கருப்பான நிறம் கொண்டவரா!
ஜாதியை நினைத்து தாழ்வு மனப்பான்மையா!
வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள் வீட்டில் வளருது கண்டீர்! பிள்ளைகள் பெற்றது பூனை- அவை பேருக்கொரு நிறமாகுமம்.. சாம்பல் நிறமொரு குட்டி -கருஞ் சாந்து நிறமொரு குட்டி -பாம்பு நிறமொரு குட்டி -வெள்ளைப் பாலின் நிறம் ஓரு குட்டி -எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ! இந்த நிறம்சிறி தென்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ! வண்ணங்கள் வேற்றுமை பட்டால் இதில் மானுடர் வேற்றுமை இல்லை. எண்ணங்கள் -செய்கைகள் எல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர் *
நிறங்கள் வேறுபட்டாலும் எண்ணங்களாலும் செய்கைகளாலும் நாம் அனைவரும் ஒன்றே *என்று மிக அழகாக பாடுகிறான் பாரதி .
ஜாதி மத பேதம் கூடாது என்று அன்றே கனவு காணுகின்றான் பாரதி.
இறைவன் ஒருவனே -படிப்பது பகவத் கீதையாக இருக்கலாம் ! குரான் ஆகவும் இருக்கலாம்! ஆனால் இவை அனைத்துமே ஒரு கருத்தை தான் போதிக்கின்றன-
அன்பாய் இரு -அடக்கமாய் இரு
கொடையாய் இரு -கருணையாய் இரு -தெய்வமாய் இரு .
நாம் அனைவருமே இந்திய மண்ணில் பிறந்தவர்கள் தான்.. நம்முடைய உடம்பில் ஓடுவதும் ஒரே ரத்தம் தான்-
தெய்வங்கள் பலவிதம் இருந்தாலும் பலவிதமான தெய்வங்களை வழிபட்டாலும் உணர்வுகள் என்பது அனைவருக்கும் ஒன்றுதான்* வெ
வெவ்வேறு தெய்வங்களை வழிபடுவதால் உணர்வுகள் வெவ்வேறு விதமாக இருப்பதில்லை
பிரம்மம் என்பது ஒன்றுதான்* தெய்வீக வழிபாட்டின் போது நாம் நம்மையே மறந்து தெய்வீக உணர்வோடு ஐக்கியமாகும் போது அனைவருக்கும் ஆனந்தமயமான நிலையில் மனதில் தோன்றும் அந்த உணர்வானதும் ஒன்றுதான்.
சொந்தமாக வீடு மனை அமைய வராக மூர்த்தி வழிபாடு 🙏🌹🍀🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/02/blog-post.html
சொந்தமாக வீடு மனை அமைய வராக மூர்த்தி வழிபாடு 🙏🌹🍀🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/02/blog-post.html
தேவகியின் மகனாக யாதவ குலத்திலே பிறந்து -வளர்ப்பிலே யசோதைக்கு மகனாக ஆயர்பாடியில் வளர்ந்து- கோபிகையின் நெஞ்சங்களில் நிறைந்து- நம்மை ஆட்டுவிக்கும் கண்ணனவன் - இரு தாயின் அன்பிலே பேதமை காண்பானோ !
ஜாதி மதத்தை கடந்து நட்பிற்கு உதாரணமாக வாழ்ந்த ராமபிரான் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை கவிதையிலே காண்போமே..
தாய் கைகேயி பேச்சுக்கு கட்டுப்பட்டு ஸ்ரீராமபிரான் மனைவி சீதா தேவியோடு -தம்பி லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு .
காட்டில் காலத்தை 14 வருடங்கள் கழிப்பதற்காகவந்து கொண்டிருந்தார் .இதை அறிந்த வேடுவ குலத்தை சேர்ந்த குகன் என்பவன் கங்கைக் கரை ஓரமாக ராமன் வரவை எண்ணி காத்துக் கொண்டு இருக்கின்றார்..
ஸ்ரீராமனின் குகனும் சந்தித்த காட்சியை கவிதையிலே காண்போம்..
அரச குல மன்னன் ஸ்ரீராமனை வேடுவ குல மன்னனாகிய குகன் நட்புக் கொள்ள -ஆசைப்பட்டு கங்கை கரை ஓரத்திலே- தேனோடு மீனுடன் -இது தகுமோ !என ஐயத்தோடு காத்திருக்க
அங்குவந்த ஸ்ரீராமனோ கனிவோடு குகனை நோக்குகின்றார்.
"ஜாதி மதம்
நட்புக்குண்டோ- என் அன்பு நண்பனே* மலை மேலே -மர உச்சிதனிலே கொண்ட தேன் போல உயர்ந்ததன்றோ -நம் நட்பு.. அதுமட்டுமா !
மீன் கூட்டம் மிகுந்து வாழும் கடல்தனிலே- அதனினும் ஆழமன்றோ நம் நட்பு !
அதைஅறிந்தே என் நண்பன் மீனும்- தேனும் எனக்களிக்க- இந்த அன்பு என்றும் வேண்டும் என் நண்பா" எனக்கூறி அன்போடு குகனை ஆரத் தழுவிக் கொள்கிறார.்
குலம் பார்த்து வருவதில்லை நட்பு* குணம் பார்த்து வருவதுதான் நட்பு* ஒன்றே குலம் *என வாழ்கின்ற மனதிற்கு ஜாதி மத பேதமை
என்பதேது !
நாம் அனைவரும் ஒரே ஜாதிதான.் இதில் ஜாதி பிரிவுகள் என்பதற்கு இடமேது ! உயர்வு -தாழ்வு என்பது எல்லாமே அவரவர் எண்ணங்களின் வெளிப்பாடுதான் உயர்ந்த எண்ணங்களை உடையவன் மேலோன் -தாழ்ந்த எண்ணங்கள் கொண்டவன் கீழோன்.
தனக்கென இலாது கொடுத்து சிவந்த கைகள் எல்லாம் மேல்சாதி. கைகளில் இருந்தும் கொடுக்க மனமிலாதோர் கீழ் ஜாதி என்பதுதானே உண்மை.
முதலில் ஒன்றை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்..
பிரம்மம் என்றால் என்ன ?ஈஸ்வரன் யார் ?பிரபஞ்சம் என்றால் எது? மாயை என்றால் என்ன? இவற்றுக்கிடையில் என்ன சம்பந்தம்? நான் யார் !எங்கிருந்து வந்தேன் !நான் செய்ய வேண்டியது என்ன ?முதலிய விஷயங்களைப் பற்றிய உண்மை அறிவு இல்லாமல் இருப்பதே- இந்த ஜாதி மத பேதமை பார்ப்பதற்கான காரணம் .
அகங்காரம் -மமகாரம் -பற்று -ஆசை இவைகள் அனைத்தும் விலகி மனிதன் பிரம்ம நிலையை அடையும் போது- நம்முடைய மனதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அடியோடு அழிந்து போகின்றது.
வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரமாகும் . அந்த வாழ்க்கையை பாரதியின் கனவு படி வாழ்ந்து மனித பிறவியில் -உயர்வு தாழ்வு எனும் ஜாதி மத பேதமின்றி வாழ்ந்து மனித பிறவியின் பயனை அடையலாம்.
பால் வடியும் குழந்தையின் முகம் தனிலே- சாதி மத பேதமை பார்ப்போமா !தினம் வணங்கும் தெய்வத்தின் முன்தனிலே - ஜாதி மத பேதமை பார்ப்போமா !அன்பு கனிந்த தாயின் அகம் தனிலே -ஜாதி மத பேதமை பார்ப்போமா !பண்பிலே சிறந்த நம் மனதினிலே
ஜாதி மத பேதமை பார்ப்போமா!
பழையன போய்விடுக -புதியன என் மனதில் தோன்றிய எழுந்திடுக* என்று ஒரு புத்துணர்ச்சி கிடைத்திடவே- புதியதொரு ஜகம் அமைப்போம் புவியெல்லாம் ஒன்றுபட்டு இனிதாக வாழ்ந்திடுவோம்.
ஆழ்ந்து இரு நிமிடம் படிக்க- படித்த பொருளறந்து அனுபவம் பல பெருக..பொருளின் உட்கருத்து பிடித்தால் பலருக்கு பகிர்க .
ஆழ்ந்து இரு நிமிடம் படிக்க- படித்த பொருளறந்து அனுபவம் பல பெருக..பொருளின் உட்கருத்து பிடித்தால் பலருக்கு பகிர்க .
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக