்தனை குறைகளும் தீரும்.
கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் கண்டு இல்லம் வந்தபிறகும் அந்த திருமாலின் திருவருளால் நமக்கு வரக்கூடிய சோதனைகள் அனைத்தும் பனி போல் நீங்கி விடும் .
சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇
மகிழ்ச்சி எனும்வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும் .சொல்ல முடியாத துயரம் -தொலைதூரம் பறந்துவிடும் .மாதவா நீ இன்றி நான் ஏது! எனும் மந்திரம் மனதில் நிறைந்து விடும். கோவிந்தா கோவிந்தா -கோவிந்தா நின் பாதமே சரணம் சரணம் சரணம்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக