திங்கள், 26 ஆகஸ்ட், 2019

விநாயகர் சதுர்த்தி களிமண் பிள்ளையார் வழிபாட்டு முறை



களிமண் பிள்ளையார் வாங்கவேண்டிய வழிமுறைகள் ‌‌

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

ஆனந்தத்தோடு விநாயகருக்கு புகழ்மாலை சூடுகின்ற பாடல் வரிகளின் விளக்கத்தை காண்போம்...

ஐந்து கரத்தனை உடையவனே! ஆனைமுகத்தனை கொண்டவனே! முழுமதியின் அரைவட்ட பிறை போன்ற அழகான வயிற்றினை கொண்டவனே -நந்திதேவர் பாசம் கொண்ட மகனாக திகழ்பவனே! ஞானமெனும் சிறந்த அறிவு படைத்தவனே -உமையே  எம் மனதில் என்றென்றும் நினைத்து போற்றுகின்றேனே! எம்பெருமானே உமையே  வணங்குகின்றேன்.



ஐந்து கரத்தினை உடையவன் ..
பக்தர்களுக்கு அபயம் அளிக்கின்ற கை ஒன்று- பகைவர்களை ஒடுக்க அங்குசம் ஏந்திய கையோ இரண்டு-தீயவரை அழிப்பதற்கு பாசக் கயிற்றினை பிடித்த கை மூன்று பிடித்தமான மோதகத்தையுடைய கையோ நான்கு -அமுதம் போன்ற திகட்டாத வாழ்வுதனை கொடுப்பதற்கு அமுத கலசம் ஏந்திய துதிக்கை ஐந்து- என மிக கம்பீரமான தோற்றத்தை உடையவனாக விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார்.


விநாயகர் சதுர்த்தி அன்று ஒருமுறை பாடி ஒரு கணம் விநாயகரை நினைத்தாலே போதும் தீவினைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஆனந்தம் நிலைக்க செய்வான் கணபதியே.அன்றைய  களிமண் பிள்ளையார் வைத்து படைப்தற்கான காரணத்தை  அறிவோம்...


மனித பிறவி என்பது கடவுள் கொடுத்த வரமன்றோ! இனிதான இந்த  பிறவிதனில் - நாம் அகங்காரம் ஆணவம் இன்றி எளிமை எனும் பண்பு கொண்டு நல்லொழுக்கம் ,இறை பக்தியோடு வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைந்து -முடிவில் மண்ணிலே இரண்டற கலந்து என்னோடு ஐக்கியமாகுங்கள். உங்கள் அனைவரையும் மோட்சத்திற்கு நான் அழைத்து செல்கின்றேன் எனும் தத்துவத்தை விநாயகப் பெருமான் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார்.



வீட்டிற்கு அழைத்து வரும் களிமண் பிள்ளையாரின்  சிறப்பு அம்சங்கள்..


வீட்டில் செல்வவளம்- பொருளாதார சுபீட்சம் வாழ்க்கையில் நிலையாக தங்குவதற்கு வீட்டினில் படைப்பதற்கு  அமர்ந்தபடி காட்சி தரும் விநாயகர் சிலை வாங்குவது மிக சிறப்பு.

தொழில் வளம் பெருகி நல்ல முன்னேற்றத்தை காண்பதற்கு நாம் தொழில் செய்யும் அலுவலகத்தில் படைப்பதற்கு நின்ற கோலத்திலே காட்சி தரும் பிள்ளையார் வாங்கி வழிபடுவது மிக சிறப்பு.


 துன்பங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கை சுகம்பெற - காரிய சித்தி பெருக- நினைத்தது  நிறைவேற இடதுபுறம் தும்பிக்கை திரும்பிய நிலையில் இருக்கும் பிள்ளையாரை வாங்கி வந்து விநாயக சதுர்த்தி அன்று வழிபடுவது  மிக மிக சிறந்தது.

விநாயக சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் வைத்து வழிபட்டு சுபிட்சமான வாழ்க்கை பெற்று விநாயக பெருமான் அருள்தனை பெறுவோம்

திருமணத்தின்போது மாங்கல்யம் செய்வதற்கான ஐதிக முறைகள்🙏🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.html



சொந்தமாக வீடு மனை வாங்குவதற்கான 10 வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள் 🌹🍀🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


கண் திருஷ்டி தோஷம் அனைத்தும் விலகி சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடைப்பெறும் கல்  உப்பிலே செய்யகூடியு ஐந்து விதமான பரிகாரங்கள்🙏🌹🍀👇👇

https://youtu.be/0p5op0-Zjwk



Copy rights at Balakshitha



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக