நம் முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடிய அற்புதமான வழிபாடு அமாவாசை வழிபாடு .
தை - மாசி-புரட்டாசி அன்று மாதத்தில் வரக்கூடிய அம்மாவாசை மிக சக்தி வாய்ந்தது ..நம் முன்னோர்களை நினைத்து திதி கொடுப்பது- என்பது அனைவரும் அறிந்ததே..
வீட்டில் இருக்கும் பெண்கள் மிக முக்கியமாக அன்றைய தினத்திலே இந்த வேப்பெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி- தெய்வீக சக்தி நிறைந்த வாழ்க்கை வளம் பெற்று சிறப்பை காணலாம்.
வழிபாட்டு முறை..
அமாவாசை அன்று வழக்கம் போல் நம் முன்னோர்களின் ஆசி வேண்டி படையல் செய்து படைத்த பிறகு..
மாலை நேரத்தில் செய்யக்கூடிய கல்லுப்பு வேப்பெண்ணை அகல் தீப வழிபாடு ..
மாலை ஆறு மணிக்கு விளக்கேற்றிய பிறகு - தாம்பாளத் தட்டில் மஞ்சல் குங்குமம் வைத்து கல் உப்பினை நிறைத்து தட்டில் மேல்-
ஒரு பெரிய அகல் வைத்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு வேப்பெண்ணை ஊற்றி பஞ்சு கொண்ட திரி கொண்டு விளக்கேற்றி..
நம் குல தெய்வத்தை முன்னோர்களை நினைத்து வாழ்க்கை வளம் பெற்று சிறப்பாக அமைவதற்கு வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டும் -என மனதார வேண்டிக்கொண்டு ..
அந்ததீபத்தை எடுத்துக்கொண்டு- வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் மிக பொறுமையோடு சுற்றி வந்து வைக்க வேண்டும் .
(கிழக்கு பக்கம் பார்த்தவாறு தீபம் இருக்கவேண்டும்)
தீபம் முழுமையாக எரிந்த பிறகு அணைந்துவிடும். மறுநாள் காலையில் -அரசங் குச்சி வேப்பங்குச்சி அனைத்தும் கொண்ட ஓமசமந்தி எனகடைகளில் கிடைக்கும். அவற்றை முன்பே வாங்கி வைத்துக் கொள்ளவும் .
வீட்டின் பின்புறம் ஒரு சட்டியில் ஹோமசமந்தியை ஒரு சிறு கற்பூரம் வைத்து ஏற்றி -அது நன்றாக எரிகின்ற போது அதில் தீபம் ஏற்றிய தட்டில் உள்ள கல்லுப்புக்களை கொட்டவேண்டும்.
(அல்லது) வெளியே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து -அதில் கல்உப்பை கொட்டி வெளியே கால் படாத இடத்தில் போட்டு வைத்தால் நம் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர் மறை சக்திகளும் மறைந்து நமக்கு சாதகமாக பலன்கள் அனைத்தும் நிறைவேறும்.
நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள்
முழுமையாக அழிந்துவிடும். அதன் பிறகு தலைகுளித்து வீட்டை சுத்தப்படுத்தி விளக்கேற்றி தலைவாசல் துடைத்து மஞ்சளிட்டு தீபம் ஏற்றுதல் சிறப்பு.
நம்முடைய வாழ்க்கையில் உள்ள கண் திருஷ்டிகள் நமக்கு துன்பத்தை தரக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் சிறப்பான ஒரு நல்ல முன்னேற்றத்தை நாம் காணலாம்.
கல்லுப்பு வேப்பெண்ணை தீப வழிபாட்டின் சிறப்பு..
சிறப்பு -1வேப்ப மரத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய் -தெய்வீக சக்தி என்றும் நிறைந்திருக்கும்.
சிறப்பு -2 வேப்பெண்ணையில் உள்ள மணமானது நம்முடைய சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கக்கூடியது .
சிறப்பு 3நம்முடைய உடம்பில் இருக்கும் பிணிகளை அகற்றக் கூடியது.
சிறப்பு -4 மனதிலே உள்ள தேவையில்லாத பயத்தினை போக்கி
ஒரு புத்துணர்ச்சியை கொடுக்க கூடிய சக்தி வேப்பெண்ணை தீபத்திற்கு உண்டு .
சிறப்பு -5 கண் திருஷ்டி என்று சொல்லக்கூடிய திருஷ்டிகள் ஏவல் சூனியம் அனைத்தும் விலக இந்த வேப்பெண்ணை கல்லுப்பு தீபம் ஏற்றுதல் மிக சிறப்பு
நம்முடைய வாழ்க்கையில் துன்பத்தை விலக்கி குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு அபரித சக்தி இந்த வேப்பெண்ணை தீபத்திலே உண்டு என்பதை அறிந்து அமாவாசை அன்றும் தீபம் ஏற்றி வாழ்க்கையில் வளத்தை காண்போம்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக