நாம் கோவிலுக்கு செல்லும்போது கொண்டு செல்லக்கூடிய அர்ச்சனை பொருட்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்* அர்ச்சனை பொருட்களில்
மிகவும் முதன்மையானது
தேங்காய்* தேன் போன்ற இனிமையான நீர் நிறைந்த காய் -போன்ற இனிமையான வாழ்வையும், தேங்காயின் உள்ளே இருக்கும் வெண்மையான நிறம் -போன்ற தூய்மையான மனதையும்
'கொடு இறைவா'
என வேண்டி அர்ச்சனை பொருளில் வைக்கப்படும்
ஒரு பொருள் தான் தேங்காய்*
அடுத்து வெற்றிலை பாக்கு*
வெற்றியை கொடுக்கக்கூடிய பசுமையான இலை -வெற்றிலை*
வெற்றிலையோடு-பாக்கும்
சேர்த்து வைப்பது குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் *
சகல நன்மைகளும் -பெற வேண்டும் *என்பதற்காக அர்ச்சனை பொருளில்
வெற்றிலை பாக்கு வைக்கின்றோம் .
அடுத்ததாக வாழைமரத்தில் காய்க்கக்கூடிய வாழைப்பழம்*
வாழையடி வாழையாக குலம்
தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழைப்பழத்தை அர்ச்சனைப் பொருளில் வைக்கின்றோம்.
அர்ச்சனை பொருட்களில் மிகவும் சிறப்பானது பூக்களால் அர்ச்சனை செய்வது *
பல மருத்துவ குணங்கள் கொண்டது மலர்கள்*
என்பதால் மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்யும்போது 'நோய்நொடி இல்லாத வாழ்க்கையை'
இறைவன் அருளுகின்றார்* என்பதால் பூக்களை
அர்ச்சனை பொருளில்
வைப்பது மிகவும் சிறப்பு*
அர்ச்சனை பொருளின் மகத்துவத்தை புரிந்து கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்து இறைவனை வழிபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக