திருச்செந்தூர் சிறப்பு
முருகப்பெருமானின் தினம் இன்று
இன்று திருச்செந்தூர் மகிமை தனை தெரிந்துகொள்வோம்..
முருகப்பெருமானின் இரண்டாவது ஆறு படை வீடே திருச்செந்தூர். சொந்தமாக வீடு கட்ட விரும்புவோர் ஒரு முறை திருச்செந்தூர் சென்று வாருங்கள். அங்கு குடி கொண்டுள்ள முருகப் பெருமானை தரிசித்து அந்த கடல் நீரை வீட்டில் கொண்டுவந்து தெளித்தால்... அல்லது சொந்த பூமி வாங்கி வீடு கட்ட முடியாது இருக்கும் இடத்தில் தெளித்தாலும் வீடு கட்டும் யோகம் இனிதே நடக்கும் .
குழந்தை வரம்
குழந்தை வரம் வேண்டி நிற்போர் திருச்செந்தூர் சென்று வாருங்கள். கோவிலின் இடது பக்கத்தில் வள்ளி குகை காணலாம். அந்த குகைக்கு முன்பாக சந்தன மலையில்...
குழந்தை வரம் வேண்டி முருகப்பெருமானின் மனமுருக வேண்டிக் கொண்டு , தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும்.
தாலாட்டு பாடுவதற்கான நேரம் கைகூடி குழந்தை பாக்கியம் இனிதே நடக்கும்.
திருச்செந்தூரில் பஞ்சலிங்க தரிசனம்
செல்வம் தழைத்தோங்க ஆரோக்கியமான வாழ்வு பெற , குலம் தழைக்க , பாவம் விலகி புண்ணிய பலன்கள் அனைத்தும் பெறுவதற்கு திருச்செந்தூர் செல்லுங்கள்.
முருகப்பெருமானை வணங்கி , வலது புறத்தில் பஞ்சலிங்க சன்னதி உள்ளது.
மூலவர் முருகனின் இடது புறம் சிறு வழியே நுழைந்து... சுற்றி வலது புறமாக வந்து பஞ்சலிங்க தரிசனம் செய்வது கோடி புண்ணியம் .
ஒருமுறை திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வாருங்கள் தெய்வீக கடல் அலையில் ஸ்நானம் செய்து முருகப் பெருமானை வழிபட்டு நல்லருள் பெற்று அனைத்து வளமும் பெற்று பிறந்த பயன் அடைவோம்.
பழையன கழிதலும்- புதியன புகுதலும்
நிச்சயமாக தீர்மானம் எடுக்க பழகுவோம். லட்சியம் இல்லையேல் வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லை.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நல்ல எண்ணங்களின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.
கர்ணன் போல முடியாவிட்டாலும் ,தான தர்மங்கள் நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம்.
மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவிகள் செய்ய வேண்டும் தீர்மானம் எடுக்கலாம். இயற்கை வளங்களை உருவாக்குவதில் நம்முடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கலாம். இவை அனைத்தும் பொது தீர்மானம் .
சுய தீர்மானம் என்பதிலும் கண்டிப்பாக நம்மிடத்தில் ஒரு லட்சியம் இருத்தல் அவசியம் . நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் . நாம் ஒரு சொந்த வீட்டில் வாழ வேண்டும். சொந்த தொழிலில் முன்னுக்கு வரவேண்டும் என்பதும் ஒரு லட்சியம்.
இப்படி நம்முடைய குடும்பத்தை சார்ந்த வகையில் எடுக்கக்கூடிய லட்சியத்திற்கு ஒரு தீர்மானம் வகுத்துக் கொள்ளலாம்.
மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாது உபத்திரவம் நேராது அமையக்கடிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள் .
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.. அந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக, ஆனந்தமான ஒரு வாழ்க்கையாக வாழ்வதற்கு ஒரு நல்ல தீர்மானம் எடுத்து வாழ்வினில் வெற்றி பெறுக. சிறப்பு பெறுக . பிறந்த வாழ்வின் பயன் பெறுக.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக