புதன், 5 ஜூன், 2019

அமாவாசை அதிசயம்



அமாவாசை அன்று திருக்கடையூரில் நடந்த அதிசயம்

அழகு முகத்தவள்
 ஆனந்தம் தருகின்றாள்*
கருணைப் பார்வையிலே
கலக்கத்தை நீக்குகின்றாள்*
 மூக்குத்தி ஜொலிப்பினிலே
 அக இருளை நீக்குகின்றாள்*
உதட்டு  சிரிப்பினிலே
 உலகையெல்லாம் காக்கின்றாள்* மஞ்சள் மகிமை தனில்
 மங்களத்தை அளிக்கின்றாள்* குங்குமம் குறையாமல்
அள்ளி தந்து மகிழ்கின்றாள்*

 அனைத்தும் அறிந்தவர் நாம் என்றால் நமக்கும் மேலே ஆட்சி செய்வது
 அவள் அன்றோ!


அவளுடைய திருவிளையாடல் திருக்கடையூரில் அரங்கேறியஅதிசயத்தை காண்போமே....


 திருக்கடையூர் அபிராமி
தேரினிலே  பவனி வர..
 அபிராமி பட்டரோ
ஆனந்த கூத்தாட..
 தமக்கும் இதில் பங்குண்டோ!
நிலவாக காட்சிதரும்
 அணிகலனோ ஐயமுற ..
ஒளியின்றி உலகேது?
அம்பிகையின் புன்சிரிப்பால் வான்மதியும் அகம் மகிழ.. "அணிகலனும் நிலவான
காரணத்தை அறிவாயோ!
முழு கதையும் கவிதை தனில் வடிப்பதற்கு வழியுண்டோ "
 மேளமோ- தாளமிட
கேட்பீரே -நாதஸ்வரத்தின்
 இசை தனையே..

அம்பிகையின் மேல் கொண்ட
 அளவு கடந்த பக்தியினால்
பட்டரின் பிதற்றல் கேட்டு சோழமன்னன் சரபோஜியோ
" தேய்பிறை திதி
இன்று மதிகாணா -பட்டர்
 தலை கொய்க" என புணர
அதை கேட்ட பட்டரோ
  மனம் கலங்கி  உரி மேலே
நெஞ்சுருக கவிபாட ..
இது என்ன விந்தையடி!
 என் தோழி -காத்தருளும் அம்பிகையின் அணிகலனோ
நிலவாக வானத்திலே*


தம்மை நம்பி வரும் பக்தர்களை சோதனை கொடுப்பாளேயன்றி என்று அம்மையவள் ஒருபோதும் கைவிட மாட்டாள்* என்பதற்கு திருக்கடையூரிலே நடந்த உண்மை சம்பவம் காட்சியன்றோ!

இன்றும் திருக்கடையூரிலே
 தை அமாவாசையன்று
 மிக கோலாகலமாக திருவிழா வண்ணத்தில் அம்பாள்
 மிக அழகாக  ஜொலிகின்றாள்.

அம்மனின் அருள் பெற ஐந்து வழிமுறைகளை காண்போமே..

சிறப்பு -1*   புதிய மலர்- நல்லெண்ணெய் புதிய திரி - புதிய பச்சரிசி கோலம்
புதிய ஜலம் கொண்டுதினமும் விளக்கேற்றுதல் (காலை 4 30 to 6 மணி) அல்லது(மாலை 5 to 6 )_சுபிட்சம் பெற*

சிறப்பு-  2  வெள்ளி தோறும் பித்தளை சொம்பு நீர் நிறைத்து -மஞ்சள் இட்டு  ஒரு ரூபாய் நாணயம் இட்டு மலர் வைத்து  மங்கல அலங்காரம் .
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ*

சிறப்பு-  3  வெள்ளி தோறும் தெருவாசல் பூஜை அறை என வேப்பிலையின் மணம் கமழ  _தோஷ நிவர்த்தி*

 சிறப்பு-  4  அம்மனுக்கு பிடித்தமான பச்சரிசி பொங்கல் இனிப்பு செய்து விசேஷ நாட்களில்  படைத்தல். செல்வம்  பெற*

 சிறப்பு-  5   ஐந்து சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் மஞ்சள் குங்குமம் ஜாக்கெட் பிட் வசதிக்கேற்ப தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுதல் _தீர்க்க சுமங்கலி பவ*


மனதில் உள்ள
இருளினை நீக்கி*
 சிந்தையில் நல்ல
பண்பினை விதைத்து *
ஆற்றல் எனும்
அருளினை அளித்து*
 மனித பிறவியில்
வாழ்ந்தேன் *எனும்
பெருமையை கொடுப்பாயே
 என் தாயே* நின் பாதமே சரணம் சரணம் சரணமம்மா.

வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வு பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம்🌹🍀🌹👇👇👇


Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக