சமையல் அறைக்குள் போவதற்கு முன்பு மனதில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய மூன்று விஷயங்கள்
1-சமையலறை நல்ல சூரிய ஒளி கொண்ட வெளிச்சமாக இருத்தல்
இருக்க வேண்டும் .
2-கிச்சன் எப்பொழுதும் சுத்தமாக இருத்தல் வேண்டும் .
3- குறிப்பேடு ஒரு சிறிய பேனா எப்போதும் கிச்சனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டும்.
சமையல் அறை என்றாலே புரியாது சிலசமயம் டென்ஷனாகி விடுகின்றோம்..
அதையெல்லாம் தவிர்த்து நான் சொல்லும் இந்த முறைகளை முறையாக பின்பற்றினால் நேரத்தையும் சேமிக்கலாம்.
டென்ஷன் இல்லாது சமைக்கலாம்
அனுபவம் பெற்று -நம் குழந்தைகளுக்கு நாளை நல்ல வழிகாட்டியாக திகழலாம்.
இனி சமையலறையில் வெளிச்சம் கொண்ட அறையாக இருத்தல் வேண்டும் -என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்..
சமையலறை நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் நல்ல ஒளி இருந்தால் செய்கின்ற சமையலறை சுவையாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இரவிலும் சமையல் செய்யும்போது நல்ல ஒளி கொண்ட பல்புகள் இருந்தால் நல்லது.
மாலை 6 மணிக்கு மேல் சமையலை தவிர்க்கும் நேரங்களில்- ஒரு சின்ன நைட்லாம்ப் பல்பு எரிந்து கொண்டிருந்தால் சுபிட்சம் நிலைக்கும்.
மகாலட்சுமி வாசம் செய்ய கூடிய சமையல் அறையாக திகழும் என்பது ஆன்மீக பூர்வமான கருத்து..
இதை மனதில் கொண்டு சமையலறைக்குள் செய்யும்போது நல்ல ஒளி கொண்ட வெளிச்சம் கொண்ட சமையல் அறையாக உருவாக்குங்கள்.
குறிப்பு ஏடு
சமையல் கிச்சனை பராமரிக்கும் அனைவரும் ஒரு சின்னடைரி பேனா ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிச்சனில் இருப்பது அவசியம் .
இந்த டைரி பேனா எந்தவிதமான குறிப்புகள் எடுக்கலாம் என்பதை பார்க்கலாம்
1-சிலிண்டர் மாற்றும் தேதி
2 - வாங்கவேண்டிய மளிகைபொருட்களை மறந்துவிடாமல் இருப்பதற்கு குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் .
சிலிண்டர் மாத வரைமுறை நாள் அறிந்து கொண்டால் அடுத்து save செய்யக்கூடிய முறை நமக்கு தெரிந்துவிடும்- என்பதால் மாதாமாதம் சிலிண்டர் மாற்றும் தேதியை குறிப்பெடுத்துக் கொள்வது அவசியம்.
3-சுத்தம்
உயிருக்கு அமுதூட்டும் உணவு செய்கின்ற இடம் -அதனை சுத்தமாக வைத்தல் அவசியம்.
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று செல்வங்கள் குவிய வேண்டும் எனும் சுபிட்சம் ஒவ்வொரு வீட்டிலும் அமைய வேண்டும் புரிந்துகொண்டால் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் சிறந்த குடும்பத் தலைவி என்னும் பூரிப்பு நிச்சயம் இருக்கும்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக