மகாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையின் சிறப்பு பற்றி காண்போம்..
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நலம் பெற்று வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு அற்புத நாள் இன்று.
நம்முடைய மூதாதையரை நினைத்து சிந்தையில் இருத்தி வழிபடக்கூடிய அற்புத நாள் இன்று.
வாழ்க்கையில் நம்முடைய தவறுகளை நாமே உணர்ந்து மாற்றி திருத்திக் கொள்ளக் கூடிய மகா புண்ணிய தினமான அற்புத நாள் இன்று.
அன்றைய தினத்திலேய்யக் கூடிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள்
நம்முடைய மூதாதையர்கள் பூலோகத்தில் வந்து நம்மை வாழ்த்தி வளம் பெற அருள் செய்யும் அற்புதமான இந்த நாளிலே, நாம் செய்யக் கூடிய மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
நம்முடைய மனம் மிகவும் உன்னதமானது. வாழ்க்கையில் தவறு எது, சரி எது என்று நிர்ணயம் பண்ண கூடிய நம்முடைய மனதில் அனைத்து எண்ணங்களையும் மறந்து ஆத்மார்த்தமாய் முன்னோர்களை நம் வீட்டில் வரவேற்போம்.
எள்ளும் தண்ணீரும் அன்றைய தினத்தில் இறைப்பது நம் முன்னோர்களுக்கு நாம் செய்கின்ற ஆத்மீகமான ஒரு வழிபாடு. கால் படாத இடத்தில் எள்ளும் தண்ணீரும் இறைத்து நம் முன்னோர்களின் ஆத்மாவை குளிர செய்யலாம் .
அது நம்முடைய வாழ்க்கைக்கு குளிர்ச்சியை அதாவது சுபமான சுபீட்சமான வாழ்வு கொடுப்பதற்கு வழிவகுக்கும்.
பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.அது நம்முடைய பூர்வஜென்ம பாவத்தை போக்கி புண்ணிய பலன்கள் பெறுவதற்கு வழி வகுக்கும்.
அறுசுவை உணவு வடை பாயாசத்துடன் நேரத்தோடு படைத்து காகத்திற்கு சாதம் வையுங்கள். நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வந்து உணவை ஏற்றுக் கொள்வர்.
நம்முடைய வாழ்வில் வறுமைகள் நீங்கி, பஞ்சமில்லாத செல்வ செழிப்பை கொடுக்கக்கூடிய இந்த மஹாளய அமாவாசை தினத்தை முறைப்படி அனுஷ்டித்து, வாழ்வில் அனைத்து பயன்களையும் பெறுவோம்.
வருடந்தோறும் திதி கொடுக்க தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசையில், மனதில் மூதாதையரை ஆத்மார்த்தமாய் நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து , அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு வைத்து, காகத்திற்கு சாதம் படைத்து நம்முடைய முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.
தவறு செய்வது என்பது மனித இயல்பு ஆனால் அந்தத் தவறை திருத்திக்கொண்டு வாழ்வில் இனி ஒரு தவறு செய்யாத வண்ணம் பார்த்துக் கொள்வது ...நம்முடைய தீர்மானமாக எடுத்துக் கொள்ளக் கூடிய நாள் மகாளய அமாவாசை.
பலமான காற்று வீசும் பொழுது தூக்கிச் செல்லப்படும் காகிதங்கள் போல, நம்முடைய மனதில் உள்ள தவறான எண்ணங்களை தூக்கி வீசிவிட்டு ஆணித்தரமாய் இருக்கும் கற்களைப் போல , நல்ல தீர்மானங்கள் நல்வழி பாதையில் செல்லக் கூடிய நல்ல எண்ணங்கள் மனதில் இருத்தி முன்னோர்களின் ஆசி பெற்று வாழ்வில் வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்வின் பிறந்த பயனை அடைகவே.
தாய் தந்தை இறந்துவிட்டால் அடுத்த ஒரு வருஷத்திற்குள் விசேஷம் செய்யலாமா?
https://balakshitha.blogspot.com/2021/09/blog-post_30.html
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக