வியாழன், 9 ஏப்ரல், 2020

பூண்டின் மருத்துவ குணங்கள்

பூண்டுப்பால்

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய உடலைப் பாதுகாத்துக் கொள்வது நம்முடைய முக்கியமான கடமை .

ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோம் என்று  அலட்சியமாக இருந்துவிட்டு நோய் வந்த பிறகு துன்பப் படுவதை விட நோய் வருவதற்கு முன்பே இயற்கை மருத்துவத்தின் மூலம் நம்முடைய உடலை காத்துக்கொள்ளலாம்.


நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்துபயன் அடைவதற்கு வீட்டிலேயே   நிறைய மூலிகை பொருட்களை போன்ற அற்புதமான பொருட்கள் பல உண்டு..

 அதில் மிகவும் முக்கியமானது பூண்டு.


தினம் ஓரளவு பாலொடு இருவளவு நீராறு அறுபல்பூண்டிட்டு சுண்டி வர உள்ளுடம்பு ஏற்றுவிட்டால்-ஏது நோய்நொடியென பெரியவர்கள்
சொல் கேளிரோ-  கை கால் மூட்டுவாயுசுளுக்கு எனும்
 வலியனைத்தும் பறந்திடுமே.

இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான வரப்பிரசாதம் பூண்டு.


பூண்டில் உள்ள அலிசின் என்னும்  ரசாயன பொருள் நம் உடம்பில் உள்ள நச்சுக் கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டதால் நோய் பிணியில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

 இந்த கோடை காலத்தில் வரக்கூடிய சரும நோயில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் .


6 அல்லது 7 பல் போன்று ஒரு கிளாஸ் பால் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும் ..

1/2 க்ளாஸ்  பாலாக  சுண்டியதும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அருந்தலாம்.

 நம்முடைய உடலில் வாயு பிடிப்பு சுளுக்கு மூச்சுபிடிப்பு என அடிக்கடி ஏற்படும் தொந்தரவில் இருந்து நிவாரணம் பெறலாம்.



 கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் உடல் எடையை குறைக்கும் .சுவாசப் பிரச்சனை- சர்க்கரை நோய்- ரத்த அழுத்தம் அனைத்தும் சீராக இருப்பதற்கு நாம் கண்டிப்பாக வாரம் ஒரு முறை பூண்டு மஞ்சள் பால் எடுத்துக் கொள்ளலாம் .நன்றாக செரிமானம் ஆகும் .

நெஞ்சு வலி போன்று உணர்ந்தாலும் பாரமாக இருப்பது போன்று இருந்தாலும் -தினமும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இவ்வாறு எடுத்துக்கொண்டால் பூரணமாக குணம் ஆகும்.


பூண்டு சட்னி

10 பல் பூண்டு ஒரு தக்காளி 5 காய்ந்த மிளகாய் எடுத்து நல்லெண்ணெயில் வதக்கி உப்புக்கல் சேர்த்து அரைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டினால் பூண்டு சட்னி தயார்.

நோய்நொடிகள் தீர்க்கும் இஞ்சியை பயன்படுத்தும் முறை🌹🍀🌹👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/08/blog-post.html

வாழ்க்கையில் சுபிட்சம் பெற எலுமிச்சை பழத்தில் செய்யக்கூடிய

பரிகாரங்கள்🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/04/part-2.html


நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த சட்னியும் வாரத்தில் ஒரு முறை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவும்.

உடலில்  கழுத்து கை கால் களில் ஏற்படும் சுளுக்கு ஏற்பட்டாலும் இந்த பூண்டு மருத்துவம் மூலம் எளிதாக குணப்படுத்தி கொள்ளலாம்.
 10 பல் பூண்டை உரித்து சிறிதாக உப்புக்கல் சேர்த்து மைய அரைத்து சுளுக்கு உள்ள இடத்தில் பத்து போட்டால் வந்த இடம் தெரியாமல் அனைத்தும் மறைந்துவிடும்.


அதன் பிறகு ஐஸ் கட்டிகொண்ட பாலித்தீன் கவரில் ஒத்தடம் கொடுக்கலாம்.

பூண்டின் பயன் தெரிந்து வாரம் ஒருமுறை கண்டிப்பாக பூண்டு பால் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்று வளமோடு சிறப்பாக வாழலாம்.

நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து- வாழ்ந்த பயனை அடைந்து வாழ்வில் நிறைவு பெற்று
 இனிதாக வாழ்ந்து பயன்பெறுங்கள்.
இதையும் படித்து பயன்பெறலாம் 👇👇👇

புதிதாக சொந்தமாக வீடு மனை வாங்குவதற்கான ஸ்ரீ வராக மூர்த்தி வழிபாடு 🙏🌹🍀🌹👇👇👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/02/blog-post.html


நல்ல விஷயம் பகிர்வது சிறப்பு என்பதால் மற்றவருக்கும் பகிரலாம்.

Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக