வாழ்வின் தலைவிதியை மாற்றக்கூடிய
அமாவாசை முடிந்து மூன்றம் பிறை பார்க்கும் வழிபாடு
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி -தந்நோ சந்திர ப்ரசோதயாத்
மலர் மலர்ந்தால் மாலையாகி பயனளிக்கும் -அதுபோல சிந்தையை குளிரவைக்கும் இவ்வுரை தெய்வத்திற்கு மாலையாய் சூட்டுகிறேன் . இம்மாலை நீர் கண்டு மெய் உருகி -பாமாலையில் பயன் பெறுக
தாயின் மடியில் அமர்ந்து அமுதுண்டு வானில் நிலவைப் கண்டு ரசித்த காலம் அன்று- பாட்டி வடை சுடுவது தாத்தா கோல் ஊன்றி வருவது என நிலவுக்குள் ஆயிரம் கதைகள் ஒளிந்து
கொண்டிருக்க ..
அம்மாவிடம் ஒவ்வொன்றாக சுவாரசியமாக கதை கேட்டு இனிக்கும் காலம் அன்று..
இன்றைய தலைமுறைகளோ கம்ப்யூட்டர்கேம்விளையாடிக்கொண்டு உணவின் ருசி அறியாது உண்ணும் காலம் இன்று..
அதை சற்றே மாற்றி மாதத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு மொட்டை மாடிக்குச் சென்று நிலாவைப் பார்த்து வணங்கக்கூடிய அற்புத நான் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரக்கூடிய வளர்பிறை எனும் மூன்றாம் பிறை .
அனைத்து வரங்களையும் கேட்டதும் கொடுக்கும் சிவபெருமானின் தலையிலே மகுடமாய்..
காஞ்சி காமாட்சியின் அழகுக்கு மெருகூட்டும் அம்சமாய் காட்சி தரும் மூன்றாம் பிறை சந்திரனின் பார்வை நம் மீது பட்டால் நம்முடைய தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கை பலம் பெறும்.
ஒற்றுமை எனும் வார்த்தைக்கு ஓராயிரம் கோடி மகிழ்வுகள் அகத்தினில் புகும் பாக்கியம் ஒருசிலருக்கு மட்டும்தான் கிடைக்கும்.
அந்த பாக்கியம் கொண்டவராக நீங்கள் இருங்கள் .
பிரதோஷம் அன்று முறையாக விரதம் இருக்கும் முறை 🌹🙏🍀🌹🙏🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/1.html
வாழ்வில் தோஷம் விலக- குடும்பத்தில் சுபிட்சம் பெருக கல்உப்பு பரிகாரம்🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html
மூன்றாம் நாள் பிறை தோன்றி வளர்ந்து முழு பௌர்ணமி நிலவாக காட்சி தருவது போல -நம் வாழ்வில் உயர்ந்து வளர்வதற்கு மூன்றாம் பிறை தரிசனம் மிகுந்த பலன் கொடுக்கும் .
அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள்..
சிறப்பு -1 நம்முடைய மனம் சுத்தமாகும் சிறப்பு -2 புத்துணர்ச்சி கிடைக்கும் சிறப்பு -3 முகப்பொலிவு கிடைக்கும் சிறப்பு -4 ஒற்றுமை மேம்படும்
சிறப்பு -5செல்வம் பெருகும் வாழ்க்கை மேன்மை பெறும்.
வீட்டில் இருந்தவாறே எளிமையாக வழிபடும் முறை ..
மூன்றாம் பிறை அன்று மாலை விளக்கேற்றவும். ஊதுபத்தி நறுமண வத்திகள் ஏற்றி வைக்கவும்
6 -45 மணிக்கு மேல் பூஜை அறையில் வைத்து ஒரு கற்கண்டு பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள் .
மொட்டை மாடிக்கு குடும்பத்தோடு அனைவரும் செல்வது சிறப்பு.
மூன்றாம் பிறை தரிசனம் காண்பது மிக உத்தமம்.
சந்திரனை மேகம் மறைத்தாலும் மேற்கு திசை நோக்கி அமர்ந்து பயபக்தியோடு மூன்றாம் பிறை சந்திரனை நினைத்து வழிபட சந்திர பகவானின் சக்தி நமக்கு கிட்டும்.
மேற்கு நோக்கி அனைவரும் அமர்ந்து 'ஓம் சந்திர மௌலீஸ்வரா போற்றி' என 108 போற்றி கூறுங்கள் .மனம் முழுதும் சந்திர பகவானை நினைத்து கொள்ளுங்கள் .முடிவில் அம்மனை- நம் குல தெய்வத்தை நினைத்து உங்கள் வேண்டுதலை வையுங்கள்.
மனம் உருக வேண்டி கொண்டால் நினைத்த ட காரியம் ஜெயம் ஆகும்.
எப்பொழுதும் பூஜை அறையில் ஒரு டப்பாவில் கற்கண்டு இருப்பது சிறப்பு.
சொந்த மனை வீடு அமைவதற்கு ஏற்றும் தெய்வீக வழிபாடு பரிகார ஸ்தலங்கள் அமேசானில் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள் 🌹🍀🌹🙏🌹👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
தெய்வத்திற்கு உகந்தது- தேனினும் இனியது -கல்லினும் கொடும் மனதையும் கரைய வைக்கும் பிரசாதம் கற்கண்டில் உண்டு.
அந்த கற்கண்டை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரசாதமாக கொடுங்கள் .
பிறகு வீட்டிற்கு வந்து நம் முகத்தை பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடியில் முகம் பார்க்கவும்.
என்றும் அகம் குளிர- அனைத்தும் இனிதாக- முகம் ஒளி பெற- வாழ்க்கை வளம்பெற -செல்வ கடாட்சம் கைகூட- வேண்டி வழிபடும் அற்புதமான வழிபாடு இந்த மூன்றாம் பிறை நிலவு பார்த்து கண்ணாடியில் முகம் பார்க்கும் வழிபாடு .
பூஜை அறையிலே தங்கம் அல்லது வெள்ளி பொருள் பார்த்து வணங்கவும் .
உங்கள் இந்த எளிமையான விரதத்தை தொடர்ந்து 5 மூன்றாம் பிறை பார்த்து தரிசியுங்கள் .
நீங்கள் நினைத்தது நடக்கும். எண்ணங்கள் நிறைவேறும். மகிழ்ச்சி கிட்டும். செல்வங்கள் பெருகும் -வாழ்க்கையில் வளம் காணலாம்.
தங்கள் கருத்தை பதிவு செய்க
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக