நம் உடலை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தண்ணீர் சிகிச்சை
ஆலமரம் கொடுக்கும் நிழல் போல திருமணம் எனும் பந்தத்தில் நுழைந்துவிட்டால் பொறுப்புகள் தாங்கி நிற்கும் ஆலமரமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க..
இன்றைய சமூக சூழலில் தம் உடலை மட்டுமல்ல ..தம் குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை குடும்பத்தை பொறுப்பில் வைத்திருக்கும் தம்பதியருக்கு நிச்சயமாக உண்டு .
அந்த தம்பதியினர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் அகத்தினில் ஏற்று- அதன்படி செயல்பட்டு ..
தாமரை மலரில் ஒட்டாத நீர் போன்று நம் உடலில் எந்தவித தொற்றும் ஏற்படாத வண்ணம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
சாதாரணமாக நாம் வெளியில் போய் வந்தால் நெஞ்சிலே ஏதோ ஒரு நெருடல் -எச்சில் முழுங்க ஏதோ ஒரு அரிப்பு லேசாக வலி -இல்லாமல் இருந்தாலும் இருப்பதுபோன்ற ஒரு பிரமை.. கொரோனா தொற்று வந்து விட்டதோ என மனதில் சின்ன பயம்..
இந்த சூழலில் நாம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையான பலன் நமக்கு கிடைக்கும். எப்படிப்பட்ட தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
சிறப்பு -1 தண்ணீர் சிகிச்சை
1 -தினம் 15 நிமிடத்திற்கு ஒரு முறை சூடான தண்ணீர் அருந்துங்கள்.
2- காலை 10 மணி அளவில் ஒரு நபருக்கு ஐந்து வித காய்கறிகள் (ஒவ்வொரு துண்டுகள் மட்டும் போதுமானது) மிக்ஸியில் அரைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டி ..
உப்பு -பெப்பர் -லெமென் இரண்டு சொட்டு விட்டு அருந்துங்கள்.
3 - மாலையில் நீராவி பிடிப்பது நல்ல பலன் கிடைக்கும்.
நொச்சி இலை -வேப்பிலை -கல்லுப்பு -மஞ்சள் தூள் -துளசி- கற்பூரவள்ளி- கொத்துமல்லி என நமக்கு கிடைக்கும் பொருட்களை இரண்டு லிட்டர் தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து போர்வையால் உடலை முழுமையாக மூடிக்கொண்டு தொண்டை முதல் மார்பு வரை அனைத்து பாகமும் நீராவி படுமாறு மூச்சை இழுத்துவிட்டு பிடியுங்கள்.
இரவு படுக்கப் போகுமுன் கல்லுப்பு சேர்த்து சூடு செய்து தொண்டையில் நன்றாக படுமாறு வாய் கொப்பளியுங்கள்.
தினமும் இந்த முறையை பின்பற்றினால் எந்தவிதமான நோய் தொற்று கிருமிகள் நம் மீது வராத வண்ணம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீரிலே இருக்கக்கூடிய ஹைட்ரேட் பொருளானது நம்முடைய உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து- தேவையற்ற கிருமிகளை அழித்து நம் உடலை பாதுகாக்கும்.
கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் அற்புதமான தண்ணீரை கொண்டு நோய்நொடி இல்லாது வாழ்ந்து வாழ்க்கையில் இனிது காண்க.
இன்றைய சிந்தனை..
ஆலமரமாக குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கக்கூடிய அனைவரும் நினைவில் கொள்க..
மிக உயர்ந்து நிற்கும் ஆலமரத்தில் விழுதுகளாக இருக்கும் சொந்தபந்தங்கள் நிறைந்த வாழ்வு தனில்- காற்றடித்து உதிரும் இலைகள் என நினைத்து கசப்பு அனுபவத்தைக் உதறிவிட்டு -பசுமை எனும் இலைதனை தாங்கி நிற்கும் மரம் போல ..
பசுமை என்னும் இனிய அனுபவத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு சொந்தங்களை அன்போடு அரவணைக்க கற்றுகொள்க.
அந்த குடும்பம் சிந்தாது சிதறாது கிடைத்த தேன் கிண்ணம் போன்று முடிவில் வாழ்க்கை இனிதாக அமையும் என்பதை நினைவில் கொள்க.
எடுத்ததற்கெல்லாம் கோபித்துக்கொண்டு உறவுகளை உதறி தள்ளாதீர் தள்ளாதீர்- என் இனிய உறவுகளே உண்மையான நேசம் உள்ள உம் நெஞ்சில் முள் குத்திய வலிகள் பல இருந்தாலும் உதட்டோர புன்னகையை விட்டு விடாதீர்..
விடாதீர் என இருந்துவிட்டால் உறவுகள் பலம்பெற்று உன் முதுமை காலத்தில் உனக்கே ஆலம் விழுதுகள் போல் உமை காத்திடுமே காத்திடும் என்றென்றும் என உணர்ந்து வாழ்க வாழ்க வாழ்ந்திடு என் மனமே.
கொரோனா எனும் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முக்கியமான உணவு முறைகள்🌹🍀🌹👇
தங்கள் கருத்துக்களை பதிவு செய்க
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக