சஷ்டி விரதம்
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாழ்வின் சிறப்பை கொடுக்கக்கூடிய விரதம் சஷ்டி விரதம் .
முருகனின் அழகிய திருக்கோலத்தை மனதால் கண்டு மெய்உருகி வேண்டி நின்றால் போதும்... மெய்யனவன் நினைத்த காரியத்தை இனிதே
முடித்து வைப்பான்.
தீபம் ஏற்றி பக்தி மணம் கமழ அன்றைய தினத்தில் முருகனின் புகழ் பாடுவது சிறப்பு .
ஆயிரம் வேலை இருப்பினும் 10 நிமிடம் முருகனின் கந்த சஷ்டி படியுங்கள்.
ஓம் சரவணபவ எனும் மந்திரத்தை உச்சரியுங்கள்.
இரவு பாலும் பழமும் எடுத்து கொள்ளுங்கள்.
சிந்தைக்கு தெளிவு கொடுங்கள் சித்தம் தெளிவு கொள்கையில் சிதற வேண்டிய சில நல்முத்துக்கள்...
புன்னகை மாறாத இனிய சொல் பேசுங்கள்.
தம்மை பற்றி சிந்திக்காது மற்றவர்களைப் பற்றி சிந்தியுங்கள்.
நம்முடைய எண்ணங்களுக்கு விரிவாக்கம் கொடுங்கள்.
செய்த தவறு மறுபடி வரா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
உயிரினங்களுக்கு தானதர்மங்கள் செய்யுங்கள்
சிந்தனைக்கு தேனமுது
மண் சார்ந்த மரபுகள் போற்றாத மனம் விழுந்துவிடும். நம்முடைய தமிழ் மரபு பண்பாடுகளின் படி வாழ்கையில் உள்ள மகிழ்ச்சியின் நிறைவை காண்போம்.
நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பது பழமொழி. சச்சரவுகள் உள்ள குடும்பம் நிம்மதி என்றும் இழந்துவிடும் . சண்டை போடும் தம்பதியரிடையே வளரும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
விதை என்பது நிலத்தை சார்ந்தே அதன் வளர்ச்சி காண முடியும். மிகப் பெரிய பூக்கள் மலரும் மலர் வனமாகவோ, ஆலமரம் போன்று தழைத்து நிற்கும் மரமாகவோ காட்சி தரும்.
அதுபோலவே குழந்தையின் வளர்ச்சி மலர்ச்சி அனைத்திலும் கவனம் கொள்க.
குடும்பத்தினை அனுசரணையோடு அரவணைத்து காத்து குடும்பத்தை வழிநடத்தும் தம்பதிகளின் மனம் என்றும் மலர்வனமாய், பூத்துக்குலுங்கும் புது வனமாய், அதைக்கண்டு பெற்றவர்கள் மனம் குளிரும் குளிர்வனமாய், பிள்ளைகளுக்கு என்றும் மகிழ் வனமாய், வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்வில் இனிமை காண்கவே.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக