புதன், 19 ஜூன், 2019

விநாயகர் அகவல் பிறந்த கதை

விநாயகர் அகவல் பிறந்த வரலாறு

  நமச்சிவாய வாழ்க-
நாதன் தாழ் வாழ்க*
இமைப்பொழுதும் என் நெஞ்சில்- நீங்காதான் தாழ்
வாழ்க *எனும் மந்திரமே


 உயிரென கொண்டு "உலக வாழ்க்கை இனி வேண்டேன்- கைலாயம் செல்ல மனம் நாடி நின்றேன் -அருள்வாய் நீ ஈசனே " என சுந்தரரோ
வேண்டி நிற்க  ..

வேண்டுதலை
 ஏற்ற எம்பெருமான் சிவபெருமான்
ஐராவதம் என்னும் யானையை அனுப்புகின்றார் .

அகம் மகிழ்ந்த சுந்தரரும் -தம் உயிர்த்தோழர்
 சேரமான் பெருமான் உடன்் வருமாறு அழைக்கின்றார்.


ஆனந்தம் கொண்டு
சேரமானும் குதிரையின்
 மீதேறி , காதில் பஞ்சாட்சரம் ஓதி ஐராவதம் யானையை சுற்றிவர 

அடுத்த நொடி பறந்தனர்  இருவரும்
யானை குதிரையின் மீதினிலே..


இளம் வயது இனி வேண்டேன் என வேண்டி மனம் -உடல் முதுமை
என்னும் முதிர்ச்சி தந்து
உலகெல்லாம் நல்வழிப்படுத்தியவர் ஔவைப் பாட்டி.


தமக்கு அருள்புரிந்த கணபதிக்கு ஔவையார்ஆனந்தம்
அகம் கொண்டு -திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன்
கோவில்  தல விநாயகர்
ஆன பெரிய கணபதிக்கு
பூஜை செய்யும் பொழுதினிலே.. அவ்வழி வந்த சுந்தரரும்
 சேரமானும் கயிலாயம்
வருமாறு அவ்வையாரை  
 அழைக்கின்றனர்.

 
ஔவை மனதில் கைலாயம்
செல்வதற்கு ஆசை எழுகையிலே, "அவசர பூஜை வேண்டாம்
ஔவையே.. முழுமையாக -பொறுமையாக பூஜை முடித்த
 பின்பு கயிலாயத்தில் நீ இருக்க
 யாமே அருள் புரிவேன் " எனும் கணபதியின் அசரீரி ஒலி
 கேட்டு - அகம் மகிழ்ந்த
அவ்வையார் நாவினிலே
 கவியலையோ புரண்டோட-
எழுந்தது தித்திக்கும் முத்தான விநாயகர்அகவல்*

சீத களப- செந்தாமரை பூம்பாதசிலம்பு பலவிசை பாட - பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வண்ண மருங்கில் வளர்ந்தெழெ கெழிப்ப -பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் -வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் -அஞ்சு கரமும் அங்குச பாசமும் -நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்..



அடுக்கடுக்காய் உதிர்ந்த
பாடல் வரிகளை  கேட்டு
அனைவரும் தம்மை மறந்து
நிற்க -பூஜையோ இனிதாக நடந்து முடிந்த அக்கணமே கணபதி விஸ்வரூபம் 
எடுக்கின்றார்.


யானை முகத்தவன்
துதிக்கையிலே ஔவையை
அழைத்துக் கொண்டு பறந்தார் கைலாயம் நோக்கி .


எவ்வளவு இனிமையான
வரலாறு *படிக்கும் போதே
நம் மனதில் ஆனந்த பரவசம்

ஒரு சேர -விநாயகர் அகவலை -சங்கடஹர சதுர்த்திதோறும் படித்து விநாயகரின்அருளைப் பெற்றுசீரும் சிறப்புமாய் வாழ்ந்து வாழ்க்கைபயனை அடைவோம்

சங்கடகர சதுர்த்தி அன்று நாம் முறையாக வழிபடக்கூடிய விரத முறைகள்

https://balakshitha.blogspot.com/2018/09/blog-post.html


திருமணம் விரைவில் கைகூட தெய்வீக பரிகார வழிபாடுகள் 

https://amzn.in/ibYVUJD



Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக