அத்தி வனத்திலே அஸ்வமேத யாகம் நடத்துவது பிரம்மனே -என அறிந்து தம்மை அழைக்காத ஏற்பாடு செய்தது தவறு அல்லவா! கோபமுற்றாள் சரஸ்வதி- எழுந்தாள் வேகவதி எனும் ஆறாக வளைந்து நெளிந்து ஓடி வருகின்றாள் யாகத்தை அழிப்பதற்கு ..என உணர்ந்த மூவுலகத்தையும் காக்கின்ற பெருமாளோ யாகத்தீயில் இருந்து எழுகின்றார்.
பெரும் ஆபத்திலிருந்து அஸ்வமேத யாகம் நடத்தும் பிரம்மனை காப்பாற்ற முடிவெடுத்தார் .
அடுத்த நிமிடம்.. வேகவதி ஆற்றின் குறுக்கே ஆனந்தமயமான பள்ளிகொண்ட பெருமாளாக சயன கோலத்தில் பெருமாளை கண்ட கலைமகள் ...
கோபம் தணிந்து தான் வந்த பாதையை மறந்து வேறு திசை திரும்புகின்றாள்.
சயன கோலத்தில் பெருமாள் அழகைக் கண்ட பிரம்மன் அந்த கண்ணுக்கினிய காட்சிதனை அனைவருமே கண்டுகளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
உடனே பிரம்மன் தன் யாகத்தை காத்த பெருமாளின் உருவம்தனை அத்தி வனத்திலே அத்திமரம் கொண்டு மிக அழகாக வடிவமைப்பதற்காக -வரவழைத்தார் தேவலோக சிற்பி தனை..
விஷ்வகர்மா எனும் அற்புதமான கலைஞரின் கலைவண்ணத்திலே - எம்பெருமான் அவதரித்தார் அத்திவரதர் ஆக எனும் அற்புத வரலாறே அத்தி வரதர் வரலாறு .
யாகதீயிலே உருவாகி -அலை புரண்டு ஓடி வரும் ஆற்றினிலே குளிர்வாகி -அத்திவரதர் எனும் திருநாமம் பெயராகி -அனந்த சரஸ் திருக்குளத்தினிலே ஐக்கியமாகி-
40 வருடத்திற்கு ஒருமுறையே காட்சி தருவேன் என்ற அசரீரி ஒளியாகி பக்தர்களின் மனதில் ஒன்றாகி விட்டார் அத்திவரதர் .
40 வருடத்திற்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து அத்தி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் -24 நாட்கள் சயனித்த கோலத்திலே-
24 நாட்கள் நின்ற கோலத்தில் என காட்சி தருகின்ற எம்பெருமானின் தரிசனம் காண கிடைக்காத பேரின்பம் .
அடுத்த 24 நாட்கள் சயனித்த கோலத்தில் என காட்சி தருகின்ற எம்பெருமானின் தரிசனம் கோடி கோடி புண்ணியம்
அனந்த சரஸ் திருக்குளத்தில் அத்திவரதருடைய திருமேனி யாருடைய பாதமும் பட்டு கலங்க படாத வண்ணம் சுற்றிலும் கம்பிகளால் மதில்சுவர் எழுப்பப்பட்டு இருக்கின்றது.
அந்த குளத்தின் அருகில் சென்று நிற்கின்ற அந்த நிமிடத்தில - நம்முடைய உடலும் மனமும் புனிதமாக அந்த அற்புதமான நிகழ்வு தன்னை நாம் அறிந்திடுவோம் அக்கணமே ..
அனைவருடைய வாழ்க்கையிலும் குளிர்ச்சி தந்து காத்து அருள்வாய் வெங்கடேசா பெருமானே கோவிந்தா பரந்தாமா கோவிந்தா என அழைத்து அகக்கண்ணால் இரண்டு மண்டபத்திலே...
ஒரு மண்டபம் நீராழி மண்டபத்தில் அடியிலே சயனக் கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதரை ஆனந்தமயமாக கண்டு ரசிப்பதற்கு பாக்கியம் கிடைப்பது என்பது அவன் அருள் பெற்றோர்களுக்கு சாத்தியமே.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா சரணம் சரணம் சரணமப்பா.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக