ஞாயிறு ஸ்பெஷல்
ஞாபகம் வருதே
வாழ்வினில் சில பக்கங்கள் இனிமையானவை.
இனிதான பக்கங்களில் , சில இடங்களில் எழுத்துக்களில் சில தடங்கல்கள் ஏற்படும்.
அடடா இப்படி ஆகி விட்டதே ! என்று மனதுக்கு வருத்தம் ஏற்படும் . அதுவே திருஷ்டி அதாவது கண்ணாறு என்கின்றோம் .
அனைத்து பக்கங்களிலும் அழகாக அமைந்து விட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்... கொஞ்சம் ஜாக்கிரதையாக பொறுப்பாக செய்து இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.
அதுபோலவே ஒரு விசேஷம் செய்கின்றோம் . மிக அழகாக, பார்ப்பவர்களுக்கு குளிர்ச்சியாக, அடடா விசேஷம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக அழகாக சிறிய விழாவாயினும் பெரிய விழாவாயினும் செய்து முடிக்கின்றோம்.
அடுத்த சில நாட்களில் ஏதேனும் ஒரு கலக்கம் வீட்டினில் எட்டிப்பார்க்கும். அடிபடுதல் ஆக இருக்கலாம். குடும்பத்தில் பிரச்சனை வரலாம். நிம்மதி இழக்கலாம் .அந்த நேரத்தில் திருஷ்டி பட்டு இப்படி பிரச்சினைகள் கொடுக்கின்றது என்று எண்ணத்தோன்றும் .
பெரியவர்கள் இருந்தால் திருமணம் முடிந்ததும் இப்படி செய்தால் நல்லது என்று முழுமையான விளக்கத்தை நமக்கு சொல்லியிருப்பார்கள்... இந்த கஷ்டம் நமக்கு வந்திருக்காது என்று நினைக்கத் தோன்றும் .
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். மிகவும் கவனம் தேவை. நம் குடும்பம் நலமாக இருப்பது பெண்களின் கையில்தான் உள்ளது .திருஷ்டிப் பரிகாரத்தில் படிப்படியாக அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
அமாவாசை ,ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய், வியாழன் திருஷ்டி சுற்ற ஏற்ற நாட்கள் ஆகும்.
பூசணிக்காய் , கற்புரம் , கல்லுப்பு ,எலுமிச்சம்பழம் , கண்மை, சுண்ணாம்பு, மஞ்சள் , குங்குமம் இவைகளை கொண்டு திருஷ்டி சுற்றுவது சிறப்பு.
இவை அனைத்தும் கொண்டு அடிக்கடி நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அமர வைத்து, பெரியவர்களால் கையால் திருஷ்டி சுற்றி போடவும்.
படிப்படியாக திருஷ்டி சுற்றுதலின் சிறப்பினைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்...
ஞாயிற்றுக்கிழமை போனபின், அடடா மறந்துவிட்டேன் என்று சொல்லாது முக்கியமாக குழந்தைகளுக்கும் சேர்த்து, திருஷ்டியின் மகிமை தெரிந்துகொண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் கண்டிப்பாக அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடவும்.
வீட்டிலுள்ள திருஷ்டி அனைத்தும் விலகி குடும்பம் சுபிட்சம் பெற்று இனிதாக வாழ்ந்து பிறந்த வாழ்வின் பயன் பெறுவோம்.
கல்லுப்பிலே செய்யக்கூடிய திருஷ்டி பரிகாரங்கள்🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html
எலுமிச்சை பழத்தில் செய்யக் கூடிய திருஷ்டி பரிகாரங்கள்🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2020/04/part-2.html
திருமணம் முடிந்ததும் செய்யக்கூடிய ஆரத்தி சுற்றுவது எப்படி?
https://balakshitha.blogspot.com/2019/03/blog-post_27.html
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக