ஒரு மரம் தன்னுடைய சொந்த பந்தங்கள் என இலை பல கிளைகள் பெற்று பசுமையோடு வாழ்ந்து -பூ காய் பழம் என சந்ததிகள் பல பெற்று பல்லாண்டு காலத்திற்கு வாழ்ந்து முடித்தால் அதன் அழகே தனி அன்றோ!
ஒரு மனிதனும் திடகாத்திரமாக மரம் போன்று இலை பல கிளைகள் என சொந்த பந்தங்களோடு பசுமையாக வாழ்ந்து -வாழ்க்கை பயனை அடைவது என்பது மிகப்பெரிய ஆனந்தமே. அந்த ஆனந்தம் பெறுவதற்கு தெய்வத்தின் அருள் என்றும் வேண்டும் .ஆனால் சிலர் வாழ்விலோ...
வாழ்க்கையில் துர்மரணங்கள் தொடர்ந்து நடப்பது -பல தடங்கல்கள் தொடர்ந்து அடிபடுதல் -என துன்பங்கள் தொடர்ந்தால் அதற்கு காரணங்கள் புரியாது கவலை கொள்கிறோம். பிறந்த ஜாதகத்தில் தோஷம் இருப்பின் -இப்படிப்பட்ட நிகழ்வுகள் குடும்பத்தில் நடக்கும் . இதற்கான தீர்வு அறிந்து பரிகாரம் செய்தால் வாழ்க்கையிலே நிச்சயம் சிறப்பை காணலாம். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் தேவராஜபெருமாளின் பின்புறம் பஞ்சலோக பல்லிகளாக தங்க பல்லி வெள்ளி பல்லிகளை பக்தர்கள் தொட்டு வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையிலே சிறப்பை பெறலாம்.
பஞ்சலோகத்தால் ஆன கவசத்தை கிருஷ்ணர் அன்று அர்ஜுனனுக்கு கொடுத்து கொடுத்ததால்தான் -அர்ஜுனன் தெய்வீக சக்தியை பெற்று வெற்றி பெற்றார் என்பது வரலாறு.
தங்கம் -வெள்ளி -செம்பு -இரும்பு- ஈயம் கலந்த கலவையே பஞ்சலோகம் ஆகும். இந்த பஞ்சலோகத்தில் நவகிரகங்களின் சக்திகளும் அடங்கி இருக்கின்றது .தங்கம் -குரு , வெள்ளி சுக்கிரன் ,செம்பு -சூரியன் ,இரும்பு -சனி, ஈயம்- கேது என நவக்கிரக சக்திகள் இதனுள் அடங்கிஇருப்பதால்
பஞ்சலோகத்தில் ஆன மோதிரம் மற்றும் காப்புகள் அணிந்தால் அந்த சக்தியின் அதிர்வலைகள் நம்முடைய உடம்பிலே தெய்வீக ஆற்றலை கொடுக்கின்றது. நாம் வாழ்க்கையில் சகல நன்மைகளும் பெற்று அதற்கான சிறப்பான பலன்கள் அனைத்தும் பெறலாம்.
தோஷங்கள் கண்திருஷ்டி மனக்குழப்பம் அனைத்தும் விலகி வாழ்வினில் மகிழ்ச்சி நிலவ கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇
அதனால்தான் கோவில்களில் பிரபஞ்ச சக்தி வாய்ந்த பஞ்சலோக சிலை வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
அதுபோலவே மிகவும் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள தெய்வீகமான பஞ்சலோக பல்லிகளை தொட்டு வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள் ..
சிறப்பு -1 ஜாதகத்தில் உள்ள கிரக தோஷம் அனைத்தும் நீங்கும் .
சிறப்பு- 2 துஷ்ட சக்திகள் விலகி புதிய தெம்பு கிடைக்கும் .
சிறப்பு -3 நம்முடைய உடல் -மனம் உயிர் அனைத்திற்கும் பாதுகாப்பு கவசம் அளிக்கும் .
சிறப்பு- 4 தொட்டு வணங்கும் போது தெய்வீக மின் அதிர்வலைகளானது நல்ல சிந்தனையை தூண்ட செய்யும்.
சிறப்பு- 5 தெய்வத்தின் அனுகிரகம் கிட்டும்.
என்பதை அறிந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு சென்று -மூலவர் தேவராஜ பெருமாளை தரிசித்து பின்புறம் உள்ள பஞ்சலோகத்தினால் ஆன தங்க பல்லியையும் வெள்ளி பல்லியையும் வணங்கி கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
Copyrights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக